ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

7th new syllabus in science |

                TNPSC CHANNEL

                    ஏழாம் வகுப்பு அறிவியல்

               முதல் பருவம்

அலகு 2 விசையும் இயக்கமும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.

ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி.

அ) சுழி      ஆ) r

இ) 2r          ஈ) r/2

விடை: இ) 2r

Question 2.

கீழே கொடுக்கப்பட்டுள்ள திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது

அ) சீரான இயக்கத்தில் உள்ளது.

ஆ) ஓய்வு நிலையில் உள்ளது.

இ) சீரற்ற இயக்கத்தில் உள்ளது.

ஈ) சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.

விடை:

ஈ) சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.

Question 3.

கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினைக் குறிக்கிறது.

 

விடை:

 

Question 4.

ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது

அ) சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்.

ஆ) சிறுவனின் இயக்கம் முடுக்கப்படாத இயக்கமாகும்.

இ) சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.

ஈ) சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்.

விடை: ஈ) சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்.


Question 5.

ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?

அ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.

ஆ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்.

இ) பொருளின் உயரத்தினை அதிகரித்தல்.

ஈ) பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்.

விடை:

அ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை குறைத்தல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த தூரம் ___________ எனப்படும்.

விடை:

இடப்பெயர்ச்சி

Question 2.

திசைவேகம் மாறுபடும் வீதம் ___________ ஆகும்.

விடை:

முடுக்கம்

Question 3.

ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் ______________ முடுக்கத்தினைப் பெற்றிருக்கிறது என்கிறோம்.

விடை:

நேர் முடுக்கம்

Question 4.

வேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு ____________ மதிப்பனைத் தருகிறது.

விடை:

முடுக்கம்

Question 5.

ஒரு பொருள் நகர்த்தப்படும்போது ______________ சமநிலையில் அதன் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.

விடை:

நடுநிலை

III.பொருத்துக



IV. ஒப்புமை தருக

Question 1.

திசைவேகம் : மீட்டர்/விநாடி :: முடுக்கம் : ____________

விடை: மீ / வி2

Question 2.

அளவுகோலின் நீளம் : மீட்டர் :: வானூர்தியின் வேகம் : ___________

விடை:

நாட்

Question 3.

இடப்பெயர்ச்சி/காலம் : திசைவேகம் :: தொலைவு/காலம் : ___________

விடை:

வேகம்   

   





சனி, 3 செப்டம்பர், 2022

7th new syllabus in science guide pdf

 TNPSC CHANNEL

     ஏழாம் வகுப்பு அறிவியல்

         முதல் பருவம்

அலகு 3 சுற்றியுள்ள பருப்பொருள்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.

கீழ்க்கண்டவற்றுள் உலோகம் எது?

அ) இரும்பு          ஆ) ஆக்சிஜன்

இ) ஹீலியம்        ஈ) தண்ணீ ர்

விடை: அ) இரும்பு

Question 2.

ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் எதற்கான உதாரணம்?

அ) உலோகம்                           ஆ) அலோகம்

இ) உலோகப்போலிகள்         ஈ) மந்த வாயுக்கள்

விடை: ஆ) அலோகம்

Question 3.

கீழ்க்கண்டவற்றுள் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறைக் குறிக்கக்கூடிய எளிய மற்றும் அறிவியல் பூர்வமான முறை.

அ) கணித வாய்ப்பாடு

ஆ) வேதியியல் வாய்ப்பாடு

இ) கணிதக் குறியீடு

ஈ) வேதியியல் குறியீடு

விடை:

ஆ) வேதியியல் வாய்ப்பாடு

Question 4.

அறை வெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் எது?

அ) குளோரின்

ஆ) சல்பர்

இ) பாதரசம்

ஈ) வெள்ளி

விடை:

இ) பாதரசம்

Question 5.

எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

அ) அலோகம்

ஆ) உலோகம்

இ) உலோகப்போலிகள்

ஈ) வாயுக்கள்

விடை:

ஆ) உலோகம்


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

ஒரு பருப்பொருளின் தனித்துக் காணப்படக்கூடிய மிகச் சிறிய துகள்

விடை: அணு

Question 2.

