புதன், 31 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                    TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                    மூன்றாம் பருவம்


அலகு 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

அ) வாத்து                  ஆ) கிளி

இ) ஓசனிச்சிட்டு       ஈ) புறா

விடை: இ) ஓசனிச்சிட்டு

Question 2.

இயற்கையான கொசு விரட்டி

அ) ஜாதிக்காய்

ஆ) மூங்கில்

இ) இஞ்சி

ஈ) வேம்பு

விடை: ஈ) வேம்பு

Question 3.

பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

அ) உருளைக்கிழங்கு

ஆ) கேரட்

இ) முள்ளங்கி

ஈ) டர்னிப்

விடை:

அ) உருளைக்கிழங்கு


Question 4.

பின்வருவனவற்றுள் எது வைட்டமின் ‘C’ குறைபாட்டைப் போக்குகிறது?

அ) நெல்லி

ஆ) துளசி

இ) மஞ்சள்

ஈ) சோற்று கற்றாழை

விடை:

அ) நெல்லி

Question 5.

இந்தியாவின் தேசிய மரம் எது?

அ) வேப்பமரம்

ஆ) பலா மரம்

இ) ஆலமரம்

ஈ) மாமரம்

விடை:

இ) ஆலமரம்









II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _____ ஆம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

விடை:

16

Question 2.

______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.

விடை:

பருத்தி

Question 3.

நான் தமிழ்நாட்டின் மாநில மரம் நான் யார்? _______

விடை:

பனை

Question 4.

______ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.

விடை:

துளசி

Question 5.

அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ண க் கூடிய பருப்புகள் (அ) விதைகள் ______ எனப்படுகின்றன.

விடை:

பயிறு வகைகள்


III. சரியா? தவறா? தவறாக இருந்தால் சரியாக விடையை எழுதுக.

Question 1.

அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.

விடை:

தவறு. அலங்காரத் தாவரங்கள்

Question 2.

பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன.

விடை:

சரி

Question 3.

அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.

விடை:

தவறு – உணவு தாவரம்.

Question 4.

கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.

விடை:

தவறு – கோடை காலத்திற்கு பருத்தி உடைகள் தான் ஏற்றவை.

Question 5.

கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது.

விடை:

தவறு – சர்க்கரை தயாரிக்க பயன்படுகிறது.




V. ஒப்பிடுக.

Question 1. 

மாம்பழம் : கனி :: மக்காச்சோளம் : _______

விடை:

தானியம்

Question 2.

தென்னை : நார் :: ரோஜா : _____

விடை:

அத்தர்

Question 3.

தேனீக்கள் : மகரந்தச் சேர்க்கையாளர் :: மண்புழு : ______

விடை: மண்புழு உரம் தயாரிப்பாளர்


                  




 


செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

               TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                    மூன்றாம் பருவம்

அலகு 4 நமது சுற்றுசூழல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.

அ) குளம்       ஆ) ஏரி

இ) நதி             ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

Question 2.

உற்பத்தியாளர்கள் எனப்படுவை.

அ) விலங்குகள்

ஆ) பறவைகள்

இ) தாவரங்கள்

ஈ) பாம்புகள்

விடை: இ) தாரவங்கள்

Question 3.

உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு

அ) நெகிழி

ஆ) சமையலறைக் கழிவுகள்

இ) கண்ணாடி

ஈ) அலுமினியம்

விடை:

ஆ) சமையலறைக் கழிவுகள்

Question 4.

காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

அ) மறு சுழற்சி

ஆ) மீண்டும் பயன்படுத்துதல்

இ) மாசுபாடு

ஈ) பயன்பாட்டைக் குறைத்தல்

விடை: இ) மாசுபாடு

Question 5.

களைக்கொல்லிகளின் பயன்பாடு _____ மாசுபாட்டை உருவாக்கும்.

அ) நில மாசுபாடு

ஆ) நீர் மாசுபாடு

இ) இரைச்சல் மாசுபாடு

ஈ) அ மற்றும் ஆ

விடை: ஈ) அ மற்றும் ஆ


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

தாவரங்களை உண்பவை ———- நிலை நுகர்வோர்கள் ஆகும்.

