சனி, 23 ஜூலை, 2022

திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE & MENTAL ABILITY)

 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE & MENTAL ABILITY)




i. சுருக்குதல் விழுக்காடு மீப்பெரு பொதுக் காரணி மீச்சிறு -

பொது மடங்கு


ii. விகிதம் மற்றும் விகிதாசாரம்.

✅ Video & Pdf download



தனி வட்டி கூட்டு வட்டி பரப்பு கொள்ளளவு காலம் மற்றும் வேலை.


iv. தருக்கக் காரணவியல் புதிர்கள் பகடை காரணவியல் எண் எழுத்துக் காரணவியல் காட்சிக் எண் வரிசை.

✅ PDF DOWNLOAD



மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்





வியாழன், 21 ஜூலை, 2022

இலக்கணம்

 TNPSC CHANNEL






இலக்கணம்:


மொழியை பிழையின்றி பேசவும் எழுதவும் துணைபுரிவது இலக்கணம் ஆகும்

தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,

1. எழுத்து

2. சொல்

3. பொருள்

4. யாப்பு

5. அணி






பெயர்ச் சொல்லின் வகையறிதல்

பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். எடுத்துக்காட்டு -மரம், செடி, பூ, சூரியன். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.


1. பொருட்பெயர்


பொருளை குறிக்கும் பெயர் பொருட்பெயர். எடுத்துக்காட்டு -மரம், செடி, மின்விசிறி, நாற்காலி.


2. இடப்பெயர்


இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர். எ.கா. -உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை.


3. சினைப்பெயர்


சினை என்றால் உறுப்பு என பொருள்படும். உறுப்பை குறிக்கும் பெயர் சினைப்பெயர்.


மரம் -பொருட்பெயர்.

இரை, தண்டு, வேர் போன்றவை அதன் உறுப்புகள். எனவே இவை சினைப்பெயர்கள் ஆகும்.


உடல் -பொருட்பெயர்


கண், காது, மூக்கு, கை என்பவை சினைப்பெயர்கள்.


4.  காலப்பெயர்


காலத்தை குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.


திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை ஆகியவை காலப்பெயர்கள்.


5. பண்புப் பெயர்


ஒரு பொருளின் பண்பு அல்லது தன்மை அல்லது அதன் குணத்தை குறிப்பது பண்புப்பெயர்.


எடுத்துக்காட்டு -

பச்சை இலை, சிவப்பு மை பண்புப்பெயர். உ, கு, றி, று, அம், சி, பு, ஜ, மை, பம், நர் என்ற விகுதியுடன் முடியும் (மை அதிகமாக இடம்பெறும்.)


6. தொழிற்பெயர்



தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர்.

எ.கா. -படித்தல், ஓடுதல், நடத்தல், தல், அல், அம், ஐ, கை, வை, பு, வு, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆணை, மை, து என்ற விகுதியுடன் முடியும்.





*******


வாக்கிய வகை அறிதல்

ஏதாவதொரு சொற்றொடரைக் கொடுத்து இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டுபிடி என்ற வகையில் வினாக்கள் அமையும்.

தனி வாக்கியம்

தொடர் வாக்கியம்

கலவை வாக்கியம்

கட்டளை வாக்கியம்

வினா வாக்கியம்

உணர்ச்சி வாக்கியம்

செய்தி வாக்கியம்

வியங்கோள் வாக்கியம்

எதிர்மறை வாக்கியம்

உடன்பாட்டு வாக்கியம்

நேர்க்கூற்று வாக்கியம்

அயற்கூற்று வாக்கியம்

1. தனி வாக்கியம்

ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தால் அது தனி வாக்கியம்

(எ.கா) பாண்டியர் முத்தமிழ் வளர்த்தனர்

சேர, சோழ, பாண்டியர் தமிழ் வளர்த்தனர்

பாரி வந்தான்.

பாரியும் கபிலனும் வந்தனர்.

2. தொடர் வாக்கியம்

தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்.

ஒரு எழுவாய் பல பயனிலைகளைக்கொண்டு முடியும்.

தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வந்து இடையில் ஆகையால்,அதனால் எனும் இணைப்புச் சொற்கள் வெளிப்படையாக வரும்.

பல வினையெச்சங்களைக் கொண்டு இறுதியில் வினைமுற்றைக் கொண்டு முடியும்.

(எ.கா) ராமன் திருச்சி சென்றான்; மலைக்கோட்டை ஏறினான்; கடவுளை வழிபட்டான்.