ஒரு கார்பன் அணு மற்றும் இரண்டு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட __________ சேர்மம்

விடை:

கார்பன் டை ஆக்சைடு

Question 3.

_____________ மின்சாரத்தைக் கடத்தும் ஒரே அலோகம்.

விடை: கிராஃபைட்

Question 4.

தனிமங்கள் _____________ வகையான அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

விடை: ஒரே

Question 5.

சில தனிமங்களின் _______________ லத்தீன் அல்லது கிரேக்கப் பெயர்களிலிருந்து பெறப்படுகின்றன.

விடை: குறியீடுகள்

Question 6.

இதுவரை அறியப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை __________.

விடை: 118

Question 7.

தனிமங்கள் தூய பொருள்களின் ____________ வடிவம்.

விடை: எளிமையான

Question 8.

தனிமங்களின் பெயரை எழுதும்போது முதல் எழுத்தை எப்போதுமே 

விடை: பெரிய



Question 9.

மூன்றுக்கும் மேற்பட்ட அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகளை _____________ மூலக்கூறுகள் என்று அழைக்கலாம்.

விடை:

பல அணு

Question 10.

_____________ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.

விடை:

நைட்ரஜன்


III. ஒப்புமை தருக

Question 1.

பாதரசம் : அறை வெப்பநிலையில் திரவம் :: ஆக்சிஜன் : ____________

விடை: அறை வெப்பநிலையில் வாயு

Question 2.

மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் : _____________ :: மின்சாரத்தைக் கடத்தும் உலோகம் : தாமிரம்.

விடை: கிராஃபைட்

Question 3.

தனிமங்கள் : இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன :: சேர்மங்கள் : ______________

விடை:

சிதைந்து தனிமங்களை உருவாக்குகின்றது

Question 4.

அணுக்கள் : ஒரு தனிமத்தின் அடிப்படைத் துகள் :: ______________ : ஒரு சேர்மத்தின் அடிப்படைத் துகள்.

விடை:

மூலக்கூறுகள்



IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.

Question 1.

இரண்டு வேறுபட்ட தனிமங்களில் ஒரே விதமான அணுக்களைக் கொண்டிருக்கலாம்.

விடை:

தவறு. இரண்டு வேறுபட்ட தனிமங்களில் வெவ்வேறு விதமான அணுக்கள் இருக்கும்.

Question 2.

தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் தூய பொருள்களாகும்.

விடை :

சரி

Question 3.

அணுக்கள் தனித்து இருக்க முடியாது; அவை மூலக்கூறுகள் எனப்படும் குழுக்களாகவே உள்ளன.

விடை:

தவறு. அணுக்கள் தன்னிச்சையாக இருக்க முடியும்



Question 4.

NaCl என்பது ஒரு சோடியம் குளோரைடு மூலக்கூறைக் குறிக்கிறது.

விடை:

தவறு. சோடியம் குளோரைடில் (NaCl)ல் ஒரு சோடியம் அணு மட்டுமே உள்ளது

Question 5.

ஆர்கான் வாயு ஓரணு வாயுவாகும்

விடை:

சரி




  


வியாழன், 1 செப்டம்பர், 2022

6th new syllabus in science

                                     TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                    மூன்றாம் பருவம்



அலகு 6 வன்பொருளும் மென்பொருளும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?

அ) தாய்ப்ப லகை

ஆ) SMPS

இ) RAM

ஈ) MOUSE

விடை:

ஈ) MOUSE

Question 2.

கீழ்வருவனவற்றுள் எவை சரியானது?

அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.

ஆ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்

இ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்

விடை:

அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்


Question 3.

LINUX என்பது

அ) கட்டண மென்பொருள்

ஆ) தனிஉரிமை மென்பொருள்

இ) கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்

ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

விடை:

ஈ) கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள்

Question 4.

கீழ்வருவனவற்றுள் எவை கட்டண மற்றும் தனி உரிமை மென் பொருள்?

