இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஜூலை, 2022

இலக்கணம்

 TNPSC CHANNEL






இலக்கணம்:


மொழியை பிழையின்றி பேசவும் எழுதவும் துணைபுரிவது இலக்கணம் ஆகும்

தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,

1. எழுத்து

2. சொல்

3. பொருள்

4. யாப்பு

5. அணி






பெயர்ச் சொல்லின் வகையறிதல்

பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். எடுத்துக்காட்டு -மரம், செடி, பூ, சூரியன். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.


1. பொருட்பெயர்


பொருளை குறிக்கும் பெயர் பொருட்பெயர். எடுத்துக்காட்டு -மரம், செடி, மின்விசிறி, நாற்காலி.


2. இடப்பெயர்


இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர். எ.கா. -உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை.


3. சினைப்பெயர்


சினை என்றால் உறுப்பு என பொருள்படும். உறுப்பை குறிக்கும் பெயர் சினைப்பெயர்.


மரம் -பொருட்பெயர்.

இரை, தண்டு, வேர் போன்றவை அதன் உறுப்புகள். எனவே இவை சினைப்பெயர்கள் ஆகும்.


உடல் -பொருட்பெயர்


கண், காது, மூக்கு, கை என்பவை சினைப்பெயர்கள்.


4.  காலப்பெயர்


காலத்தை குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.


திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை ஆகியவை காலப்பெயர்கள்.


5. பண்புப் பெயர்


ஒரு பொருளின் பண்பு அல்லது தன்மை அல்லது அதன் குணத்தை குறிப்பது பண்புப்பெயர்.


எடுத்துக்காட்டு -

பச்சை இலை, சிவப்பு மை பண்புப்பெயர். உ, கு, றி, று, அம், சி, பு, ஜ, மை, பம், நர் என்ற விகுதியுடன் முடியும் (மை அதிகமாக இடம்பெறும்.)


6. தொழிற்பெயர்



தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர்.

எ.கா. -படித்தல், ஓடுதல், நடத்தல், தல், அல், அம், ஐ, கை, வை, பு, வு, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆணை, மை, து என்ற விகுதியுடன் முடியும்.





*******


வாக்கிய வகை அறிதல்

ஏதாவதொரு சொற்றொடரைக் கொடுத்து இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டுபிடி என்ற வகையில் வினாக்கள் அமையும்.

தனி வாக்கியம்

தொடர் வாக்கியம்

கலவை வாக்கியம்

கட்டளை வாக்கியம்

வினா வாக்கியம்

உணர்ச்சி வாக்கியம்

செய்தி வாக்கியம்

வியங்கோள் வாக்கியம்

எதிர்மறை வாக்கியம்

உடன்பாட்டு வாக்கியம்

நேர்க்கூற்று வாக்கியம்

அயற்கூற்று வாக்கியம்

1. தனி வாக்கியம்

ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தால் அது தனி வாக்கியம்

(எ.கா) பாண்டியர் முத்தமிழ் வளர்த்தனர்

சேர, சோழ, பாண்டியர் தமிழ் வளர்த்தனர்

பாரி வந்தான்.

பாரியும் கபிலனும் வந்தனர்.

2. தொடர் வாக்கியம்

தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்.

ஒரு எழுவாய் பல பயனிலைகளைக்கொண்டு முடியும்.

தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வந்து இடையில் ஆகையால்,அதனால் எனும் இணைப்புச் சொற்கள் வெளிப்படையாக வரும்.

பல வினையெச்சங்களைக் கொண்டு இறுதியில் வினைமுற்றைக் கொண்டு முடியும்.

(எ.கா) ராமன் திருச்சி சென்றான்; மலைக்கோட்டை ஏறினான்; கடவுளை வழிபட்டான்.

நாகம் இடியோசை கேட்டது; அதனால் நடுங்கியது.

தமிழரசி போட்டியில் பங்கேற்றாள்; வெற்றி பெற்றாள்; பரிசு பெற்றாள்.

3. கலவை வாக்கியம் :

கலவை வாக்கியம் என்பது, முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும்.(அல்லது)

ஓர் முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல சார்பு வாக்கியங்கள் இணைந்து வருமாயின் அது கலவை வாக்கியம் எனப்படும்

‘ஓ’ ‘என்று’ ‘ஆல்’ என்ற இணைப்புச் சொற்கள் வரும்.

(எ.கா) மேகம் கருத்ததால் மழை பெருகியது.

யார் திறமையாகப் படிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவர்.

தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்று, அதன்வழி நடந்து, வாழ்க்கையில் முன்னேற அனைவரும் முயல வேண்டும்.

நாங்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமென்று ஆசிரியர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.

4.கட்டளை வாக்கியம்

பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்து வருமாயின் அது கட்டளை வாக்கியம்.

இதில் இறுதிச் சொல் வேர்ச்சொல்லாக வரும்.

