செவ்வாய், 31 மே, 2022

மலைபடுகடாம்

 மலைபடுகடாம் 



அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி, கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து சேந்த செயலைச் செப்பம் போகி,


அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச் சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி நோனாச் செருவின் வலம்படு நோன்தாள் மான விறல்வேள் வயிரியம் எனினே,


நும்இல் போல நில்லாது புக்கு, கிழவிர் போலக் கேளாது கெழீஇ சேட் புலம்பு அகல இனிய கூறி பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்.




பாடலின் பொருள்


நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரைக் கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய சிறிய ஊர்களில் தங்கி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதல்.


"பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்; எரியும் நெருப்பைப் போல ஒளிரும் ம் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்துகொள்ளுங்கள்; சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்; 

 

அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள். அங்குள்ளவர்களிடம், பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள்' என்று சொல்லுங்கள்.






 

 



 மேலும் அறிய... TNPSC CHANNEL


ஞாயிறு, 29 மே, 2022

காசிக்காண்டம்

      காசிக்காண்டம்



விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் எழுதல் முன் மகிழ்வன செப்பல் பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல் 

போமெனில் பின் செல்வதாதல் ரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே*


இல்லொழுக்கம், (பா எண்: 17)


_அதிவீரராம பாண்டியர்



பாடலின் பொருள்


விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், 'வீட்டிற்குள் வருக' என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல், அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.







மேலும் அறிய... TNPSC CHANNEL





வியாழன், 26 மே, 2022

முல்லைப்பாட்டு

 நல்லோர் விரிச்சி கேட்டல்





அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,


பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப


*சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் " நடுங்கு சுவல் அசைத்த கையள், கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருகுவர், தாயர்" என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் *


அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,


பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப


*சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் " நடுங்கு சுவல் அசைத்த கையள், கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருகுவர், தாயர்" என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் *


- நப்பூதனார்.


பாடலின் பொருள்


அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது. வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மேகம், ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.

துன்பத்தைச் செய்கின்ற அம்மாலைப்பொழுதில், முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் ம் நறுமணம் கொண்ட அரும்புகள்; அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின்முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது, தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.


அங்கு, சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள், "புல்லை மேய்ந்து உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர், வருந்தாதே என்றாள். இது நல்ல சொல் எனக்கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர்.

நின் தலைவன் பகைவரை வென்று திறைப்பொருளோடு வருவது உறுதி. தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே! என ஆற்றுப்படுத்தினர் முதுபெண்டிர்.


நூல் வெளி

முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இது 103 அடிகளைக் கொண்டது. இப்பாடலின் 1- 17அடிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன. முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது; முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது; பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது. இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.









மேலும் அறிய... TNPSC CHANNEL





பாரதியார் கவிதைகள்

 

                        காற்றே வா!



நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கும் இயற்கையை நாம் என்றேனும் உற்றுப் பார்க்கிறோமா? இருளில் நடந்தாலும் வானத்து விண்மீன்களையும் நம்முடனேயே நடந்துவரும் நிலவையும் கண்டு மகிழ்கிறோமா? காடு, மலை, அருவி, கதிரவன் இவற்றோடு இயைந்ததே இயற்கை வாழ்வு. 'நீரின்றி அமையாது உலகு' என்றாற் போல 'காற்றின்றி அமையாது உலக உயிரியக்கம்' என்பதையே வெவ்வேறு கோணங்களில் காலந்தோறும் கவிஞர்கள் பலரும் பாடிவருகிறார்கள்.



காற்றே,வா.


மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை


மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா;


இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.


காற்றே,வா.


எமது உயிர் - நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு.


சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.


பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு.


உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.


உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.


உன்னை வழிபடுகின்றோம்.


பாரதியார் கவிதைகள்





சொல்லும் பொருளும்:


மயலுறுத்து - மயங்கச்செய்

ப்ராண – ரஸம்  - உயிர்வளி

லயத்துடன் - சீராக


மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை' என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்; எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்; கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சித்திரம் -கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்; குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்; இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.




மேலும் அறிய... TNPSC CHANNEL








வெள்ளி, 20 மே, 2022

11th new syllabus in tamil (இயல் 7,8)

                                 TNPSC CHANNEL   

  பதினோராம் வகுப்பு

  தமிழ்



இயல் 7.1 காற்றில் கலந்த

பேரோசை

👇👇👇

answer




இயல் 7.2 புரட்சிக்கவி

👇👇👇


pdf download



இயல் 7.3 பதிற்றுப்பத்து

👇👇👇






இயல் 7.4 சிந்தனைப் பட்டிமன்றம், இயல் 7.5 ஆக்கப்பெயர்கள்

👇👇👇






இயல் 8.1 தாகூரின் கடிதங்கள், இயல் 8.2 ஒவ்வொரு புல்லையும்

👇👇👇


pdf downlaod

                                


இயல் 8.3 தொலைந்போனவர்கள்

👇👇👇





இயல் 8.4 மனோன்மணீயம்

👇👇👇







இயல் 8.5 செவ்வி

👇👇👇








இயல் 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

👇👇👇












மேலும் அறிய... TNPSC CHANNEL




















மேலும் அறிய... TNPSC CHANNEL

















சனி, 14 மே, 2022

11th new syllabus in tamil (இயல் 6)

                                TNPSC CHANNEL   

  பதினோராம் வகுப்பு

  தமிழ்



இயல் 6.1 காலத்தை வென்ற கலை

👇👇👇






இயல் 6.2 ஆத்மாநாம் கவிதைகள், 

6.3 குற்றாலக் குறவஞ்சி

👇👇👇







  • இயல் 6.4 திருச்சாழல்

👇👇👇

pdf download






இயல் 6.5 இசைத்தமிழர் இருவர்

👇👇👇




இயல் 6.6 கலைச்சொல்லாக்கம்

👇👇👇


pdf download






மேலும் அறிய... TNPSC CHANNEL

















11th new syllabus in tamil (இயல் 5)

                                TNPSC CHANNEL   

  பதினோராம் வகுப்பு

  தமிழ்



இயல் 5.1 ஆனந்தரங்கர்

நாட்குறிப்பு

👇👇👇


pdf download




இயல் 5.2 சீறாப்புராணம்

👇👇👇


pdf download






இயல் 5.3 அகநானூறு

👇👇👇

pdf download





இயல் 5.4 பிம்பம்

👇👇👇


pdf download





இயல் 5.5 பா இயற்றப் பழகலாம்

👇👇👇









இயல் 5.6 திருக்குறள்

👇👇👇







மேலும் அறிய... TNPSC CHANNEL

















TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...