நாகம் இடியோசை கேட்டது; அதனால் நடுங்கியது.

தமிழரசி போட்டியில் பங்கேற்றாள்; வெற்றி பெற்றாள்; பரிசு பெற்றாள்.

3. கலவை வாக்கியம் :

கலவை வாக்கியம் என்பது, முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும்.(அல்லது)

ஓர் முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல சார்பு வாக்கியங்கள் இணைந்து வருமாயின் அது கலவை வாக்கியம் எனப்படும்

‘ஓ’ ‘என்று’ ‘ஆல்’ என்ற இணைப்புச் சொற்கள் வரும்.

(எ.கா) மேகம் கருத்ததால் மழை பெருகியது.

யார் திறமையாகப் படிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவர்.

தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்று, அதன்வழி நடந்து, வாழ்க்கையில் முன்னேற அனைவரும் முயல வேண்டும்.

நாங்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமென்று ஆசிரியர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.

4.கட்டளை வாக்கியம்

பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்து வருமாயின் அது கட்டளை வாக்கியம்.

இதில் இறுதிச் சொல் வேர்ச்சொல்லாக வரும்.

(எ.கா) அறம் செய்.

தண்ணீர் கொண்டு வா.

இளமையில் கல்.

திருக்குறளைப் படி

5. வினா வாக்கியம்

வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம்.

வினா எழுத்துக்களாவன; ஆ, எ, ஏ, ஓ, யா ஆகும்.

(எ.கா) இது சென்னைக்கு செல்லும் வழியா?

நீ மனிதனா? - ஆ

நீ தானே? - ஏ

உளரோ? - ஓ

6. உணர்ச்சி வாக்கியம்

மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு வாக்கியம் அமையுமாயின் அது உணர்ச்சி வாக்கியம்

(எ.கா) ஆ! தாஜ்மஹால் என்ன அழகு!

ஐயகோ! நேருஜி மறைந்தாரே!

7. செய்தி வாக்கியம்

ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அமைவதே செய்தி வாக்கியம்

(எ.கா) உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது

மாணவர்கள் சீருடையில் வர வேண்டும்

8. வியங்கோள் வாக்கியம்

கட்டளை, வேண்டுகோள், வாழ்த்துதல், வைதல், ஆகியவற்றுடன் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியமே வியங்கோள் வாக்கியம்

(எ.கா) தமிழை முறையாகப் படி - கட்டளை

நீடுழி வாழ் - வாழ்த்துதல்

தீயென ஒழி - வைதல்

நல்ல கருத்தினை நாளும் கேள் - வேண்டுகோள்

9.எதிர்மறை வாக்கியம்

ஒரு செயல் அல்லது தொழில் நிகழாமையைத் தெரிவிப்பது எதிர்மறை வாக்கியம் ஆகும்.

(எ.கா) அவன் கல்வி கற்றிலன்

உடன்பாடு - எதிர் மறை

அவன் சென்றான் - அவன் சென்றிலன்

ஆமைகள் வேகமாக ஓடும் - ஆமைகள் வேகமாக ஓடா

புலி புல்லைத் தின்னும் - புலி புல்லைத் தின்னா

மொழி இலக்கிய வளம் உடையது - மொழி இலக்கிய வளம் அற்றது

10. உடன்பாட்டு வாக்கியம்

ஒரு செயல் அல்லது தொழில நிகழ்வதைத் தெரிவிப்பது உடன்பாட்டு வாக்கியம் ஆகும்.

(எ.கா) வயலில் மாடுகள் மேய்ந்தன

வகுப்பில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.

11.நேர்க்கூற்று வாக்கியம்

ஒருவர் சொன்ன செய்தியை பொருள் மாறாமல் அவர் சொன்னபடியே சொன்னால் அது நேர்க்கூற்று வாக்கியம் எனப்படும்.

அவர் இவரிடம் சொன்ன செய்தியை மேற்கோள் இட்டுக் காட்ட வேண்டும்.

(எ.கா) வளவன்,"நான் ஊருக்குச் செல்கிறேன்" என்றான்.

12.அயற்கூற்று வாக்கியம்

ஒருவர் சொன்ன செய்தியை கேட்டு அவன் இப்படியாகச் சொன்னான் என்று மற்றொருவரிடம் கூறுவது அயற்கூற்று வாக்கியம் ஆகும்.

(எ.கா) வளவன் தான் மதுரை செல்கிறேன் என்று சொன்னான்.


