வெள்ளி, 29 ஜூலை, 2022

TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை

   




TNPSC CHANNEL

பொதுத்தமிழ் வினா விடை


TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை


Question 1.

விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………..

அ) பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) சுரதா

ஈ) வாணிதாசன்

Answer:

ஆ) பாரதியார்

Question 2.

‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் 

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) வண்ணதாசன்

Answer:

இ) வாணிதாசன்

Question 3.

சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர் ……………….

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) தமிழண்ணல்

ஈ) கு.பா.ரா.

Answer:

அ) பாரதியார்



Question 4.

அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் 

அ) கண்ண தாசன்

ஆ) வண்ண தாசன்

இ) செல்லிதாசன்

ஈ) வாணிதாசன்

Answer:

அ) வாணிதாசன்


Question 5.

பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர் …………………

அ) வாணிதாசன்

ஆ) சுரதா

இ) கண்ண தாசன்

ஈ) பாரதியார்

Answer:

ஈ) வாணிதாசன்

Question 6.

வாணிதாசனுக்குச் செவாலியர் விருது வழங்கிய அரசு 

அ) இந்தியா

ஆ) சீனா

இ) பிரெஞ்சு

ஈ) தமிழ்நாடு

Answer:

இ) பிரெஞ்சு




Question 7.

‘சிந்துக்குத் தந்தை, புதிய அறம் பாட வந்த அறிஞர்’ என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ……………………..

அ) சீட்டுக்கவி

ஆ) பாரதிதாசன்

இ) குமரகுருபரர்

ஈ) பாரதியார்

Answer:

ஈ) பாரதியார்


Question 8.

‘நம்பியாரூரர், தம்பிரான் தோழர்’ என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்

அ) சுந்தரர்

ஆ) திருநாவுக்கரசர்

இ) மாணிக்கவாசகர்

ஈ) திருஞானசம்பந்தரர்

Answer:

அ) சுந்தரர்

Question 9.

தேவாரத்தைத் தொகுத்தவர் ……………………

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) திருநாவுக்கரசர்

இ) சுந்தரர்

ஈ) திருஞானசம்பந்தர்

Answer:

அ) நம்பியாண்டார் நம்பி


Question 10.

கலிங்கத்து பரணி ………………………. வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

அ) 96

ஆ) 24

இ) 95

ஈ) 18

Answer:

அ) 96

Question 11.

தமிழில் முதன் முதலில் தோன்றிய பரணி நூல் ……………………

அ) தக்கயாகப்பரணி

ஆ) கலிங்கத்துப் பரணி

இ) இரணிய வதைப் பரணி

ஈ) பாசவதைப் பரணி

Answer:

ஆ) கலிங்கத்துப் பரணி

Question 12.

‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ – என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் ………………………..

அ) புகழேந்திப் புலவர்

ஆ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

இ) ஒட்டக்கூத்தர்

ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்

Answer:

இ) ஒட்டக்கூத்தர்





Question 11.

‘சித்தாளின் மனச்சுமைகள்

செங்கற்கள் அறியாது’ எனக் குறிப்பிடும் கவிஞர்?

அ) நாகூர் ரூமி

ஆ) கண்ணதாசன்

இ) ஜெயகாந்தன்

ஈ) பாரதியார்

Answer:

அ) நாகூர் ரூமி


Question 14.

‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்பது நாகூர் ரூமியின்…………………..

அ) கவிதைத் தொகுதி

ஆ) படைப்புகள் வெளியான இதழ்

இ) நாவல்

ஈ) சிறுகதைத் தொகுதி

Answer:

இ) நாவல்


Question 15.

கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று. 

அ) தமிழ் ஊழியன்

ஆ) தினமணி

இ) இந்தியா

ஈ) கிராம ஊழியன்

Answer:

ஈ) கிராம ஊழியன்


Question 16.

‘பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில்

நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை’ என்று பாடியவர்?

அ) மா.பொ.சி

ஆ) கு.ப.ராஜகோபாலன்

இ) சுரதா

ஈ) பாரதிதாசன்

Answer: ஆ) கு.ப.ராஜகோபாலன்

Question 17.

இன்பங்களைத்துய்த்து துறவு பூண வேண்டும் என்னும் கருத்து அமைந்த காப்பியம் எது?

அ) சிலப்பதிகாரம்

ஆ) வளையாபதி

இ) குண்டலகேசி

ஈ) சீவகசிந்தாமணி

Answer: ஈ) சீவகசிந்தாமணி

Question 18.

