செவ்வாய், 18 ஜூலை, 2023

TNPSC EXAM NOTIFICATION



TNPSC application  tnpsc.gov.in; apply now 

Eligible candidates can apply for the vacancies on the official website tnpsc.gov.in

Tamil Nadu Public Service Commission  has commenced the online application process for the posts of Assistant Training Officer (Stenography-English) in Tamil Nadu Employment Training Subordinate Service and Junior Technical Assistant in Textile Department in Tamil Nadu General Subordinate Service today, July 18. Eligible candidates can apply for the vacancies on the official website  till August 16. Application correction window will be open from August 21 to 23.

The recruitment drive aims to fill up a total of 7 vacancies out of which 2 vacancies are for Assistant Training Officer (Stenography-English) and 5 vacancies are for Junior Technical Assistant. The recruitment exam is scheduled to be conducted on October 5 and 6 in Computer Based Test (CBT) mode.

Eligibility criteria

Age limit : Candidates should be between the age of 18 years and 37 years, as on July 1, 2023. Upper age limit relaxations applicable


TNPSC EXAM NOTIFICATION 

தமிழ்   க்ளிக் செய்யுங்கள்

English Click Here


விண்ணப்பிக்க ✅ க்ளிக் செய்யுங்கள்

எட்டாம் வகுப்பு செய்யுள் பகுதி இயல் 1

           

 


எட்டாம் வகுப்பு

தமிழ்

செய்யுள் பகுதி (இயல் 1)

ஓடை



 மனித வாழ்வு இயற்கையோடு இயைந்தது. கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும் பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை. அவ்வாறு மனத்திற்கு இன்பமூட்டும் கவிதை ஒன்றைக் குற்போம் வாருங்கள்!

 



      

கோணக்காத்துப் பாட்டு


இயற்கை மிகவும் அழகானது; அமைதியானது; மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவது. ஆனால் அது சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும். தமிழ்நாடு எ அடிக்கடி புயலால் தாக்கப்படும் பகுதியாகும். முன்பு ஒருமுறை தமிழ்நாடு புயலால் தாக்குண்டபோது நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடப்பட்ட பாடல்களை அறிவோம்.





 






 


 மேலும் அறிய க்ளிக் செய்யுங்கள்


 


சனி, 15 ஜூலை, 2023

காமராஜர் பற்றிய பேச்சு 10 வரிகள்

 





Kamarajar Speech in Tamil 10 Lines

படிக்காத மேதை, கர்ம வீரர், தென்னாட்டின் காந்தி, பெருந்தலைவர் இவ்வாறு உலக மக்களால் அழைக்கப்படுபவர் தான் காமராஜர். இவருடைய ஆட்சி காலம் தான் தமிழகத்தின் பொற்காலம் என்று பாராட்டப்படிருக்கிறது. இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகள் இருந்து, அப்போ இருந்த அரசியல் வாதிகள் வரை அனைவரும் சொல்வது என்னவென்றால் காமராஜர் மாதிரி நாங்களும் நல்ல ஆட்சியை தருவோம் என்று தான். ஏராளமான தொழிற்சாலைகள், நீர்த்தேக்க அணைகள், மக்களுக்கு  பயன்படும் நலத்திட்டங்கள், கல்வியில் மிக பெரிய வளர்ச்சி இப்படி தமிழ்நாட்டிற்காகவே உழைத்த உன்னத தலைவர் தான் காமராஜர். இவருடைய பிறந்த நாள் இந்த மாதம் ஜூலை 15-ம் தேதி வருகின்றது. அதனால் பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்த பதிவில் காமராஜர் பேச்சு பற்றி 10 வரிகளை காண்போம் வாங்க..


காமராஜர் பேச்சு பற்றி 10 வரிகள்:

காமராஜர் ஜூலை 15-ம் தேதி 1903 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரில் குமாரசாமிக்கும், சிவகாமியம்மைக்கும் மகனாக பிறந்தவர்.

இவருடைய இயற்பெயர் காமாட்சி, இவரின் தாயார் செல்லமாக ராஜா என்று அழைப்பார். இதுவே கால போக்கில் காமராஜர் என்று ஆகிவிட்டது.


காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்

காமராஜருக்கு 18 வயது இருக்கும் போது அரசியலில் சேர வேண்டும் என்று நினைத்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் முதல்வராக பதவி வகித்தார். இவர் முதலமைச்சராக இருந்த போது மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

தொழில், கல்வி, விவசாயம் போன்றவற்றின் வளர்ச்சிக்காக பெரிதும் பங்காற்றி உள்ளார். 1976 ஆம் ஆண்டு காமராஜர் பாரத ரத்னா விருதையும் பெற்றார்.

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார்.

முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினையும் அமல்படுத்தினார். ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.

காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை

இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது. இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

சுதந்திரம் அடைந்த 15 ஆண்டுக்குள் மதராஸில் நீர்ப்பாசன அமைப்புகளை விரைவாக முடித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சார வசதியையும் வழங்கினார்.

1964-ஆம் ஆண்டு ஜவர்கர்களால் நேரு மரணம் அடைந்தவுடன் லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966-ம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணம் அடைந்தவுடன்  48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார், காமராஜர்.

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம்  தேதி தன்னுடைய 72-வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. இவர் தனது வாழ்நாள் கடைசி வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.

“உன்னைப்போல அரசியல்வாதி இனி உலகில் பிறக்கப்போவதும் இல்லை, உன்னைத்தவிர உனக்கு நிகர் வேறுயாரும் இல்லை"

புதன், 28 ஜூன், 2023

ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 8

          



 ஏழாம் வகுப்பு

தமிழ்

செய்யுள் பகுதி (இயல் 8)

புதுமை விளக்கு


 

 


      பாடலின் பொருள்

பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடைய அவனது திருவடிகளுக்கு என் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன்.

ஆசிரியர் குறிப்பு

பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும். அதன் முதல் பாடல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.



பாடலின் பொருள்

ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்விளக்காகவும். ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்.

ஆசிரியர் குறிப்பு

பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர். இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி இரண்டாம் திருவந்தாதியில் உள்ள முதல்பாடலாகும்.



 


அறம் என்னும் கதிர்




 பாடலின் பொருள்

இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும். வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.


 ஆசிரியர் குறிப்பு :

முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர், இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.


 மேலும் அறிய க்ளிக் செய்யுங்கள்


 


திங்கள், 19 ஜூன், 2023

காவல் துறையில் கைரேகை சார்பு-ஆய்வாளர் ( FINGER PRINT SI)





காவல் துறையில் கைரேகை சார்பு-ஆய்வாளர் ( FINGER PRINT SI) பதவிக்கு TV விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


கல்வி தகுதி அறிவியலில் இளங்கலை பட்டம் B. Sc ( Chemistry, Physics,) 

வயது 20 முதல் 30 வரை

வேலை மாவட்ட தலைநகரங்களில் SP ஆபிஸில் FINGER PRINT SI ஆக பணியமர்த்தப்படுவர்.


L&O SI க்கு உரிய அடிப்படை சம்பளம், மற்றும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.

இஸ்லாமியருக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இஸ்லாமிய ஆண், மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு பொருத்தமான வேலை. யூனிபார்ம் கிடையாது. 01.06.2023 முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 30.06.2023. இந்த வாய்ப்பினை தகுதி உள்ளவர்கள் தவற விட வேண்டாம். விண்ணப்பிக்க இணைய தள முகவரி Google ல் சென்று TNUSRB என டைப் செய்து இணைய தளத்திற்குள் சென்று விண்ணப்பிக்கவும். 


Finger Print SI .

 1500 மீ ஓட்டம், கயிறு ஏறுதல் இதெல்லாம் இந்த தேர்வில் கிடையாது.  ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்ச உயரம் 163 செ. மீ., பெண் விண்ணப்பதாரர்களுக்கு 154 செ. மீ.  விண்ணப்ப கட்டணம் ரூ. 500 மட்டுமே...



