ஆறாம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவம் அலகு 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறாம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவம் அலகு 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

               TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                    மூன்றாம் பருவம்

அலகு 4 நமது சுற்றுசூழல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.

அ) குளம்       ஆ) ஏரி

இ) நதி             ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

Question 2.

உற்பத்தியாளர்கள் எனப்படுவை.

அ) விலங்குகள்

ஆ) பறவைகள்

இ) தாவரங்கள்

ஈ) பாம்புகள்

விடை: இ) தாரவங்கள்

Question 3.

உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு

அ) நெகிழி

ஆ) சமையலறைக் கழிவுகள்

இ) கண்ணாடி

ஈ) அலுமினியம்

விடை:

ஆ) சமையலறைக் கழிவுகள்

Question 4.

காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

அ) மறு சுழற்சி

ஆ) மீண்டும் பயன்படுத்துதல்

இ) மாசுபாடு

ஈ) பயன்பாட்டைக் குறைத்தல்

விடை: இ) மாசுபாடு

Question 5.

களைக்கொல்லிகளின் பயன்பாடு _____ மாசுபாட்டை உருவாக்கும்.

அ) நில மாசுபாடு

ஆ) நீர் மாசுபாடு

இ) இரைச்சல் மாசுபாடு

ஈ) அ மற்றும் ஆ

விடை: ஈ) அ மற்றும் ஆ


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

தாவரங்களை உண்பவை ———- நிலை நுகர்வோர்கள் ஆகும்.

விடை: முதல்

Question 2.

சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _____ காரணிகள் ஆகும்.

விடை:

காலநிலைக்

Question 3.

______ என்ற நிகழ்வின் மூலம் கழிவுப் பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.

விடை:

மறு சுழற்சி

Question 4.

நீர் மாசுபாடு மனிதனுக்கு _____ நோயை உருவாக்குகிறது.

விடை:

தீங்கு விளைவிக்கும்

Question 5.

3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல் _____ மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது.

விடை:

மீண்டும் பயன்படுத்துதல்


III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசிபிக் பெருங்கடல் ஓர் எடுத்துக்காட்டாகும்.

விடை :

சரி.

Question 2.

பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.

விடை:

சரி.

Question 3.

மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு எடுத்துக் காட்டு

விடை: தவறு – கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும் உயிரினச் சிதைவுக்கு உள்ளாகும் கழிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Question 4.

அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.

விடை :

தவறு – அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால், நீர் நில மாசுபாடு உருவாகும்.


Question 5.

பள்ளியின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.

விடை :

தவறு – திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்க வேண்டும்.






V. சரியான வரிசையில் எழுதி, உணவுச் சங்கிலியை உருவாக்கு.

Question 1.

முயல் → கேரட் → கழுகு → பாம்பு

விடை:

கேரட் → முயல் → பாம்பு → கழுகு

Question 2.

மனிதன் → பூச்சி → ஆல்கா → மீன்

விடை:

ஆல்கா → பூச்சி → மீன் → மனிதன்


     




TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...