சனி, 25 ஜூன், 2022

10th new syllabus in tamil

                                 TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download 

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 3 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 4 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 5 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்




இயல் 6 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்




7.1 சிற்றகல் ஒளி

👇👇👇



pdf download







7.2 ஏர் புதிதா?

👇👇👇




pdf download






7.3 மெய்க்கீர்த்தி

👇👇👇


pdf download



7.4 சிலப்பதிகாரம்

👇👇👇

pdf download




7.5 மங்கையராய்ப்

பிறப்பதற்கே...

👇👇👇

pdf download



7.6 புறப்பொருள்

லக்கணம்

👇👇👇


pdf download





மேலும் அறிய... TNPSC CHANNEL



வெள்ளி, 24 ஜூன், 2022

புறப்பொருள் இலக்கணம்

         TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

    தமிழ்

இயல் 7.6 புறப்பொருள் இலக்கணம்





Question 1.

புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது …………………….

அ) புறத்திணை

ஆ) புறநானூறு

இ) பதிற்றுப்பத்து

ஈ) பரிபாடல்

Answer:

அ) புறத்திணை

Question 2.

புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?

அ) ஒன்பது

ஆ) பதினொன்று

இ) பன்னிரண்டு

ஈ) பதிமூன்று

Answer:

இ) பன்னிரண்டு

Question 3.

வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) மல்லிகைப்பூ

ஆ) இட்லிப்பூ

இ) சங்குப்பூ

ஈ) உன்னிப்பூ

Answer:

ஆ) இட்லிப்பூ

Question 4.

ஒரு தலைக்காமத்தைக் குறிக்கும் திணை …………………….

அ) பெருந்திணை

ஆ) பொதுவியல்

இ) கைக்கிளை

ஈ) கொடையை

Answer:

இ) கைக்கிளை

Question 5.

‘வாகை’ என்பது எதனைக் குறிக்கும்?

அ) போர்

ஆ) வெற்றி

இ) ஆநிரைமீட்டல்

ஈ) மதில் வளைத்தல்

Answer:

ஆ) வெற்றி

Question 6.

‘நொச்சி’ எந்நிலத்துக்கு உரியது …………………….

அ) குறிஞ்சி

ஆ) மருதம்

இ) முல்லை

ஈ) பாலை

Answer:

ஆ) மருதம்

Question 7.

நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது …………………….

அ) கோட்டையைக் காக்க

ஆ) மன்னனைக் காக்க

இ) ஆநிரைக் கவர

ஈ) வலிமையை நிலைநாட்ட

Answer:

அ) கோட்டையைக் காக்க

Question 8.

பாடாண் திணை பிரித்து எழுதுக.

அ) பாடாண் + திணை

ஆ) பாடாண் + ஆண் + திணை

இ) பாடு + ஆண் + திணை

ஈ) பாட + ஆண் + திணை

Answer:

இ)பாடு+ஆண்+திணை

Question 9.

காஞ்சி என்பது ஒரு வகை …………………….

அ) நெடுமரம்

ஆ) குறுமரம்

இ) குறுஞ்செடி

ஈ) புதர்ச்செடி

Answer:

ஆ) குறுமரம்

Question 10.

போரைத் தொடங்கும் நிகழ்வாகக் கருதப்படுவது …………………….

அ) கோட்டை வளைத்தல்

ஆ) போரிடல்

இ) ஆநிரை கவர்தல்

ஈ) கோட்டை காத்தல்

Answer: இ) ஆநிரை கவர்தல்

Question 11.

மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த போது ……………………. சொத்தாகக் கருதினர்.

அ) கோட்டையை

ஆ) ஆநிரைகளை

இ) நிலத்தை

ஈ) வீரத்தை

Answer:

ஆ) ஆநிரைகளை

Question 12.

மன்னனது போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடும் திணை …………………….