(எ.கா) அறம் செய்.

தண்ணீர் கொண்டு வா.

இளமையில் கல்.

திருக்குறளைப் படி

5. வினா வாக்கியம்

வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம்.

வினா எழுத்துக்களாவன; ஆ, எ, ஏ, ஓ, யா ஆகும்.

(எ.கா) இது சென்னைக்கு செல்லும் வழியா?

நீ மனிதனா? - ஆ

நீ தானே? - ஏ

உளரோ? - ஓ

6. உணர்ச்சி வாக்கியம்

மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு வாக்கியம் அமையுமாயின் அது உணர்ச்சி வாக்கியம்

(எ.கா) ஆ! தாஜ்மஹால் என்ன அழகு!

ஐயகோ! நேருஜி மறைந்தாரே!

7. செய்தி வாக்கியம்

ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அமைவதே செய்தி வாக்கியம்

(எ.கா) உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது

மாணவர்கள் சீருடையில் வர வேண்டும்

8. வியங்கோள் வாக்கியம்

கட்டளை, வேண்டுகோள், வாழ்த்துதல், வைதல், ஆகியவற்றுடன் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியமே வியங்கோள் வாக்கியம்

(எ.கா) தமிழை முறையாகப் படி - கட்டளை

நீடுழி வாழ் - வாழ்த்துதல்

தீயென ஒழி - வைதல்

நல்ல கருத்தினை நாளும் கேள் - வேண்டுகோள்

9.எதிர்மறை வாக்கியம்

ஒரு செயல் அல்லது தொழில் நிகழாமையைத் தெரிவிப்பது எதிர்மறை வாக்கியம் ஆகும்.

(எ.கா) அவன் கல்வி கற்றிலன்

உடன்பாடு - எதிர் மறை

அவன் சென்றான் - அவன் சென்றிலன்

ஆமைகள் வேகமாக ஓடும் - ஆமைகள் வேகமாக ஓடா

புலி புல்லைத் தின்னும் - புலி புல்லைத் தின்னா

மொழி இலக்கிய வளம் உடையது - மொழி இலக்கிய வளம் அற்றது

10. உடன்பாட்டு வாக்கியம்

ஒரு செயல் அல்லது தொழில நிகழ்வதைத் தெரிவிப்பது உடன்பாட்டு வாக்கியம் ஆகும்.

(எ.கா) வயலில் மாடுகள் மேய்ந்தன

வகுப்பில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.

11.நேர்க்கூற்று வாக்கியம்

ஒருவர் சொன்ன செய்தியை பொருள் மாறாமல் அவர் சொன்னபடியே சொன்னால் அது நேர்க்கூற்று வாக்கியம் எனப்படும்.

அவர் இவரிடம் சொன்ன செய்தியை மேற்கோள் இட்டுக் காட்ட வேண்டும்.

(எ.கா) வளவன்,"நான் ஊருக்குச் செல்கிறேன்" என்றான்.

12.அயற்கூற்று வாக்கியம்

ஒருவர் சொன்ன செய்தியை கேட்டு அவன் இப்படியாகச் சொன்னான் என்று மற்றொருவரிடம் கூறுவது அயற்கூற்று வாக்கியம் ஆகும்.

(எ.கா) வளவன் தான் மதுரை செல்கிறேன் என்று சொன்னான்.


    *******



சில சொற்களும் அதனோடு வேர்ச்சொற்களும் பின்வருமாறு:

சொற்கள் வேர்ச்சொற்கள்

பற்றினால் பற்று

ஒடாதே ஒடு

அகன்று அகல்

பார்த்தான் பார்

அறுவடை அறு

கெடுத்தாள் கெடு

இயக்கிடு இயக்கு

பாடிய பாடு

கேட்க கேள்

உற்ற உறு

உருக்கும் உருக்கு

எஞ்சிய எஞ்சு

ஒட்டுவிப்பு ஒட்டு

கண்டனன் காண்

நினைத்தேன் நினை

கொடுதீர் கொடு

ஓடாது ஓடு

கற்றேன் கல்

காத்தவன் கா

காட்சியில் காண்

கொடாமை கொள்

தட்பம் தண்மை

மலைந்து மலை



*******



.


வினை முற்று

வினை முற்று என்றால் என்ன ?

வினைமுற்று என்பது,

தொழிலையும் (நடந்தான் - இதில் நடக்கின்ற action ஐ உணர்த்துகிறது) ,

காலத்தையும் ( நடந்தான் -இறந்த காலம்) உணர்த்த வேண்டும்.

திணையை கூற வேண்டும் ( நடந்தான் என்பது 'உயர்திணை') ,

பால் காட்டும் விகுதியோடு சொல்லானது முற்று பெற்றிருக்க வேண்டும். ( நடந்தான் - ஆண்பால்)

உதாரணம் :

இருந்தான், நடந்தான், கற்றான், வாழ்ந்தாள். அரும்பியது, தளர்ந்தது

{பொதுவாக வினைமுற்றுகள் ர், ன, ன்,து என்ற எழுத்துகளில் முற்று பெறும்.)

