புதன், 27 ஜூலை, 2022

TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை

   




TNPSC CHANNEL

பொதுத்தமிழ் வினா விடை



TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை

Question 1.

ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் ……………..

அ) பொன்னுசாமி

ஆ) சரவணன்

இ) சரபையர்

ஈ) சிவஞானி

Answer: இ) சரபையர்

Question 2.

காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு ……………..

அ) 1806       ஆ) 1906

இ) 1916         ஈ) 1919

Answer: ஆ) 1906

Question 3.

ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் ……………..

அ) சொல்லின் செல்வர்

ஆ) நாவலர்

இ) சிலம்புச் செல்வர்

ஈ) சிலம்பு அறிஞர்

Answer: இ) சிலம்புச் செல்வர்

Question 4.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……………..

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

ஆ) மனுமுறை கண்ட வாசகம்

இ) எனது போராட்டம்

ஈ) வானம் வசப்படும்

Answer:

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

Question 5.

சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..

அ) அறநெறிக் காலம்

ஆ) மன்னர் காலம்

இ) பக்திக் காலம்

ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்

Answer: அ) அறநெறிக் காலம்

Question 6.

உதவி செய்தலை ‘உதவியாண்மை’ என்று குறிப்பிட்டவர்…………

அ) ஈழத்துப் பூதன் தேவனார்

ஆ) நக்கீரர்

இ) திருமுடிக்காரி

ஈ) கபிலர்

Answer: அ) ஈழத்துப் பூதன் தேவனார்

Question 7.

‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்…………

அ) கலித்தொகை

ஆ) குறுந்தொகை

இ) ஐங்குறுநூறு

ஈ) பரிபாடல்

Answer: அ) கலித்தொகை

Question 8.

பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்……………

அ) கபிலர்

ஆ) ஔவையார்

இ) நக்கீரர்

ஈ) பரணர்

Answer:

ஈ) பரணர்

Question 9.

‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் 

அ) நக்கீரர்

ஆ) கபிலர்

இ) பெரும்பதுமனார்

ஈ) நல்வேட்டனார்

Answer:

இ) பெரும்பதுமனார்

Question 10.

‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் 

அ) கலித்தொகை

ஆ) புறநானூறு

இ) நற்றிணை

ஈ) கொன்றை வேந்தன்

Answer:

இ) நற்றிணை

Question 11.

சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் ………………….

அ) புறநானூறு

ஆ) பரிபாடல்

இ) பதிற்றுப்பத்து

ஈ) சிலப்பதிகாரம்

Answer: இ) பதிற்றுப்பத்து

Question 12.

தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று திருமுடிக்காரியைப் பாராட்டியவர்

அ) கம்ப ர்

ஆ) கபிலர்

இ) ஒளவையார்

ஈ) நல்வேட்டனார்

Answer:

ஆ) கபிலர்

Question 13.

இரவலர் வராவிட்டாலும் தேடி வரவழைத்துக் கொடுக்கும் மன்னன் ………………….

அ) அதியன்

ஆ) திருமுடிக்காரி

இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

ஈ) நல்வேட்டனார்

Answer: இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

Question 14.

காஞ்சி மாநகரத்து சிற்றரசரே ………………….என்றும் சமயப் பெயர் கண்டார்.

அ) தர்மர்

ஆ) கன்பூசியஸ்

இ) போதி தர்மர்

ஈ) புத்தர்

Answer: இ) போதி தர்மர்

Question 15.

‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்றழைக்கப்பட்டவர் 

அ) அமைச்சர்கள்

ஆ) மன்னர்கள்

இ) புலவர்கள்

ஈ) சான்றோர்கள்

Answer: அ) அமைச்சர்கள்

Question 16.

தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதைக் குறிப்பிட்ட புலவர் ………………….

அ) மாங்குடி மருதனார்

ஆ) பரணர்

இ) ஆவூர் மூலங்கிழார்

ஈ) நக்கீரர்

Answer:

இ) ஆவூர் மூலங்கிழார்

Question 17.

குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிய புலவர் ………………….

அ) மாங்குடி மருதனார்

ஆ) பரணர்

இ) ஆவூர் மூலங்கிழார்

ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்

Answer: ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்

Question 18.

‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ எனக் குறிப்பிடும் நூல்.

அ) புறநானூறு

ஆ) பதிற்றுப்பத்து

இ) பரிபாடல்

ஈ) நற்றிணை

Answer: அ) புறநானூறு

Question 19.

உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் நீக்குவது தான் என்றவர் ………………….

அ) நல்வேட்டனார்

ஆ) பரணர்

இ) ஆவூர் மூலங்கிழார்

ஈ) நக்கீரர்

Answer: அ) நல்வேட்டனார்

Question 20.

ஈதல் பற்றியச் செய்திகளைக் கூறும் அகஇலக்கியம் ………………….

அ) கலித்தொகை

ஆ) குறுந்தொகை

இ) அகநானூறு

ஈ) நற்றிணை

Answer: அ) கலித்தொகை




PDF DOWNLOAD




 


மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்



*******







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...