Notification TNUSRB WEBSITE க்ளிக் செய்யுங்கள்

ஞாயிறு, 18 ஜூன், 2023

விவேகானந்தர் எழுதிய கவிதைகள் – தமிழில்

 


விவேகானந்தர் எழுதிய கவிதைகள் – தமிழில்

Vivekanandar Kavithaigal

விவேகானந்தர் எழுதிய கவிதைகள்

Poems composed by Swami Vivekananda

Vivekanandar Kavithaigal – A Translation

சுவாமி விவேகானந்தர் எழுதிய கவிதைகள் (Swami Vivekananda’s poems) எழுச்சிமிக்கவை; இதயத்தைப் பிணைத்திருக்கும் பற்றுகளாம் தளைகளை அறுத்து மனிதனை உயர்த்தும் மறைமொழிகள். தமது சீரிய பேச்சாற்றல் மூலம் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரையெல்லாம் விழிபெற வைத்த விவேகானந்தர் கவிதைகள் முலமாகவும் எழுச்சித் தீயைப் பரப்பினார். அத்தகைய சோதி மிகுந்த சுடர்க்கவிதைகளில் சிலவற்றைத் தமிழ்செய்து பார்க்கும் முயற்சியே இந்தப் பதிவு.

A translation of Swami Vivekananda’s poems into Tamil. Written in poetical form of Tamil.

Vivekanandar Kavithaigal

1. இடர் வரும்போது மேலோர் வலிமை கொள்வர்

மொழிபெயர்ப்பு:

அடிபட்ட பாம்பு படம் எடுத்து சீறும்;
தூண்டப்பட்ட நெருப்பு வானுயரப் பற்றி எரியும்;
நெஞ்சில் அடிபட்ட சிங்கத்தின் கர்ச்சனையோ
பாலைவனம் முழுவதும் எதிரொலிக்கும்;

மின்னலால் தாக்கப்பட்ட மேகம்
தன் வலிமையெல்லாம் திரட்டி இடிமுழக்கம் செய்யும்;
அதேபோல், (சோதனைகளாலும் இடர்களாலும்)
நெஞ்சின் ஆழத்தில் துயருற்ற ஆன்மா கிளர்ந்தெழும்போது
மகான்களும் ஞானிகளும் தங்கள் பெருவலிமை காட்டி
எதிர்த்துநின்று வெற்றி பெறுவார்கள்.

English Original:

The wounded snake its hood unfurls,
The flame stirred up doth blaze,
The desert air resounds the calls
Of heart-struck lion’s rage.

The cloud puts forth it deluge strength
When lightning cleaves its breast,
When the soul is stirred to its in most depth
Great ones unfold their best.

தமிழ்க்கவியாக்கம்:

படமெடுத்துச் சீறும்அடி பட்ட நாகம்,
     பாயுமொளி வீசிடுமுட் கிளர்ந்த செந்தீ,
இடம்அதிரக் கர்ச்சித்துக் குரல்மு ழக்கும்
     இதயத்தில் புண்பட்டுச் சினந்த சிங்கம்,
தடைதகர்க்கும் வலிகாட்டி எதிர்க்கும் மேகம்
     தன்னெஞ்சை வன்மின்னல் பிளக்கும் போதே,
அடர்துயர்வந்(து) ஆழ்மனத்தை அழுத்தும் போதங்(கு)
     ஆன்மபலத் தாலொளிர்வர் ஆன்றோர் தாமே.

(பாவகை : எண்சீர் ஆசிரிய விருத்தம்)

தொடர்புடைய திருக்குறள்:
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் 
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
பொருள்:
தங்கத்தை நெருப்பிலிட்டுச் சுடச்சுட அது மாசு நீங்கி ஒளிவிடும். அதுபோல் துன்பமானது சுடச்சுட அதைத் தாங்கிக் கொள்பவர்களுக்கு வாழ்க்கை ஒளிவீசித் திகழும்.


2. இலக்கை நோக்கி நேரே செல்வாய்!