சீவகசிந்தாமணிக்குரிய மற்றொரு பெயர் யாது?

அ) மனநூல்

ஆ) மணநூல்

இ) மங்கல நூல்

ஈ) சமண நூல்

Answer:

ஆ) மணநூல்

Question 19.

சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?

அ) இளங்கோவடிகள்

ஆ) சீத்தலைசாத்தனார்

இ) திருத்தக்கத்தேவர்

ஈ) கணிமேதாவியர்

Answer:

இ) திருத்தக்கத்தேவர்


Question 20.

சீவசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் பாடிய நூல் யாது?

அ) நரிவெண்பா

ஆ) நரிவிருத்தம்

இ) சிந்தாமணிமாலை

ஈ) காவடிச்சிந்து

Answer:

ஆ) நரிவிருத்தம்


                 









PDF DOWNLOAD



 



 


மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்



*******






புதன், 27 ஜூலை, 2022

TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை

   




TNPSC CHANNEL

பொதுத்தமிழ் வினா விடை



TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை

Question 1.

ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் ……………..

அ) பொன்னுசாமி

ஆ) சரவணன்

இ) சரபையர்

ஈ) சிவஞானி

Answer: இ) சரபையர்

Question 2.

காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு ……………..

அ) 1806       ஆ) 1906

இ) 1916         ஈ) 1919

Answer: ஆ) 1906

Question 3.

ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் ……………..

அ) சொல்லின் செல்வர்

ஆ) நாவலர்

இ) சிலம்புச் செல்வர்

ஈ) சிலம்பு அறிஞர்

Answer: இ) சிலம்புச் செல்வர்

Question 4.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……………..

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

ஆ) மனுமுறை கண்ட வாசகம்

இ) எனது போராட்டம்

ஈ) வானம் வசப்படும்

Answer:

அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

Question 5.

சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..

அ) அறநெறிக் காலம்

ஆ) மன்னர் காலம்

இ) பக்திக் காலம்

ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்

Answer: அ) அறநெறிக் காலம்

Question 6.

உதவி செய்தலை ‘உதவியாண்மை’ என்று குறிப்பிட்டவர்…………

அ) ஈழத்துப் பூதன் தேவனார்

ஆ) நக்கீரர்

இ) திருமுடிக்காரி

ஈ) கபிலர்

Answer: அ) ஈழத்துப் பூதன் தேவனார்

Question 7.

‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்…………

அ) கலித்தொகை

ஆ) குறுந்தொகை

இ) ஐங்குறுநூறு

ஈ) பரிபாடல்

Answer: அ) கலித்தொகை

Question 8.

பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்……………

அ) கபிலர்

ஆ) ஔவையார்

இ) நக்கீரர்

ஈ) பரணர்

Answer:

ஈ) பரணர்

Question 9.

‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் 

அ) நக்கீரர்

ஆ) கபிலர்

இ) பெரும்பதுமனார்

ஈ) நல்வேட்டனார்

Answer:

இ) பெரும்பதுமனார்

Question 10.

‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் 

அ) கலித்தொகை

ஆ) புறநானூறு

இ) நற்றிணை

ஈ) கொன்றை வேந்தன்

Answer:

இ) நற்றிணை

Question 11.

சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் ………………….

அ) புறநானூறு

ஆ) பரிபாடல்

இ) பதிற்றுப்பத்து

ஈ) சிலப்பதிகாரம்

Answer: இ) பதிற்றுப்பத்து

Question 12.

தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று திருமுடிக்காரியைப் பாராட்டியவர்

அ) கம்ப ர்

ஆ) கபிலர்

இ) ஒளவையார்

ஈ) நல்வேட்டனார்

Answer:

ஆ) கபிலர்

Question 13.

இரவலர் வராவிட்டாலும் தேடி வரவழைத்துக் கொடுக்கும் மன்னன் ………………….

அ) அதியன்

ஆ) திருமுடிக்காரி

இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

ஈ) நல்வேட்டனார்

Answer: இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

Question 14.

காஞ்சி மாநகரத்து சிற்றரசரே ………………….என்றும் சமயப் பெயர் கண்டார்.

அ) தர்மர்

ஆ) கன்பூசியஸ்

இ) போதி தர்மர்

ஈ) புத்தர்

Answer: இ) போதி தர்மர்

Question 15.

‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்றழைக்கப்பட்டவர் 

அ) அமைச்சர்கள்

ஆ) மன்னர்கள்

இ) புலவர்கள்

ஈ) சான்றோர்கள்

Answer: அ) அமைச்சர்கள்

Question 16.

தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதைக் குறிப்பிட்ட புலவர் ………………….

அ) மாங்குடி மருதனார்

ஆ) பரணர்

இ) ஆவூர் மூலங்கிழார்

ஈ) நக்கீரர்

Answer:

இ) ஆவூர் மூலங்கிழார்

Question 17.

குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிய புலவர் ………………….

அ) மாங்குடி மருதனார்

ஆ) பரணர்

இ) ஆவூர் மூலங்கிழார்

ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்

Answer: ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்

Question 18.

‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ எனக் குறிப்பிடும் நூல்.

அ) புறநானூறு

ஆ) பதிற்றுப்பத்து

இ) பரிபாடல்

ஈ) நற்றிணை

Answer: அ) புறநானூறு

Question 19.

உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் நீக்குவது தான் என்றவர் ………………….

அ) நல்வேட்டனார்

ஆ) பரணர்

இ) ஆவூர் மூலங்கிழார்

ஈ) நக்கீரர்

Answer: அ) நல்வேட்டனார்

Question 20.

ஈதல் பற்றியச் செய்திகளைக் கூறும் அகஇலக்கியம் ………………….

அ) கலித்தொகை

ஆ) குறுந்தொகை

இ) அகநானூறு

ஈ) நற்றிணை

Answer: அ) கலித்தொகை




PDF DOWNLOAD




 


மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்



*******







செவ்வாய், 26 ஜூலை, 2022

TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை

  




TNPSC CHANNEL

பொதுத்தமிழ் வினா விடை



TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை


TNPSC CHANNEL

பொதுத்தமிழ் வினா விடை

Question 1.

“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்

முரமுரெனவே புளித்த மோரும்” – எனப் பாடியவர்

அ) ஔவையார்

ஆ) தொல்காப்பியர்

இ) கம்பர்

ஈ) திருவள்ளுவர்

Answer:

அ) ஒளவையார்

Question 2.

“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்று பாடியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கவிமணி

ஈ) வைரமுத்து

Answer:

அ) பாரதியார்


Question 3.

வடமொழிக் கதையைத் தழுவி படைக்கப்பட்ட நூல் ………………..

அ) கம்பராமாயணம்

ஆ) சீவகசிந்தாமணி

இ) கலிங்கத்துப்பரணி

ஈ) வில்லிபாரதம்

Answer:

இ) கலிங்கத்துப்பரணி

Question 4.

மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள்………………..

அ) சாகித்திய அகாதெமி

ஆ) தேசிய புத்தக நிறுவனம்

இ) தென்னிந்திய புத்தக நிலையம்

ஈ) இவை அனைத்தும்

Answer:

ஈ) இவை அனைத்தும்


Question 5.

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” – என்று பாடியவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) அப்துல் ரகுமான்

Answer:

அ) பாரதியார்


Question 6.

‘காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப் பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று கூறியவர் யார்?

அ) குலோத்துங்கன்

ஆ) பராந்தகன்

இ) இராஜராஜன்

ஈ) இராஜேந்திரன்

Answer:

அ) குலோத்துங்கன்



Question 7.

உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று கூறியவர்.

அ) மு. கு. ஜகந்நாதர்

ஆ) மணவை முஸ்தபா

இ) மு. மேத்தா

ஈ) அ. முத்துலிங்கம்

Answer:

அ) மு. கு. ஜகந்நாதர்

Question 8.

“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்று குறிப்பிடும் செப்பேட்டுக் குறிப்பு………………..

அ) உத்திரமேரூர்

ஆ) மண்டகப்பட்டு

இ) சின்னமனூர்

ஈ) ஆதிச்சநல்லூர்

Answer:

இ) சின்னமனூர்

Question 9.

வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்படாத இலக்கியத்தைக் கண்டறிக.

அ) சீவக சிந்தாமணி

ஆ) கம்பராமாயணம்

இ) சிலப்பதிகாரம்

ஈ) வில்லிபாரதம்

Answer:

இ) சிலப்பதிகாரம்




Question 10.

“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”  – என்று பாடியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) கண்ண தாசன்

Answer:

அ) பாரதியார்

Question 11.

“நீரற வறியாக் கரகத்து” என்ற பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறும் நூல் ……………………

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) கலித்தொகை

ஈ) நற்றிணை

Answer:

ஆ) புறநானூறு


Question 12.