அ) WINDOWS

ஆ) MACOS

இ) Adobe Photoshop

ஈ) இவை அனைத்தும்

விடை:

ஈ) இவை அனைத்தும்

Question 5.

______ என்பது ஒரு இயங்குதளமாகும்.

அ) ANDROID

ஆ) Chrome

இ) Internet

ஈ) Pendrive

விடை:

அ) ANDROID











புதன், 31 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                    TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                    மூன்றாம் பருவம்


அலகு 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

அ) வாத்து                  ஆ) கிளி

இ) ஓசனிச்சிட்டு       ஈ) புறா

விடை: இ) ஓசனிச்சிட்டு

Question 2.

இயற்கையான கொசு விரட்டி

அ) ஜாதிக்காய்

ஆ) மூங்கில்

இ) இஞ்சி

ஈ) வேம்பு

விடை: ஈ) வேம்பு

Question 3.

பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

அ) உருளைக்கிழங்கு

ஆ) கேரட்

இ) முள்ளங்கி

ஈ) டர்னிப்

விடை:

அ) உருளைக்கிழங்கு


Question 4.

பின்வருவனவற்றுள் எது வைட்டமின் ‘C’ குறைபாட்டைப் போக்குகிறது?

அ) நெல்லி

ஆ) துளசி

இ) மஞ்சள்

ஈ) சோற்று கற்றாழை

விடை:

அ) நெல்லி

Question 5.

இந்தியாவின் தேசிய மரம் எது?

அ) வேப்பமரம்

ஆ) பலா மரம்

இ) ஆலமரம்

ஈ) மாமரம்

விடை:

இ) ஆலமரம்









II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _____ ஆம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

விடை:

16

Question 2.

______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.

விடை:

பருத்தி

Question 3.

நான் தமிழ்நாட்டின் மாநில மரம் நான் யார்? _______

விடை:

பனை

Question 4.

______ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.

விடை:

துளசி

Question 5.

அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ண க் கூடிய பருப்புகள் (அ) விதைகள் ______ எனப்படுகின்றன.

விடை:

பயிறு வகைகள்


III. சரியா? தவறா? தவறாக இருந்தால் சரியாக விடையை எழுதுக.

Question 1.

அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.

விடை:

தவறு. அலங்காரத் தாவரங்கள்

Question 2.

பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன.

விடை:

சரி

Question 3.

அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.

விடை:

தவறு – உணவு தாவரம்.

Question 4.

கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.

விடை:

தவறு – கோடை காலத்திற்கு பருத்தி உடைகள் தான் ஏற்றவை.

Question 5.

கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது.

விடை:

தவறு – சர்க்கரை தயாரிக்க பயன்படுகிறது.




V. ஒப்பிடுக.

Question 1. 

மாம்பழம் : கனி :: மக்காச்சோளம் : _______

விடை:

தானியம்

Question 2.

தென்னை : நார் :: ரோஜா : _____

விடை:

அத்தர்

Question 3.

தேனீக்கள் : மகரந்தச் சேர்க்கையாளர் :: மண்புழு : ______

விடை: மண்புழு உரம் தயாரிப்பாளர்


                  




 


செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

               TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                    மூன்றாம் பருவம்

அலகு 4 நமது சுற்றுசூழல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.

அ) குளம்       ஆ) ஏரி

இ) நதி             ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

Question 2.

உற்பத்தியாளர்கள் எனப்படுவை.

அ) விலங்குகள்

ஆ) பறவைகள்

இ) தாவரங்கள்

ஈ) பாம்புகள்

விடை: இ) தாரவங்கள்

Question 3.

உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு

அ) நெகிழி

ஆ) சமையலறைக் கழிவுகள்

இ) கண்ணாடி

ஈ) அலுமினியம்

விடை:

ஆ) சமையலறைக் கழிவுகள்

Question 4.

காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

அ) மறு சுழற்சி

ஆ) மீண்டும் பயன்படுத்துதல்

இ) மாசுபாடு

ஈ) பயன்பாட்டைக் குறைத்தல்

விடை: இ) மாசுபாடு

Question 5.