மொழிபெயர்ப்பு:

கண்கள் மங்கிப் போனாலும், இதயம் மெலிந்து வாடினாலும்,
நட்பானது தோல்வியுற்றாலும், காதலும் வஞ்சித்தாலும்,
நூறு பேரிடர்களை விதியானது நம்மை நோக்கிச் செலுத்தினாலும்,
நாம் செல்லும் வழியெங்கும் காரிருள் சூழ்ந்தாலும்,

நம்மை வதைத்து அழிக்கும் நோக்குடன்
ஒட்டுமொத்த இயற்கையும் சேர்ந்து
ஒரு சினம் கொண்ட கொடும்பார்வை வீசினாலும்,
என் ஆன்மாவே! நீ தெய்வீகமானவன் என்று உணராய்!
(இந்தத் தெளிவு நிறைந்த இதயத்துடன்)
நீ இடப்பக்கமோ வலப்பக்கமோ நோக்காமல்,
நேரே உன் இலக்கை நோக்கிச் சென்று கொண்டே இரு!

English Original:

Let eyes grow dim and heart grow faint,
And friendship fail and love betray,
Let Fate its hundred horrors send,
And clotted darkness block the way.

All nature wear one angry frown,
To crush you out – still know, my soul,
You are Divine. March on and on,
Nor right nor left but to the goal.

தமிழ்க்கவியாக்கம்:

கண்மங்கிப் போனாலும், இதயம் வாடக்
   கருதியதோர் நட்பொடுகா தலும்பொய்த் தாலும்,
மண்மேலே விதிநூறு திகில்தந் தாலும்,
   வல்லிருள்வந் துன்வழியை மறைத்திட் டாலும்,
மண்தோன்றும் இயற்கையெலாம் சினந்து நின்னை
   வாட்டிவதைத் தாலும்அறி வாயென் நெஞ்சே!
எண்ணருந்தெய் வீகன்நீ! இலக்கை நோக்கி
   வலதிடது பார்க்காமல் செல்வாய் நேரே!

(பாவகை : எண்சீர் ஆசிரிய விருத்தம்)


3. அவனே நான்

மொழிபெயர்ப்பு:

நான் – தேவனும் அல்ல, மனிதனும் அல்ல, மிருகமும் அல்ல,
உடலும் அல்ல, மனமும் அல்ல, ஆண் அல்ல, பெண்ணும் அல்ல,
எனது குணங்களைப் பற்றிக் கூறவரும் போது
வேதங்கள் சாத்திரங்கள் உள்ளிட்ட எல்லா ஞான நூல்களும்
என்னைப் பற்றி அறிந்துசொல்ல முடியாமல்
அதிசயத்தில் வியந்து வாயடைத்து நின்று துதிக்கும்;
(ஏனெனில், அத்தகைய குணம் கடந்த இறைவன் என்னுள் உறைவதால்)
நானும் ‘அவன்’ ஆகிறேன். (அதனால், அவன் வேறு, நான் வேறு என்றில்லாமல் ஒன்றானோம்.
எனவே, அவனது இயல்புகள் எனக்கும் வாய்த்தன.)

English Original:

Nor angel I, nor man, nor brute,
Nor body, mind, nor he nor she,
The books do stop in wonder mute
To tell my nature; I am He.

தமிழ்க்கவியாக்கம்:

தேவனும்நான் அல்லேன்மா னிடனும் அல்லேன்
   சிற்றறிவே கொண்டவிலங் கினமும் அல்லேன்
ஆவியுறைந் திடுமுடலும் மனமும் அல்லேன்
   ஆண்பெண்பால் அலியிவற்றுள் எதுவும் அல்லேன்
தாவரிய ஞானத்து மறைநூல் எல்லாம்
   தனித்தனிநின் றென்னியல்பைச் சாற்றும் போது
நாவடைத்துத் தாமிளைத்துத் துதித்து நின்றே
   ‘நானவனே’ எனத்தெளிந்து போற்று மன்றே!

