செவ்வாய், 12 ஏப்ரல், 2022

11th new syllabus in tamil

வால்ட் விட்மன்  | மல்லார்மே | பாப்லோ நெரூடா




வால்ட் விட்மன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.


கவிஞர்; இதழாளர்; கட்டுரையாளர்;


புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர். இவருடைய 'புல்லின் இதழ்கள் (Leaves of

grass) என்ற நூல் உலகப்புகழ் பெற்றது.






கவிதை உடம்பின் -ஆனால். விதையின் டைபோல் வ,கவிதை திலிருந்து டுத்ததாக, த்துவமான ல அடைய

கனவொன்று நான் கண்டேன்


உலகெலாம் திரண்டுவந்து ஒருசேரத் தாக்கினாலும்


தோற்காத பெருநகரம் ஒன்று கண்டேன் நண்பர்கள் நகரம் என்றொரு புதுநகரம்


வந்தது என் கனவில்.


அன்பைவிடப் பெரிதென்ற ஒன்றும் அந்நகரில் இல்லை,


அன்பின் வழித்தடத்தில் மற்றெல்லாம்


சென்றன அதன் பின்னே.


எந்நேரமும், மாந்தர் செய்வது எதுவென்றாலும்,


அன்பேதான் தெரிந்தது அங்கே அவற்றில் எல்லாம்,


மக்கள் தோற்றத்திலும் அன்பே,


அன்பேதான் அவர் மொழியும்.


*******


ஸ்டெஃபான் மல்லார்மே


ஸ்டெஃபான் மல்லார்மே பிரான்சு நாட்டைச்


சேர்ந்தவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரைப் புரிந்துகொள்வதன் புரிந்துகொள்ள முடியும்.



மூலமே குறியீட்டியத்தையும் (Symbolism)


புத்தகங்களிலெல்லாம் படித்துவிட்டேன்


நான் தப்பிப் போகத்தான் வேண்டும் அங்கே ஆனால் உடலோ சோகத்தில்! வானுக்கும்


முன்பின் தெரியாத கடல் நுரைக்குமிடையே


மயக்கத்தில் பறவைகள் பறப்பதை உணர்கிறேன்!


என் கண்களில் பிரதிபலிக்கும் பழைய


பூங்காக்களோ எழுதப்படாத தாளின் தூய வெண்மையின் மீது


என் விளக்கிலிருந்து வீசும் பயனற்ற ஒளியோ தன் குழந்தைக்குப் பாலூட்டும்


அவ்விளம்பெண்ணோ


எதுவும் தடுக்காது கடல்நீரில் நனையும்


இந்நெஞ்சை. நான் கிளம்பிச் செல்வேன்! பாய்மரங்களைத்


தூக்கியெறிந்து விட்டிருக்கும் நீராவிக் கப்பலே புறப்படு, தொலைதேச இயற்கையை நோக்கி. இரக்கமற்ற எதிர்பார்ப்புகளில் மனமுடைந்து ஆடும் கைக்குட்டைகளின் மகத்தான வழியனுப்பலை


இன்னும் நம்பிக்கொண்டிருப்பது வேதனை! அதோ, பாய்மரமின்றிப் போய்ச்சேரத் தீவுகளின்றி மூழ்கிவிட்ட கப்பல்களின்மேல் சாய்ந்து புயலை அழைக்கும் பாய்மரங்கள்தாமே அவை.. ஆனால், இதோ கேள் என் நெஞ்சே மாலுமிகளின் பாடலை!


*******


பாப்லோ நெரூடா

தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் பிறந்தவர். இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர். தன்னுடைய கவிதைகளுக்காக 1971ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.


எத்துணைப் பெயர்கள்!


திங்கட்கிழமைகள் செவ்வாய்க்கிழமைகளுடனும் கொண்டுள்ளன.

ஆண்டு முழுவதுடன்

வாரமும் சிக்கிக்ளைத்துப்போன உம் கத்தரிக்கோலால் காலத்தை வெட்ட முடியாது. 

பகலின் பெயர்கள் அனைத்தையும் இரவின் நீர் அழைக்கிறது. 

இரவில் நான் உறங்குகையில் என்னை என்னவென்று அழைக்கின்றனர் அல்லது என்னவென்று அழைப்பதில்லை? 

தூங்கும்போது நான் நானாக இல்லையெனில் விழித்தெழுந்த பின் நான் யார்?



மேலும் அறிய க்ளிக் செய்யுங்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...