விடை: முதல்

Question 2.

சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _____ காரணிகள் ஆகும்.

விடை:

காலநிலைக்

Question 3.

______ என்ற நிகழ்வின் மூலம் கழிவுப் பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.

விடை:

மறு சுழற்சி

Question 4.

நீர் மாசுபாடு மனிதனுக்கு _____ நோயை உருவாக்குகிறது.

விடை:

தீங்கு விளைவிக்கும்

Question 5.

3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல் _____ மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது.

விடை:

மீண்டும் பயன்படுத்துதல்


III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசிபிக் பெருங்கடல் ஓர் எடுத்துக்காட்டாகும்.

விடை :

சரி.

Question 2.

பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.

விடை:

சரி.

Question 3.

மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு எடுத்துக் காட்டு

விடை: தவறு – கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும் உயிரினச் சிதைவுக்கு உள்ளாகும் கழிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Question 4.

அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.

விடை :

தவறு – அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால், நீர் நில மாசுபாடு உருவாகும்.


Question 5.

பள்ளியின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.

விடை :

தவறு – திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்க வேண்டும்.






V. சரியான வரிசையில் எழுதி, உணவுச் சங்கிலியை உருவாக்கு.

Question 1.

முயல் → கேரட் → கழுகு → பாம்பு

விடை:

கேரட் → முயல் → பாம்பு → கழுகு

Question 2.

மனிதன் → பூச்சி → ஆல்கா → மீன்

விடை:

ஆல்கா → பூச்சி → மீன் → மனிதன்


     




திங்கள், 29 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                    TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்


அலகு 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

சோப்புகளின் முதன்மை மூலம் _____ ஆகும்.

அ) புரதங்கள்

ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

இ) மண்

ஈ) நுரை உருவாக்கி

விடை:

ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

Question 2.

வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு கரைசல் பயன்படுகிறது.

அ) பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு

ஆ) சோடியும் ஹைட்ராக்ஸைடு

இ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்

ஈ) சோடியம் குளோரைடு

விடை:

ஆ) சோடியம் ஹைட்ராக்ஸைடு



Question 3.

சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _____ ஆகும்.

அ) விரைவாக கெட்டித்தன்மையடைய

ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த

இ) கடினமாக்க

ஈ) கலவையை உருவாக்க

விடை:

ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த

Question 4.

பீனால் என்பது ______

அ) கார்பாலிக் அமிலம்

ஆ) அசிட்டிக் அமிலம்

இ) பென்சோயிக் அமிலம்

ஈ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்

விடை:

அ) கார்பாலிக் அமிலம்

Question 5.

இயற்கை ஒட்டும் பொருள் ______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.

அ) புரதங்க ளில்

ஆ) கொழுப்புகளில்

இ) ஸ்டார்ச்சில்

ஈ) வைட்டமின்களில்

விடை:

இ) ஸ்டார்ச்சில்



II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

வெங்காயம் நறுக்கும் போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமான வாயு ______ ஆகும்.

விடை:

ஆக்சைடு

Question 2.

சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் ______ தேவைப்படுகின்றது.

விடை:

NaOH

Question 3.

உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது ______ ஆகும்

விடை:

மண்புழு

Question 4.

சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _____ உரங்கள் ஆகும்.

விடை:

இயற்கை

Question 5.

இயற்கை பசைக்கு உதாரணம் _____ ஆகும்.

விடை:

ஸ்டார்ச்



III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.

விடை : தவறு

குறைந்த அடர்வுடைய பீனால் கிருமி நாசினியாக பயன்படுகின்றது.

Question 2.

ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றன.

விடை:

தவறு எப்சம் மருத்துவத்துறையில் அதிகளவு பயன்படுகின்றது.

Question 3.

ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது.

விடை: சரி

Question 4.

ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று பிரிக்க பயன்படுகின்றது.

விடை:தவறு – ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று ஒட்டுவதற்கு பயன்படுகின்றது.

Question 5.

NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.

விடை:

சரி


V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

1. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.

3. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.

4. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.

5. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.

6. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.

விடை:

1. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.

2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.

3. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.

4. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.

5. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

6. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.

VI. ஒப்புமை தருக.

Question 1.