தாவரிய = கேடில்லா/குற்றமற்ற

‘நான் அவனே’ = ஸோஹமஸ்மி / ஸோ அஹம் அஸ்மி = அவனே நான் (ஈஸா உபநிஷத்)

தொடர்புடைய பாட்டு :

‘அல்லை ஈது அல்லை ஈது’ என மறைகளும் அன்மைச்
சொல்லி னால்துதித்து இளைக்கும்இச் சுந்தரன்.
– பரஞ்சோதி முனிவர் ( திருவிளையாடல் புராணம்)

வேதம் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறது. எல்லாவற்றையும் அக்கு வேராக ஆணிவேராக அறிவிக்கிறது. ஆனால் ஆண்டவனை நேரே சுட்டாமல், “நீ இப்பொருளும் அல்ல, இப் பொருளும் அல்ல” என்று சொல்லித் துதித்து இளைத்துப் போகிறது.


4. காலம் தோன்றும் முன்பும் நான் இருந்தேன்

மொழிபெயர்ப்பு:

கதிரவனும், சந்திரனும், பூமியும் தோன்றும் காலத்திற்கு முன்னே,
விண்மீன்களும் வால்நட்சத்திரங்களும் தோன்றும் முன்னே,
காலமானது பிறந்திடும் முன்னே,
நான் இருந்தேன்;
இப்போதும் இருக்கிறேன்;
இனியும் என்றென்றும் நான் நிலையாக இருப்பேன்!

English Original:

Before the sun, the moon, the earth,
Before the stars or comets free,
Before e’en time has had its birth,
I was, I am, and I will be.

தமிழ்க்கவியாக்கம்:

கதிரவனும் குளிர்மதியும் தோன்று முன்னே
     கடல்சூழ்ந்த பேருலகம் தோன்று முன்னே
நிதமொளிர்விண் மீன்கூட்டம் தோன்று முன்னே
     நீள்வால்நட் சத்திரங்கள் தோன்று முன்னே
கதியினையும் விதியினையும் நிர்ண யிக்கும்
     காலமெனும் பெருஞ்சுழல்தான் தோன்று முன்னே
முதன்முதலில் நானிருந்தேன் இன்றும் உள்ளேன்
     முடிவின்றி என்றென்றும் இருப்பேன் நானே! 

தமிழாக்கத்திற்கு விளக்கம்

சொற்பொருள்:
நிதமொளிர்விண் மீன்கூட்டம் = நிதம் + ஒளிர் + விண்மீன் + கூட்டம்

(பாவகை : எண்சீர் ஆசிரிய விருத்தம்)


5. தளைகளிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்!

English Original:

Strike off thy fetters! Bonds that bind thee down,
Of shining gold, or darker, baser ore;
Love, hate–good, bad–and all the dual throng,
Know, slave is slave, caressed or whipped, not free;
For fetters, though of gold, are not less strong to bind;
Then off with them, Sannyasin bold! Say–
“Om Tat Sat, Om!”

தமிழ்க்கவியாக்கம்:

ஒளிவிளங்கும் பொன்விலங்கால் கட்டுண் டாலும்
   உருவிழிந்த கருவிலங்கால் கட்டுண்டாலும்
உளமொளிர்அன் பின்நலத்தால் கட்டுண்டாலும்
   உறுவெறுப்பால் தீவினையால் கட்டுண் டாலும்
தளையெதுவும் வலிதேகாண்! புண்பட் டாலும்
   தழுவுறினும் அடிமைவெறும் அடிமை யன்றோ!
தளையனைத்தும் களைந்தெறிந்து, துறவி வீர!
   ‘ஓம்தத்சத் ஓம்’என்றே ஓது வாயே! 

6. இருள் விலகட்டும்!

English Original:

Let darkness go; the will-o’-the-wisp that leads
With blinking light to pile more gloom on gloom.
This thirst for life, for ever quench; it drags
From birth to death, and death to birth, the soul.
He conquers all who conquers self. Know this
And never yield, Sannyasin bold! Say–
“Om Tat Sat, Om!”