வினையெச்சம்

வினையெச்சம் என்றால் என்ன ?

முடிவு பெறாத வினைச் சொல் வினையெச்சம் ஆகும்.

உதாரணம் :

நடந்து, கண்டு, படித்து.

வினையாலணையும் பெயர்

வினையாலணையும் பெயர் என்றால் என்ன ?

இலக்கண விளக்கம் :

"ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உறுப்பு ஏற்றும், ஏற்காமலும் வேறொரு பயனிலையைக்கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் ஆகும்."

வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வரும்.


உதாரணம் :

"கொடு" என்பதன் வினையாலணையும் பெயர் எது ?

அ.கொடுத்து

ஆ.கொடுத்த

இ.கொடுத்தல்

ஈ.கொடுத்தவள்


விடை : ஈ.கொடுத்தவள்

(மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வந்துள்ளது)

ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வினையாலணையும் பெயர் என்றாலே ஏதோ ஒருவகையில் "அணைத்து" வருவது போல் வரும், எ.கா. அறிந்தவன், படித்தவர்

தொழிற்பெயர்

தொழிற்பெயர் என்றால் என்ன ?

ஒரு தொழிலை செய்வதைக் குறிப்பது தொழிற்பெயர். பாடுதல், ஆடுதல், நடித்தல்.. பொதுவாக தொழிற்பெயர்கள் தல், அல், கை என்றவாறு முடியும்.


உதாரணம் :

'வாழ்' என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எது ?

அ.வாழ்க

ஆ.வாழ்வீர்

இ.வாழ்ந்தார்

ஈ.வாழ்தல்

விடை :

ஈ. வாழ்தல் (தல் என முடிந்துள்ளது.)



*******








தன்வினை வாக்கியம்

 

ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.


எ.கா :  

முருகன் திருந்தினான்.

பாடம் கற்றேன்.

நான் நேற்று வந்தேன்.

கவிதா பொம்மை செய்தாள்.

நண்பர் வீட்டில் விருந்து உண்டான்.

மன்னர் நாட்டை ஆண்டார்.

கலையரசி பாடம் கற்றான்.

கண்ணன் இலக்கணம் பயின்றாள்.

செல்வி பாடம் கற்றாள்.

பிறவினை

ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.


எ.கா :  

ஆசிரியை பாடம் கற்பித்தார்.

அவன் திருத்தினான்.

ராமன் பாடம் படிப்பித்தான்.

கோதை நடனம் ஆட்டுவித்தாள்.

ஆசிரியர் பாடம் பயிற்றுவித்தார்.

கலையரசி பாடம் கற்பித்தான்.

நண்பனை விருந்து உண்பித்தேன்.

கவிதா பொம்மை செய்வித்தாள்.

தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்.







செய்வினை:

எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். செயப்படு பொருளோடு ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும்.

எ.கா: அம்மு வேலை(ல்+ஐ) செய்தாள்

‘ஐ’ உருபு மறைந்தும், வெளிப்பட்டும் வரும்.

செயப்பாட்டு வினை:

செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். எழுவாயோடு ‘ஆல்’ என் மூன்றாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். பயனிலையோடு ‘படு’, ‘பட்டது’ என்னும் சொற்களைச் சேர்க்க வேண்டும். (படு துணை வினை)

எ.கா: பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டது.




✅ PDF DOWNLOAD


மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்







திங்கள், 6 ஜூன், 2022

இலக்கணம் - பொது

 இலக்கணம் - பொது


இருதிணை


ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.


ஐம்பால்


பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால்-பகுப்பு, பிரிவு). இஃது ஐந்து வகைப்படும்.


உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது. அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.


உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்


வீரன், அண்ணன், மருதன் ஆண்பால் மகள், அரசி, தலைவி பெண்பால் மக்கள், பெண்கள், ஆடவர் - பலர்பால்


அஃறிணைக்குரிய பால் பகுப்புகள்


அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.


எ.கா. யானை,புறா, மலை


அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.


எ.கா. பசுக்கள், மலைகள்


மூவிடம்:


தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.





வழு வழாநிலை - வழுவமைதி


இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.


இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.


இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் வழு எனப்படும். அவ்வாறு இலக்கணப் பிழைகள் இல்லாதிருப்பின் அவை வழாநிலை எனப்படும்.








வழுவமைதி


இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.


1. திணை வழுவமைதி


"என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.


2. பால் வழுவமைதி


"வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.


3. இட வழுவமைதி


மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது,"இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்" என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.


4. கால வழுவமைதி


குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.


இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.


5. மரபு வழுவமைதி


"கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்" - பாரதியார்.


குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.




மேலும் அறிய...Click Here








TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...