    *******



சில சொற்களும் அதனோடு வேர்ச்சொற்களும் பின்வருமாறு:

சொற்கள் வேர்ச்சொற்கள்

பற்றினால் பற்று

ஒடாதே ஒடு

அகன்று அகல்

பார்த்தான் பார்

அறுவடை அறு

கெடுத்தாள் கெடு

இயக்கிடு இயக்கு

பாடிய பாடு

கேட்க கேள்

உற்ற உறு

உருக்கும் உருக்கு

எஞ்சிய எஞ்சு

ஒட்டுவிப்பு ஒட்டு

கண்டனன் காண்

நினைத்தேன் நினை

கொடுதீர் கொடு

ஓடாது ஓடு

கற்றேன் கல்

காத்தவன் கா

காட்சியில் காண்

கொடாமை கொள்

தட்பம் தண்மை

மலைந்து மலை



*******



.


வினை முற்று

வினை முற்று என்றால் என்ன ?

வினைமுற்று என்பது,

தொழிலையும் (நடந்தான் - இதில் நடக்கின்ற action ஐ உணர்த்துகிறது) ,

காலத்தையும் ( நடந்தான் -இறந்த காலம்) உணர்த்த வேண்டும்.

திணையை கூற வேண்டும் ( நடந்தான் என்பது 'உயர்திணை') ,

பால் காட்டும் விகுதியோடு சொல்லானது முற்று பெற்றிருக்க வேண்டும். ( நடந்தான் - ஆண்பால்)

உதாரணம் :

இருந்தான், நடந்தான், கற்றான், வாழ்ந்தாள். அரும்பியது, தளர்ந்தது

{பொதுவாக வினைமுற்றுகள் ர், ன, ன்,து என்ற எழுத்துகளில் முற்று பெறும்.)

வினையெச்சம்

வினையெச்சம் என்றால் என்ன ?

முடிவு பெறாத வினைச் சொல் வினையெச்சம் ஆகும்.

உதாரணம் :

நடந்து, கண்டு, படித்து.

வினையாலணையும் பெயர்

வினையாலணையும் பெயர் என்றால் என்ன ?

இலக்கண விளக்கம் :

"ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உறுப்பு ஏற்றும், ஏற்காமலும் வேறொரு பயனிலையைக்கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் ஆகும்."

வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வரும்.


உதாரணம் :

"கொடு" என்பதன் வினையாலணையும் பெயர் எது ?

அ.கொடுத்து

ஆ.கொடுத்த

இ.கொடுத்தல்

ஈ.கொடுத்தவள்


விடை : ஈ.கொடுத்தவள்

(மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வந்துள்ளது)

ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வினையாலணையும் பெயர் என்றாலே ஏதோ ஒருவகையில் "அணைத்து" வருவது போல் வரும், எ.கா. அறிந்தவன், படித்தவர்

தொழிற்பெயர்

தொழிற்பெயர் என்றால் என்ன ?

ஒரு தொழிலை செய்வதைக் குறிப்பது தொழிற்பெயர். பாடுதல், ஆடுதல், நடித்தல்.. பொதுவாக தொழிற்பெயர்கள் தல், அல், கை என்றவாறு முடியும்.


உதாரணம் :

'வாழ்' என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எது ?

அ.வாழ்க

ஆ.வாழ்வீர்

இ.வாழ்ந்தார்

ஈ.வாழ்தல்

விடை :

ஈ. வாழ்தல் (தல் என முடிந்துள்ளது.)



*******








தன்வினை வாக்கியம்

 

ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.


எ.கா :  

முருகன் திருந்தினான்.

பாடம் கற்றேன்.

நான் நேற்று வந்தேன்.

கவிதா பொம்மை செய்தாள்.

நண்பர் வீட்டில் விருந்து உண்டான்.

மன்னர் நாட்டை ஆண்டார்.

கலையரசி பாடம் கற்றான்.

கண்ணன் இலக்கணம் பயின்றாள்.

செல்வி பாடம் கற்றாள்.

பிறவினை

ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.


எ.கா :  

ஆசிரியை பாடம் கற்பித்தார்.

அவன் திருத்தினான்.

ராமன் பாடம் படிப்பித்தான்.

கோதை நடனம் ஆட்டுவித்தாள்.

ஆசிரியர் பாடம் பயிற்றுவித்தார்.

கலையரசி பாடம் கற்பித்தான்.

நண்பனை விருந்து உண்பித்தேன்.

கவிதா பொம்மை செய்வித்தாள்.

தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்.







செய்வினை:

எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். செயப்படு பொருளோடு ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும்.