களைக்கொல்லிகளின் பயன்பாடு _____ மாசுபாட்டை உருவாக்கும்.

அ) நில மாசுபாடு

ஆ) நீர் மாசுபாடு

இ) இரைச்சல் மாசுபாடு

ஈ) அ மற்றும் ஆ

விடை: ஈ) அ மற்றும் ஆ


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

தாவரங்களை உண்பவை ———- நிலை நுகர்வோர்கள் ஆகும்.

விடை: முதல்

Question 2.

சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _____ காரணிகள் ஆகும்.

விடை:

காலநிலைக்

Question 3.

______ என்ற நிகழ்வின் மூலம் கழிவுப் பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.

விடை:

மறு சுழற்சி

Question 4.

நீர் மாசுபாடு மனிதனுக்கு _____ நோயை உருவாக்குகிறது.

விடை:

தீங்கு விளைவிக்கும்

Question 5.

3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல் _____ மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது.

விடை:

மீண்டும் பயன்படுத்துதல்


III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசிபிக் பெருங்கடல் ஓர் எடுத்துக்காட்டாகும்.

விடை :

சரி.

Question 2.

பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.

விடை:

சரி.

Question 3.

மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு எடுத்துக் காட்டு

விடை: தவறு – கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும் உயிரினச் சிதைவுக்கு உள்ளாகும் கழிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Question 4.

அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.

விடை :

தவறு – அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால், நீர் நில மாசுபாடு உருவாகும்.


Question 5.

பள்ளியின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.

விடை :

தவறு – திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்க வேண்டும்.






V. சரியான வரிசையில் எழுதி, உணவுச் சங்கிலியை உருவாக்கு.

Question 1.

முயல் → கேரட் → கழுகு → பாம்பு

விடை:

கேரட் → முயல் → பாம்பு → கழுகு

Question 2.

மனிதன் → பூச்சி → ஆல்கா → மீன்

விடை:

ஆல்கா → பூச்சி → மீன் → மனிதன்


     




திங்கள், 29 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                    TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்


அலகு 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

சோப்புகளின் முதன்மை மூலம் _____ ஆகும்.

அ) புரதங்கள்

ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

இ) மண்

ஈ) நுரை உருவாக்கி

விடை:

ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

Question 2.

வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு கரைசல் பயன்படுகிறது.

அ) பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு

ஆ) சோடியும் ஹைட்ராக்ஸைடு

இ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்

ஈ) சோடியம் குளோரைடு

விடை:

ஆ) சோடியம் ஹைட்ராக்ஸைடு



Question 3.

சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _____ ஆகும்.

அ) விரைவாக கெட்டித்தன்மையடைய

ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த

இ) கடினமாக்க

ஈ) கலவையை உருவாக்க

விடை:

ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த

Question 4.

பீனால் என்பது ______

அ) கார்பாலிக் அமிலம்

ஆ) அசிட்டிக் அமிலம்

இ) பென்சோயிக் அமிலம்

ஈ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்

விடை:

அ) கார்பாலிக் அமிலம்

Question 5.

இயற்கை ஒட்டும் பொருள் ______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.

அ) புரதங்க ளில்

ஆ) கொழுப்புகளில்

இ) ஸ்டார்ச்சில்

ஈ) வைட்டமின்களில்

விடை:

இ) ஸ்டார்ச்சில்



II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

வெங்காயம் நறுக்கும் போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமான வாயு ______ ஆகும்.

விடை:

ஆக்சைடு

Question 2.

சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் ______ தேவைப்படுகின்றது.

விடை:

NaOH

Question 3.

உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது ______ ஆகும்

விடை:

மண்புழு

Question 4.

சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _____ உரங்கள் ஆகும்.

விடை:

இயற்கை

Question 5.

இயற்கை பசைக்கு உதாரணம் _____ ஆகும்.

விடை:

ஸ்டார்ச்



III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.

விடை : தவறு

குறைந்த அடர்வுடைய பீனால் கிருமி நாசினியாக பயன்படுகின்றது.