அ) பாடாண் திணை

ஆ) பொதுவியல் திணை

இ) வாகைத் திணை

ஈ) நொச்சித் திணை

Answer: 

அ) பாடாண் திணை

Question 13.

அன்பின் ஐந்திணை பற்றியது ……………………. ஆகும்.

அ) அகப்பொருள்

ஆ) புறப்பொருள்

இ) நுண்பொருள்

ஈ) ஐவகைநிலம்

Answer: 

அ) அகப்பொருள்

Question 14.

கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்பது …………………….

அ) வெட்சி

ஆ) வஞ்சி

இ) கரந்தை

ஈ) உழிஞை

Answer: 

இ) கரந்தை




Question 15.

பொருத்துக.

1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்

2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்

3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்

4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.

பொருத்துக.

1. நொச்சித்திணை – அ) கோட்டையைக் கவர கோட்டையைச் சுற்றி வளைத்தல்

2. உழிஞைத்திணை – ஆ) கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடல்

3. தும்பைத்திணை – இ) இருபெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது

4. வாகைத்திணை – ஈ) போரில் வெற்றி

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ



Question 17.

பொருத்துக.

1. பாடாண்திணை – அ) வெட்சி முதல் பாடாண் வரை கூறப்படாத செய்திகள்

2. பொதுவியல் திணை – ஆ) ஆளுமையாளரின் கல்வி முதலானவற்றைப் புகழ்ந்து பாடல்

3. கைக்கிளை – இ) பொருந்தாக் காமம்

4. பெருந்திணை – ஈ) ஒருதலைக்காமம்

அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 18.

பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் …………………….

அ) 8

ஆ) 12

இ) 6

ஈ) 4

Answer:

அ) 8


Question 19.

பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் …………………….

அ) 8

ஆ) 12

இ) 6

ஈ) 4

Answer:

ஈ) 4

Question 20.

அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள்

அ) கைக்கிளை, பெருந்திணை

ஆ) பொதுவியல், பாடாண்

இ) வெட்சி, கரந்தை

ஈ) நொச்சி, உழிஞை

Answer:

அ) கைக்கிளை, பெருந்திணை

Question 21.

முடக்கத்தான் (முடக்கொற்றான்) என்பது …………………….

அ) உழிஞைப் பூ

ஆ) தும்பைப் பூ

இ) வெட்சிப் பூ

ஈ) நொச்சிப் பூ

Answer:

அ) உழிஞைப் பூ

Question 22.

மருத நிலத்திற்குரியப்பூ …………………….

அ) உழிஞைப் பூ

ஆ) தும்பைப்பூ

இ) வெட்சிப்பூ

ஈ) நொச்சிப்பூ

Answer:

ஈ) நொச்சிப்பூ

Question 23.

பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) வெட்சித்திணை – ஆநிரை கவர்தல்

ஆ) கரந்தைத்திணை – ஆநிரை மீட்டல்

இ) வஞ்சித்திணை – மண்ணாசை காரணமாக போர்

ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்

Answer:

ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்

Question 24.

பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) காஞ்சித்திணை – எதிர்த்துப் போரிடல்

ஆ)நொச்சித்திணை – கோட்டை காத்தல்

இ) உழிஞைத்திணை – மதில் வளைத்தல்

ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி

Answer:

ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி

Question 25.

இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச்சூடிப் போரிடுவதன் காரணம்……………………..

அ) நாட்டைக் கைப்பற்றல்

ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல்

ஈ) கோட்டையை முற்றுகையிடல்

Answer:

இ) வலிமையை நிலைநாட்டல்




Pdf Dowbload


சித்தாளு

 

வானுயர்ந்த கட்டடங்களைப் பார்த்து வியக்கிறோம். அதிசயம் என்றும் போற்றுகிறோம் . அதை உருவாக்க உழைத்தவர், வியர்த்தவர், இடுப்பொடியப் பாடுப்பட்டவர்களை நினைத்ததுண்டா? அந்த ஏழைகளின் துயரை, ஏங்கிடும் அவர் வாழ்வை அவர்களின் பசிக்குறி முகங்களை நொடியேனும் நினைப்பதுண்டா? இன்னலிலே இருக்கும் தொழிலாளர்கள் நிலையைக் கவிஞர்கள் நினைக்கிறார்கள்.தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாத செங்கற்களைப் போலவே இருக்கும் கல்மனங்களுக்குள் மனிதத்தைப் புகுத்திவிடுகிறார்கள்.