எ.கா: அம்மு வேலை(ல்+ஐ) செய்தாள்

‘ஐ’ உருபு மறைந்தும், வெளிப்பட்டும் வரும்.

செயப்பாட்டு வினை:

செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். எழுவாயோடு ‘ஆல்’ என் மூன்றாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். பயனிலையோடு ‘படு’, ‘பட்டது’ என்னும் சொற்களைச் சேர்க்க வேண்டும். (படு துணை வினை)

எ.கா: பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டது.




✅ PDF DOWNLOAD


மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்







புதன், 20 ஜூலை, 2022

பொதுத்தமிழ் ஆசிரியர்கள் சிறப்புப்பெயர்கள்


  TNPSC CHANNEL   

பொதுத்தமிழ்

     ஆசிரியர்கள் - சிறப்புப்பெயர்கள்

      

 


1.திருவள்ளுவர் – பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவை:

தேவர்

நாயனார்

தெய்வப்புலவர்

செந்நாப்போதர்

பெருநாவலர்

பொய்யில் புலவர்

பொய்யாமொழிப் புலவர்

மாதானுபங்கி

முதற்பாவலர்


2. கம்பர் -  

"கல்வியிற் பெரியோன் கம்பன்",

"கவிச்சக்ரவர்த்தி".


3. பாரதியார் – இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.

மகாகவி, 

தேசியக் கவி, 

விடுதலைக் கவி,

முண்டாசுக் கவிஞன்,

சக்தி தாசன்.


4. பாரதிதாசன் – இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்'

புரட்சிக் கவிஞர்

பாவேந்தர்


5. நாமக்கல் கவிஞர் -  வெ. இராமலிங்கம் பிள்ளை 

காந்தியக் கவிஞர்


6. தேசிய விநாயகம் பிள்ளை –

கவிமணி


7. முடியரசன் - இயற்பெயர்: துரைராசு

வீறுகவியரசர்


8. வாணிதாசன் – இயற்பெயர்  : எத்திராசலு (எ) அரங்கசாமி


கவிஞரேறு, 

பாவலர் மணி, 

தமிழகத்தின் வேர்ட்ஸ்வோர்த், 

தமிழ்நாட்டுத் தாகூர் போன்ற சிறப்புப் பெயர்களும் இவருக்குண்டு.


9. சுரதா -  இயற்பெயர் : இராசகோபாலன் 

உவமைக் கவிஞர் 

கவிஞர் திலகம்  

தன்மானக் கவிஞர்  

கலைமாமணி 

கவிமன்னர்






10. கண்ணதாசன் – இயற்பெயர் : முத்தையா

கவியரசு

கவிச்சக்ரவர்த்தி

குழந்தை மனம் கொண்ட கவிஞர்.


11. உடுமலை நாராயணகவி -  இயற்பெயர் :  நாராயணசாமி

பகுத்தறிவுக் கவிராயர், 

நாராயணகவி.



12. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – 

மக்கள் கவிஞர்



13. மருதகாசி – 

திரைக்கவித் திலகம்


14. ந.பிச்சமூர்த்தி – 

புதுக்கவிதையின் தந்தை


15. சிற்பி பாலசுப்ரமணியம் – 

சிற்பி (எழுத்துக்களைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்)

“வானம்பாடி” கவிதை அமைப்பின் தந்தை


16. மறைமலை அடிகள் - இயற்பெயர் : வேதாசலம்

(தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி)



17. பரிதிமாற் கலைஞர் – இயற்பெயர் : வி.ஜி. சூர்யநாராயண சாஸ்திரி


18. உ. வே. சாமிநாதையர்  -

தமிழ்த் தாத்தா


19. தேவநேயப் பாவாணர் –

மொழிஞாயிறு



20. வீரமாமுனிவர் – இயற்பெயர் : கான்ஸ்டாண்சு ஜோசப் பெசுகி

இஸ்மத் சன்னியாசி, 

தைரியநாதன்.





✅ PDF DOWNLOAD




மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்




           *******


செவ்வாய், 19 ஜூலை, 2022

பொதுத்தமிழ் நூல்கள் நூலாசிரியர்கள்

      TNPSC CHANNEL   

     பொதுத்தமிழ்

       நூல்கள் நூலாசிரியர்கள்



      



1. நாலடியார் (வேளான்வேதம்) – சமண முனிவர்கள் 

                                                                             ஜி.யூ. போப் (ஆங்கிலம்)


2. நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்

                                                    ஜி.யூ. போப் (ஆங்கிலம்)


3. பழமொழி நானூறு – முன்றுறையர் (அ) முன்றுறை அரையானார்

                                                    என்னும் “சமண முனிவர்” கி.பி 5 ஆம் நூற்றாண்டு


4. முதுமொழிக்காஞ்சி -  மதுரை கூடலூர் கிழார்


5. திருகடுகம் - நல்லாதனார் 


6. இன்னா நாற்பது – கபிலர்


7. இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்


8. சிறுபஞ்சமூலம் – காரியாசான்


9. ஏலாதி - கணிமேதாவியார் (81 பாடல்கள் உள்ளன).


