ஆறாம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவம் அலகு 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறாம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவம் அலகு 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                 TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்


அலகு 2 நீர்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Question 1.

உலகில் உள்ள மொத்த நீரில் 97% ____ ஆகும்.

அ) நன்னீ ர்

ஆ) தூயநீர்

இ) உப்புநீர்

ஈ) மாசடைந்த நீர்

விடை: 

இ) உப்புநீர்

Question 2.

பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

அ) ஆவியாதல்

ஆ) ஆவி சுருங்குதல்

இ) மழை பொழிதல்

ஈ) காய்ச்சி வடித்தல்

விடை:

ஈ) காய்ச்சி வடித்தல்



Question 3.

பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?

i) நீராவிப்போக்கு           ii) மழைபொழிதல்

iii) ஆவி சுருங்குதல்      iv) ஆவியாதல்

அ) ii) மற்றும் iii)      ஆ) ii) மற்றும் iv)

இ) i) மற்றும் iv)         ஈ) i) மற்றும் ii)

விடை: இ) i) மற்றும் iv)

Question 4.

நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

அ) பனி ஆறுகள்                    ஆ) நிலத்தடிநீர்

இ) மற்ற நீர் ஆதாரங்கள்     ஈ) மேற்பரப்பு நீர்

விடை: ஆ) நிலத்தடிநீர்

Question 5.

வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில்

அ) வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்

இ) வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

ஈ) அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

விடை:

ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.



II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ______ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.

விடை:

3%

Question 2.

நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ____ என்று பெயர்.

விடை:

ஆவியாதல்

Question 3.

நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _____ கட்டப்படுகிறது.

விடை:

அணை

Question 4.

ஆறுகளில் பாயும் நீரின் அளவு ____ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்

விடை:

மழை


Question 5.

நீர் சுழற்சியினை _____ என்றும் அழைக்கலாம்.

விடை:

ஹைட்ராலிஜிக்கல் சுழற்சி


III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை.

விடை:

தவறு – ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக உள்ளன.

Question 2.

நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.

விடை:

தவறு – கடல் நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் முகத்துவாரம் எனப்படும்.

Question 3.

சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்.

விடை:

தவறு – அனைத்து வெப்ப மூலங்களாலும் ஆவியாதல் நிகழும்.

Question 4.

குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.

விடை: சரி – உறைதலால் புற்களின் மீது பனி உருவாகும்.




Question 5.

கடல்நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.

விடை:

தவறு – கடல்நீரை நேரடியாகப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது.




V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

1. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.

2. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.

3. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.

4. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது..

5. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

6. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.

7. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.

8. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

விடை:

1. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.

2. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

3. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த்திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாகும்.

4. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிற

5. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.

6. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.

7. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.

8. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

VI. ஒப்புமை தருக.

Question 1.

மக்கள் தொகைப் பெருக்கம் : நீர் பற்றாக்குறை :: மறு சுழற்சி : _____

விடை:

நீர் மேலாண்மை


Question 2.

நிலத்தடிநீர் : ____ : மேற்பரப்பு நீர் : ஏரிகள்

விடை:

கிணறு






 


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...