Question 2.

ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றன.

விடை:

தவறு எப்சம் மருத்துவத்துறையில் அதிகளவு பயன்படுகின்றது.

Question 3.

ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது.

விடை: சரி

Question 4.

ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று பிரிக்க பயன்படுகின்றது.

விடை:தவறு – ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று ஒட்டுவதற்கு பயன்படுகின்றது.

Question 5.

NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.

விடை:

சரி


V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

1. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.

3. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.

4. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.

5. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.

6. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.

விடை:

1. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.

2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.

3. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.

4. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.

5. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

6. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.

VI. ஒப்புமை தருக.

Question 1.

யூரியா : கனிம உரம் :: மண்புழு உரம் : _____

விடை:

இயற்கை உரம்

Question 2.

______ : இயற்கை ஒட்டும் பொருள் :: செயற்கை ஒட்டும் பொருள் : செலோடேப்

விடை:

ஸ்டார்ச்

   







ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                 TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்


அலகு 2 நீர்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Question 1.

உலகில் உள்ள மொத்த நீரில் 97% ____ ஆகும்.

அ) நன்னீ ர்

ஆ) தூயநீர்

இ) உப்புநீர்

ஈ) மாசடைந்த நீர்

விடை: 

இ) உப்புநீர்

Question 2.

பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

அ) ஆவியாதல்

ஆ) ஆவி சுருங்குதல்

இ) மழை பொழிதல்

ஈ) காய்ச்சி வடித்தல்

விடை:

ஈ) காய்ச்சி வடித்தல்



Question 3.

பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?

i) நீராவிப்போக்கு           ii) மழைபொழிதல்

iii) ஆவி சுருங்குதல்      iv) ஆவியாதல்

அ) ii) மற்றும் iii)      ஆ) ii) மற்றும் iv)

இ) i) மற்றும் iv)         ஈ) i) மற்றும் ii)

விடை: இ) i) மற்றும் iv)

Question 4.

நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

அ) பனி ஆறுகள்                    ஆ) நிலத்தடிநீர்

இ) மற்ற நீர் ஆதாரங்கள்     ஈ) மேற்பரப்பு நீர்

விடை: ஆ) நிலத்தடிநீர்

Question 5.

வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில்

அ) வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்

இ) வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

ஈ) அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

விடை:

ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.



II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ______ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.

விடை:

3%

Question 2.

நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ____ என்று பெயர்.

விடை:

ஆவியாதல்

Question 3.

நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _____ கட்டப்படுகிறது.

விடை:

அணை

Question 4.

ஆறுகளில் பாயும் நீரின் அளவு ____ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்

விடை:

மழை


Question 5.

நீர் சுழற்சியினை _____ என்றும் அழைக்கலாம்.

விடை:

ஹைட்ராலிஜிக்கல் சுழற்சி


III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை.

விடை:

தவறு – ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக உள்ளன.

Question 2.

நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.

விடை:

தவறு – கடல் நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் முகத்துவாரம் எனப்படும்.

Question 3.

சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்.

விடை:

தவறு – அனைத்து வெப்ப மூலங்களாலும் ஆவியாதல் நிகழும்.

Question 4.

குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.

விடை: சரி – உறைதலால் புற்களின் மீது பனி உருவாகும்.




Question 5.

கடல்நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.

விடை:

தவறு – கடல்நீரை நேரடியாகப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது.




V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

1. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.

2. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.

3. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.

4. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது..

5. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

6. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.

7. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.

8. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

விடை:

1. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.

2. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

3. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த்திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாகும்.

4. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிற

5. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.

6. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.

7. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.

8. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

VI. ஒப்புமை தருக.

Question 1.

மக்கள் தொகைப் பெருக்கம் : நீர் பற்றாக்குறை :: மறு சுழற்சி : _____

விடை:

நீர் மேலாண்மை


Question 2.

நிலத்தடிநீர் : ____ : மேற்பரப்பு நீர் : ஏரிகள்

விடை:

கிணறு






 


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...