10. கம்பராமாயணம் – கம்பர்


11. புறநானூறு - இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள்            பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. 


12. அகநானூறு (நெடுந்தொகை) - இத்தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். 145 புலவர்கள் பாடிய தொகுப்பு நூல்.


13. குறுந்தொகை - ஆசிரியர் பெயர் தெரியவில்லை (இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ எனினும் தொகுப்பித்தவர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறவில்லை)



14. ஐங்குறுநூறு - ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த 100 பாடல்களையும் ஒவ்வொரு புலவர் இயற்றியுள்ளார். அவ்வகையில் இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன.

இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார்.


15. கலித்தொகை - இந்நூலை தொகுத்தவர் நல்லந்துவனார்.

                                             தொகுப்பிதவர் பெயர் தெரியவில்ல.


16. பத்துப்பாட்டு நூல்கள்

 திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

சிறுபாணாற்றுப்படை _ நத்தத்தனார்

முல்லைப்பாட்டு (நெஞ்சாற்றுப்படை) – நப்பூதனார்

நெடுநல்வாடை – நக்கீரர்

பட்டினப்பாலை -  கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்

பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்

மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்

குறிஞ்சிப்பாட்டு – கபிலர்

மலைபடுகடாம் – பெருங்கௌசிகனார்.


17. ஐபெரும் காப்பியங்கள்


1 சிலப்பதிகாரம் -  இளங்கோவடிகள்


2 மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்.


3 சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்.


4 வளையாபதி - இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை


5 குண்டலகேசி – நாதகுத்தனார்.



18. ஐஞ்சிறு காப்பியங்கள்


1. நீலகேசி - இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. 

2. சூளாமணி - தோலாமொழித்தேவர் 

3. யசோதர காவியம் - வெண்ணாவலூர் உடையார் வேள்

4. உதயகுமார காவியம் - பெயர் தெரியவில்லை

5. நாககுமார காவியம் - பெயர் தெரியவில்லை




19. பெரியபுராணம் -  சேக்கிழார்.


20. நாலாயிர திவ்ய பிரபந்தம் - தொகுத்தவர் நாதமுனிகள்


உரை எழுதியவர் பெரியவாச்சான் பிள்ளை.


21. திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர்


22. தேம்பாவணி – வீரமாமுனிவர்


23. சீறாப்புராணம் - உமறுப்புலவர் (பதினெட்டாம் நூற்றாண்டு)


24. திருக்குற்றாலக் குறவஞ்சி -  திருக்கூட ராசப்பக் கவிராயர்.


25. கலிங்கத்துப்பரணி – ஜெயங்கொண்டார்.


26. முத்தொள்ளாயிரம் -  ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


27. தமிழ் விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


28. நந்திக்கலம்பகம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


29. விக்கிரம சோழன் உலா – ஒட்டக்கூத்தர்.


30. முக்கூடற்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


31. காவடிச்சிந்து - அண்ணாமலை ரெட்டியார்


32. திருவேங்கட அந்தாதி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.


33. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்.


34. பெத்தலகேம் குறவஞ்சி - தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்.


35. அழகர் கிள்ளைவிடு தூது - மதுரைச் சொக்கநாதப் புலவர்.


36. இராஜராஜன் சோழன் உலா – ஒட்டக்கூத்தர்


37. மனோன்மணியம் (சிவகாமியின் சரிதம்) – சுந்தனார்


38. பாஞ்சாலி சபதம் - மகாகவி பாரதியார்.


39. குயில் பாட்டு - மகாகவி பாரதியார்.


40. இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார்.



PDF DOWNLOAD




        *******


திங்கள், 18 ஜூலை, 2022

சனி, 16 ஜூலை, 2022

Tnpsc questions and answers

       







பனிரெண்டாம் வகுப்பு தமிழ் :


பனிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.





✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.




PDF DOWNLOAD





தொகுப்பாளர்

R. சரண்ராஜ்





TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...