தமிழ்க்கவியாக்கம்:

மருள்தருபொய் யொளிகாட்டி மன மயக்கி
   வழிதடுமா றச்செய்யும் கொள்ளிப் பேய்போல்
இருள்மேலே இருள்குவித்தே ஒளி மறைக்கும்
   இன்னுயிர்மேல் என்றென்றும் தணியாத் தாகம்,
ஒருபிறப்பு பிறகிறப்பாம் சுழற்சி தன்னுள்
   உனையாழ்த்தப் பார்க்குமதற் கிடங்கொ டேல்நீ!
தரணியுன(து) உனைவென்றால், துறவி வீர!
   ‘ஓம்தத்சத் ஓம்’என்றே ஓது வாயே!

7. அமைதி – 1

English Original:

Behold, it comes in might,
The power that is not power,
The light that is in darkness,
The shade in dazzling light.

It is joy that never spoke,
And grief unfelt, profound,
Immortal life unlived,
Eternal death unmourned.

தமிழ்க்கவியாக்கம்:

சத்தியங்காண்! வலிமையில்மே விடும் அமைதி
   சத்தியுமல் லாச்சத்தி தான் அமைதி,
சுத்தவிருள் தனிலுறையும் ஒளி அமைதி,
   சுடரொளியுள் தெரிகின்ற நிழல் அமைதி,
சித்தசுகம் பேசாத களிப்(பு) அமைதி,
   சிறிதுமுணர்ந் தறியாப்பே ருழல்(வு) அமைதி,
இத்தரைவா ழாவமர வாழ்(வு) அமைதி,
   இரங்காநித் தியமரணம் அமைதி யாமே!

8. அமைதி – 2

English Original:

It is not joy nor sorrow,
But that which is between,
It is not noght nor morrow,
But that which joins them in.

It is sweet rest in music;
And pause in sacred art;
The silence between speaking;
Between two fits of passion —
It is the calm of heart.

தமிழ்க்கவியாக்கம்:

இன்பமுந்துன் பமுமல்லா உணர்(வு) அமைதி
    இவ்விரண்டுக் கிடைநின்ற நிலை அமைதி
இன்றிரவும் நாளையலாப் பொழு(து)  அமைதி
    இரண்டையுமீங் கிணைக்கின்ற கணம் அமைதி
இன்னிசையி னிடைவருநல் ஓய்(வு) அமைதி
    கலைப்படைப்பி னிடைநிறுத்த மாம் அமைதி
சொன்னமொழி யிடைமவுன வெளி யமைதி
    தொடருறுமீ ருணர்ச்சியிடை சாந்தம் அஃதே!

9. அமைதி – 3

English Original:

It is beauty never seen,
And love that stands alone,
It is song that lives un-sung,
And knowledge never known.

It is death between two lives,
And lull between two storms,
The void whence rose creation,
And that where it returns.

தமிழ்க்கவியாக்கம்:

தாரணியில் கண்டறியா அழ(கு) அமைதி 
     சார்வின்றித் தனித்திலங்கும் அன்(பு) அமைதி
யாருமிசைத் தறியாத பாட்(டு) அமைதி
     என்றுமறிந் துணராத அறி(வு) அமைதி
ஈருயிர்வாழ் வுக்கிடையில் இறப்(பு) அமைதி
     இருபுயல்வீச் சிடையோசை ஒழி(வு) அமைதி
பேருலகை ஆக்கிடும்வெற் றிடம் அமைதி
     பிறகழிவில் சேருமிடம் அமைதி யாமே.

10. மீண்டும் விழித்தெழுவாய்!

English Original:

Once more awake!
For sleep it was, not death, to bring thee life
Anew, and rest to lotus-eyes for visions
Daring yet. The world in need awaits, O Truth!
No death for thee!

தமிழ்க்கவியாக்கம்:

வாண்மலர்த் தாமரைக்கண் – மிகு
     வாட்டம் அகன்றுபுத் துயிர்வளர
நீண்மருள்  நிலைகலைந்தே – வினை
     நெடுந்தொலை நோக்குடன் துணிந்தியற்ற 
வேண்டியிவ் வுலகமெல்லாம், – உயர்
     மெய்ம்மையே! காத்திருந் தேங்கிநிற்க
மீண்டும்நீ விழித்தெழுவாய் – இது
     வெறுந்துயில் தானுனக் கிறப்பிலையே!

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...