நூல் வெளி


முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்; இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர். மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலையும் படைத்துள்ளார்.



வியாழன், 23 ஜூன், 2022

ஜெயகாந்தன்



கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் அவர்; சிறுகதை, புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி என எதைத் தொட்டாலும் தனிமுத்திரை பதித்தவர்; இலக்கியத்திற்கான பெரும் விருதுகளை வென்றவர். மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ஜெயகாந்தன். அவரது காந்தத் தன்மையுடைய எழுத்தை நினைவூட்டும் வகையில் அவரது படைப்புப் புதையலிலிருந்து சில மணிகளைத் தொடுத்து ஜெயகாந்தம் என்னும் நினைவு இதழ் உருவாக்கப்பட்டுள்ளது.

 



pdf download



புதன், 22 ஜூன், 2022

பா -வகை, அலகிடுதல்


 எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப் பாக்கள் உள்ளன. யாப்பின் உறுப்புகள் குறித்து கடந்த ஆண்டில் கற்றதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.


பாக்களுக்கு உரிய ஓசைகளைப் பற்றி முதலில் அறிந்துகொள்வோம். பாக்களை ஓசைகளைக் கொண்டே அறியலாம். ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது. ஓசையானது செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்று நான்கு வகைப்படும்.

செப்பல் ஓசை

செப்பலோசை வெண்பாவிற்குரியது. அறம் கூறும், குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.

அகவல் ஓசை

அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா.

சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.

துள்ளல் ஓசை

செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல் ஓசை. இது கலிப்பாவுக்கு உரியது.

தூங்கல் ஓசை

தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது.

முன் வகுப்பில் கற்ற ஏழு வகைத் தளைகளையும் நீங்கள் நினைவுகூர்தல் நல்லது.

பா வகைகள்

குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்று ஐந்துவகை வெண்பாக்கள் உள்ளன.

நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்று நான்கு வகை ஆசிரியப்பாக்கள் உள்ளன.








மேற்சொன்னவற்றுள் வெண்பாவின் இலக்கணத்தையும் அலகிடும் முறையினையும் தெரிந்துகொள்வோம்.

குறள்

குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதலடி நான்கு சீராகவும் (அளவடி) இரண்டாம் அடி மூன்று சீராகவும் (சிந்தடி) வரும்.

அலகிடுதல்

செய்யுளின் சீரை அசை பிரித்து நேரசை, நிரையசை என்று பகுத்துக் காண்பதை முன் வகுப்பில் அறிந்துள்ளோம்.

அலகிடுதல் என்பது சீரைப் பிரித்து அசை பார்த்து, அசைக்கேற்ற வாய்பாடு காணுதல்.







அலகிடுதல்

(எ. கா)


உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.





திங்கள், 20 ஜூன், 2022

காலக்கணிதம்



 

நூல் வெளி

'காலக்கணிதம்' என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

'முத்தையா' என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். இவரது பெற்றோர் சாத்தப்பன் விசாலாட்சி ஆவர். 1949ஆம் ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன். இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர். சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.


ஞானம்

 




நூல் வெளி

நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட கவிதை தி.சொ.வேணுகோபாலனின் 'கோடை வயல்' என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் திருவையாற்றில் பிறந்தவர்; மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்; 'எழுத்து' காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர். இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு மீட்சி விண்ணப்பம்.

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...