யூரியா : கனிம உரம் :: மண்புழு உரம் : _____

விடை:

இயற்கை உரம்

Question 2.

______ : இயற்கை ஒட்டும் பொருள் :: செயற்கை ஒட்டும் பொருள் : செலோடேப்

விடை:

ஸ்டார்ச்

   







ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                 TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்


அலகு 2 நீர்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Question 1.

உலகில் உள்ள மொத்த நீரில் 97% ____ ஆகும்.

அ) நன்னீ ர்

ஆ) தூயநீர்

இ) உப்புநீர்

ஈ) மாசடைந்த நீர்

விடை: 

இ) உப்புநீர்

Question 2.

பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

அ) ஆவியாதல்

ஆ) ஆவி சுருங்குதல்

இ) மழை பொழிதல்

ஈ) காய்ச்சி வடித்தல்

விடை:

ஈ) காய்ச்சி வடித்தல்



Question 3.

பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?

i) நீராவிப்போக்கு           ii) மழைபொழிதல்

iii) ஆவி சுருங்குதல்      iv) ஆவியாதல்

அ) ii) மற்றும் iii)      ஆ) ii) மற்றும் iv)

இ) i) மற்றும் iv)         ஈ) i) மற்றும் ii)

விடை: இ) i) மற்றும் iv)

Question 4.

நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

அ) பனி ஆறுகள்                    ஆ) நிலத்தடிநீர்

இ) மற்ற நீர் ஆதாரங்கள்     ஈ) மேற்பரப்பு நீர்

விடை: ஆ) நிலத்தடிநீர்

Question 5.

வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில்

அ) வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்

இ) வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

ஈ) அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

விடை:

ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.



II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ______ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.

விடை:

3%

Question 2.

நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ____ என்று பெயர்.

விடை:

ஆவியாதல்

Question 3.

நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _____ கட்டப்படுகிறது.

விடை:

அணை

Question 4.

ஆறுகளில் பாயும் நீரின் அளவு ____ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்

விடை:

மழை


Question 5.

நீர் சுழற்சியினை _____ என்றும் அழைக்கலாம்.

விடை:

ஹைட்ராலிஜிக்கல் சுழற்சி


III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை.

விடை:

தவறு – ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக உள்ளன.

Question 2.

நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.

விடை:

தவறு – கடல் நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் முகத்துவாரம் எனப்படும்.

Question 3.

சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்.

விடை:

தவறு – அனைத்து வெப்ப மூலங்களாலும் ஆவியாதல் நிகழும்.

Question 4.

குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.

விடை: சரி – உறைதலால் புற்களின் மீது பனி உருவாகும்.




Question 5.

கடல்நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.

விடை:

தவறு – கடல்நீரை நேரடியாகப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது.




V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

1. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.

2. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.

3. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.

4. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது..

5. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

6. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.

7. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.

8. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

விடை:

1. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.

2. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

3. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த்திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாகும்.

4. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிற

5. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.

6. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.

7. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.

8. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

VI. ஒப்புமை தருக.

Question 1.

மக்கள் தொகைப் பெருக்கம் : நீர் பற்றாக்குறை :: மறு சுழற்சி : _____

விடை:

நீர் மேலாண்மை


Question 2.

நிலத்தடிநீர் : ____ : மேற்பரப்பு நீர் : ஏரிகள்

விடை:

கிணறு






 


சனி, 27 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                   TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்


அலகு 1 காந்தவியல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்

அ) மரக்கட்டை

ஆ) ஊசி

இ) அழிப்பான்

ஈ) காகிதத் துண்டு

விடை: ஆ) ஊசி

Question 2.

மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் _____

அ) இந்தியர்கள்

ஆ) ஐரோப்பியர்கள்

இ) சீனர்கள்

ஈ) எகிப்தியர்கள்

விடை: இ) சீனர்கள்

Question 3.

தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _____ திசையில்தான் நிற்கும்.

அ) வடக்கு – கிழக்கு       ஆ) தெற்கு – மேற்கு

இ) கிழக்கு – மேற்கு         ஈ) வடக்கு – தெற்கு

விடை:

ஈ) வடக்கு – தெற்கு

Question 4.

காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

அ) பயன்படுத்தப்படுவதால்

ஆ) பதுகாப்பாக வைத்திருப்பதால்

இ) சுத்தியால் தட்டுவதால்

ஈ) சுத்தப்படுத்துவதால்

விடை:

இ) சுத்தியால் தட்டுவதால்

Question 5.

காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி _____ அறிந்து கொள்ளமுடியும்.

அ) வேகத்தை

ஆ) கடந்த தொலைவை

இ) திசையை

ஈ) இயக்கத்தை

விடை:

இ) திசையை


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

செயற்கைக்காந்தங்கள் ____, ____, ______ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.

விடை:

நீள்கோளம், வட்டம், உருளை



Question 2.

காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _____ எனப்படுகின்றன.

விடை:

காந்தப்பொருள்கள்

Question 3.

காகிதம் _____ பொருளல்ல.

விடை: காந்த தன்மை உள்ள

Question 4.

பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய _____ கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.

விடை: காந்தக்கல்

Question 5.

ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் _____ துருவங்கள் இருக்கும்.

விடை: இரு



III. சரியா? தவறா? தவறெனில் சரிசெய்து எழுதுக.

Question 1.

உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு.

விடை:

தவறு.

உருளைவடிவ காந்தத்திற்கு இரு துருவங்கள் உண்டு.

Question 2.

காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.

விடை: சரி.

Question 3.

காந்தத்தினை இரும்புத்துகள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.

விடை: தவறு – துருவப்பகுதிகளில் ஒட்டிக் கொள்ளும்.

Question 4.

காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.

விடை:

தவறு – காந்த ஊசியைப் பயன்படுத்தி வடக்கு – தெற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.

Question 5.

இரப்பர் ஒரு காந்தப்பொருள்.

விடை: தவறு – இரப்பர் ஒரு காந்தப் பொருள் அல்ல.










PDF DOWNLOAD

                   


வியாழன், 25 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                   TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்

அலகு 7 கணினியின் பாகங்கள்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

உள்ளீட்டுக்கருவி அல்லாது எது?

அ) சுட்டி

ஆ) விசைப்பலகை

இ) ஒலிபெருக்கி

ஈ) விரலி

விடை:

இ) ஒலிபெருக்கி

Question 2.

மையச் செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

அ) ஈதர்நெட் (Ethernet)

ஆ) வி.ஜி.ஏ. (VGA)

இ) எச்.டி.எம்.ஐ (HDMI)

ஈ) யு.எஸ்.பி (USB)

விடை: ஆ) வி.ஜி.ஏ. (VGA)


Question 3.

கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?

அ) ஒலிபெருக்கி

ஆ) சுட்டி

இ) திரையகம்

ஈ) அச்சுப்பொறி

விடை:

ஆ) சுட்டி

Question 4.

கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

அ) ஊடலை

ஆ) மின்னலை

இ) வி.ஜி.ஏ. (VGA)

ஈ) யு.எஸ்.பி. (USB)

விடை:

அ) ஊடலை

Question 5.

விரலி ஒரு _____ ஆக பயன்படுகிறது.

அ) வெளியீட்டுக்கருவி

ஆ) உள்ளீட்டுக்கருவி

இ) சேமிப்புக்கருவி

ஈ) இணைப்புக்கருவி

விடை:

இ) சேமிப்புக்கருவி




I. கூடுதல் வினாக்கள்

Question 1.

சரியான விடையைத் தேர்ந்தெடு:1. கீழ்வருவனவற்றுள் எது கணினியின் முக்கிய பாகங்கள் அல்ல?

அ) உள்ளீட்டகம்

ஆ) வெளியீட்டகம்

இ) சுட்டி

ஈ) மையச் செயலகம்

விடை:

இ) சுட்டி

Question 2.

கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு _____ ஐ பயன்படுத்தலாம்.

அ) நகர்த்தும் உருளை

ஆ) இடது பொத்தான்

இ) வலது பொத்தான்

விடை: அ) நகர்த்தும் உருளை

Question 3.

ஒலிவடம் ______ ஐ இணைக்க பயன்படுகிறது.

