வெள்ளி, 27 அக்டோபர், 2023

tnpsc group 4 exam NOTIFICATION

TNPSC CHANNEL




NOTIFICATION  click here



 ஆறாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf ✅கிளிக் செய்யுங்கள்

FULL VIDEO LINK✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅ கிளிக் செய்யுங்கள்


ஏழாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Full Video Link ✅கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅கிளிக் செய்யுங்கள்



எட்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅



ஒன்பதாம் வகுப்பு தமிழ்புத்தகம்

பத்தாம் வகுப்பு தமிழ்புத்தகம்


பதினோராம் வகுப்பு தமிழ்புத்தகம்


பனிரெண்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்


குறிப்பு : விற்பனைக்கு அல்ல
நோக்கம் : ஏழை எளிய நண்பர்களும் அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்.


தொகுப்பாளர் 
R. சரண்ராஜ்





புதன், 25 அக்டோபர், 2023

தாலுகா அலுவலகங்களில் வேலை வாய்ப்பு

 ந்தியாவில் உள்ள தாலுகா அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆட்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.






புதன், 18 அக்டோபர், 2023

Grade-I included in Group-VII-A Services

 

                          TNPSC CHANNEL





Notification : click here

Apply :   click here        



TNPSC Jobs; தமிழ்நாடு அரசு வேலை; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNPSC அறிவிப்பு; தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு; இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் நிலை-1 (Executive Officer, Grade-Iபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

செயல் அலுவலர் நிலை-1

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல் அல்லது வணிகவியலில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700 – 1,38,500

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 30 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.


தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு மூன்று தாள்களாக நடைபெறும். முதல் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்ப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். இதில் பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாளில் இந்துமதம், சைவம் மற்றும் வைணவம் பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

மூன்றாம் தாளில் சட்டம் சம்பந்தமான வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 06.01.2024, 07.01.2024

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.


மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2023

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

TNbooks materials

                        TNPSC CHANNEL





Notificationclick here

Apply :   click here        








ஆறாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf ✅கிளிக் செய்யுங்கள்

FULL VIDEO LINK✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅ கிளிக் செய்யுங்கள்


ஏழாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Full Video Link ✅கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅கிளிக் செய்யுங்கள்



எட்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅



ஒன்பதாம் வகுப்பு தமிழ்புத்தகம்

பத்தாம் வகுப்பு தமிழ்புத்தகம்


பதினோராம் வகுப்பு தமிழ்புத்தகம்


பனிரெண்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்


குறிப்பு : விற்பனைக்கு அல்ல
நோக்கம் : ஏழை எளிய நண்பர்களும் அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்.


தொகுப்பாளர் 
R. சரண்ராஜ்





ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

Sri Valeeswarar Temple (அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்)

 


கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் இறைவன் வாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். வாலி வழிபட்ட தலமாதலால் வாலீஸ்வரர் எனப் பெயர் பெற்றது. வாலி மிகச் சிறந்த சிவ பக்தன். ஒரு சமயம் வாலி சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தான். இதைக் கேள்விப்பட்ட இராவணன் தன்னை விட சிறந்த சிவ பக்தனான வாலி மீது பொறாமை கொண்டு வாலியின் தவத்தைக் கலைக்க எண்ணி பின்புறமாக மறைந்து வந்து தவம் செய்த வாலியினை பின்பக்கம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாலியை எங்கேயும் செல்ல விடாமல் தடுக்க முயற்சித்தான். இதனை உணர்ந்த வாலி தனது வாலினால் ராவணனை உடல் முழுவதும் சுற்றி கட்டி வாலில் தொங்கவிட்டபடி தனது பூஜைகளை குறித்த நேரத்தில் முடித்து விட்டார். தனது மகன் அங்கதன் விளையாடும் பொருட்டு அவனது தொட்டிலின் மேலே தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை காட்டினான். இதனை கேள்விப்பட்டு இராவணன் மனைவி மண்டோதரி வாலியிடம் மடிப்பிச்சை கேட்டு இராவணனை அழைத்துச் சென்றாள். பின்னாளில் தனது மக்களுக்கு இராவணன் மூலம் எந்தத் துன்பமும் வராமல் தடுக்க தனது ஞான சக்தியால் தெற்கு திசை நோக்கி (இலங்கையை நோக்கி) சனீஸ்வரர் பார்வை பட்டுக் கொண்டே இருக்கும்படி தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்தார். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். 

 



பலன்கள்:

தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும், செவ்வாய் தோஷ நிவர்த்திக்காகவும், சனி தோஷ நிவர்திக்காகவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காகவும், தீராத நோய்கள் விரைவில் குணமாகவும், முக்தி கிடைக்கவும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு பலனடையலாம் என்பது நம்பிக்கை. 




இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

விழுப்புரம் புதுச்சேரி சாலையில் விழுப்புரத்திலிருந்து 7KM தொலைவில் கோலியனூர் உள்ளது. விழுப்புரம் புதுச்சேரி மார்கத்தில் செல்லும் அணைத்து பேருந்துகளும் கோலியனூரில் நின்று செல்லும். 



தங்கும் வசதி:

விழுப்புரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம். விழுப்புரத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 

 


கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர், விழுப்புரம்


கோவில் வீடியோ பதிவு பார்க்க

 க்ளிக் செய்யுங்கள்

புதன், 6 செப்டம்பர், 2023

10th std social science pdf

 


பத்தாம் வகுப்பு

சமூக அறிவியல்

அலகு 1





இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

DOWNLOAD PDF click here to download

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

tnpsc notification 2023

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission. மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957இல் இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” என்று மாறிவிட்டது.



tnpsc notification 2023  க்ளிக் செய்யுங்கள்

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...