அ) மையச் செயலகத்துடன் கைப்பேசி

ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை

இ) கணினி திரையை மையச் செயலகத்துடன்

ஈ) கணினியுடன் ஈதர்நெட்டை

விடை: ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை

Question 4.

கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?

அ) யு.எஸ்.பி.

ஆ) மின் இணைப்பு வடம்

இ) எச்.டி.எம்.ஐ

ஈ) அருகலை

விடை:

ஈ) அருகலை

Question 5.

நுண்கணினியை _____ என அழைக்கிறோம்.

அ) மேசைக்கணினி

ஆ) தனியாள் கணினி

இ) மடிக்கணினி

ஈ) பலகைக் கணினி

விடை:

ஆ) தனியாள் கணினி


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

____, _____, கணினியில் உள்ளீடு செய்வதற்கு விசைப்பலகையே ஆதாரமாகும்.

விடை:

எண்ணையும், எழுத்தையும்

Question 2.

கணினியின் எல்லாப்பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப் படுத்துவது _____ ஆகும்.

விடை:

கட்டுப்பாட்டகம்

Question 3.

கணினியில் உள்ள நினைவகத்தை _____ என பிரிக்கலாம்.

விடை: இரண்டாக

Question 4.

தரவுகளை ______ என்ற அலகால் அளக்கலாம்.

விடை: பிட்


       


PDF DOWNLOAD

புதன், 24 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

         இரண்டாம் பருவம்


 இயல் 6 மனித உறுப்பு மண்டலங்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருட்கள் _______

அ) ஆக்சிஜன்

ஆ) சத்துப் பொருட்கள்

இ) ஹார்மோன்கள்

ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

Question 2.

மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு ______

அ) இரைப்பை        ஆ) மண்ணீ ரல்

இ) இதயம்                ஈ) நுரையீரல்கள்

விடை: ஈ) நுரையீரல்கள்

Question 3.

நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது.                                                                               அ) தசைச் சுருக்கம்

ஆ) சுவாசம்

இ) செரிமானம்

ஈ) கழிவுநீக்கம்

விடை:

இ) செரிமானம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.

ஒரு குழுவான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குவது _____ மண்டலம் ஆகும்.

விடை:

உறுப்பு

Question 2.

மனித மூளையை பாதுகாக்கும் எலும்புச் சட்டகத்தின் பெயர் _____ ஆகும்.

விடை:

மண்டையோடு

Question 3.

மனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைக்கு ______ என்று பெயர்.

விடை:

கழிவு நீக்கம்

Question 4.

மனித உடலிலுள்ள மிகப்பெரிய உணர் உறுப்பு _____ ஆகும்.

விடை:

தோல்

Question 5.

நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்ற வேதிப்பொருட்களுக்கு ______ என்று பெயர்.

விடை:

ஹார்மோன்கள்



III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

இரத்தம் எலும்புகளில் உருவாகின்றது.

விடை:

தவறு – இரத்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றது.

Question 2.

இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.

விடை:

தவறு – இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை கடத்துகிறது.

Question 3.

உணவுக் குழலுக்கு இன்னொரு பெயர் உணவுப்பாதை.

விடை:

தவறு – உணவுக் குழாயின் இன்னொரு பெயர் உணவுப் பாதை.

Question 4.

இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள மிகச்சிறிய நுண்குழலுக்கு இரத்தக் குழாய்கள் என்று பெயர்.

விடை:

சரி

Question 5.

மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம் ஆகும்.

விடை:

சரி.



V. கீழுள்ளவற்றை முறைப்படுத்தி எழுதுக.

Question 1.

இரைப்பை → பெருங்குடல் → உணவுக்குழல் → தொண்டை → வாய் → சிறுகுடல் → மலக்குடல் → மலவாய்

விடை:

வாய் → தொண்டை → உணவுக்குழல் → இரைப்பை → சிறுகுடல் → பெருங்குடல் → மலக்குடல் → மலவாய்

Question 2.

சிறுநீர்ப் புறவழி → சிறுநீர்நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீரகம்

விடை:

சிறுநீரகம் → சிறுநீர் நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீர்ப் புறவழி





   

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...