கரகாட்டத்தின் துணையாட்டம் …………………….

அ) மயிலாட்டம்

ஆ) ஒயிலாட்டம்

இ) காவடியாட்டம்

ஈ) தேவராட்டம்

Answer:

அ) மயிலாட்டம்

Question 13.

காவடியாட்டம் – இச்சொல்லில் ‘கா’ என்பதன் பொருள் 

அ) சோலை

ஆ) பாரந்தாங்கும் கோல்

இ) கால்

ஈ) காவல்

Answer: ஆ) பாரந்தாங்கும் கோல்

Question 14.

தேவராட்டம் என்பது யார் மட்டுமே ஆடும் ஆட்டம்?

அ) ஆண்கள்

ஆ) பெண்கள்

இ) சிறுவர்கள்

ஈ) முதியவர்கள்

Answer: அ) ஆண்கள்

Question 15.

உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படுவது…………….

அ) தேவதுந்துபி

ஆ) சிங்கி

இ) டோலக்

ஈ) தப்பு

Answer:

அ) தேவதுந்துபி

Question 16.

தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்……………….

அ) ந. முத்துசாமி

ஆ) பேரா. லூர்து

இ) வானமாமலை

ஈ) அ.கி. பரந்தாமனார்

Answer:

அ) ந. முத்துசாமி

Question 17.

கலைஞாயிறு என்று அழைக்கப்பட்டவர்……………….

அ) தேவநேயப் பாவாணர்

ஆ) ந. முத்துசாமி

இ) தியாகராஜ பாகவதர்

ஈ) எம்.எஸ். சுப்புலட்சுமி

Answer: ஆ) ந. முத்துசாமி

Question 18.

கூத்துப்பட்டறை ந. முத்துசாமிக்கு இந்திய அரசு வழங்கிய விருது……………….

அ) பத்ம ஸ்ரீ                ஆ) அர்ஜூனா

இ) பத்மபூஷண்        ஈ) பாரத ரத்னா

Answer: அ) பத்ம ஸ்ரீ

Question 19.

தமிழ்நாடு அரசு ந. முத்துசாமிக்கு வழங்கிய விருது……………….

அ) கலைமாமணி

ஆ) நாடகமாமணி

இ) வ.உ.சி. விருது

ஈ) கம்பன் விருது

Answer: அ) கலைமாமணி

Question 20.

மலேசியாவில் “இராச சோழன் தெரு” உள்ளதைப் பற்றிக் குறிப்பிடும் மலர்……………….

அ) முதலாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

ஆ) இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

இ) நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

ஈ) ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

Answer:

ஈ) ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

  




PDF DOWNLOAD







மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்



*******








TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை

 




TNPSC CHANNEL

பொதுத்தமிழ் வினா விடை





TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை


Question 1.

ஐம்பெருங்காப்பியங்களுள் பொருந்தாததைத் தேர்க.

அ) யசோதர காவியம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) மணிமேகலை

ஈ) சீவக சிந்தாமணி

Answer:

அ) யசோதர காவியம்


Question 2.

 ‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல்

அ) நூறாசிரியம்

ஆ) கனிச்சாறு

இ) எண்சுவை எண்பது

ஈ) பாவியக்கொத்து

Answer:

ஆ) கனிச்சாறு



Question 3.

“மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!” எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை?

அ) ஐந்து

ஆ) மூன்று

இ) இரண்டு

ஈ) எட்டு

Answer:

ஆ) மூன்று


Question 4.

தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர் யார்?

அ) கண்ண தாசன்

ஆ) பாரதிதாசன்

இ) பெருஞ்சித்திரனார்

ஈ) திரு.வி.க

Answer:

இ) பெருஞ்சித்திரனார்


Question 5.

குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) இரண்டு

Answer:

ஆ) நான்கு


Question 6.

சார்பெழுத்துகளின் எண்ணிக்கை

அ) முப்பது

ஆ) பன்னிரண்டு

இ) பத்து

ஈ) ஒன்பது

Answer:

இ) பத்து




Question 7.

“அந்தமான்” என்பது எவ்வகை மொழி?

அ) தொடர் மொழி

ஆ) தனி மொழி

இ) பொது மொழி

ஈ) எதுவுமில்லை

Answer:

இ) பொது மொழி



Question 8.

இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றிக் குறிப்பிடும் நூல்?

அ) பெரிய புராணம்

ஆ) நற்றிணை

இ) பொருநராற்றுப் படை

ஈ) கம்பராமாயணம்

Answer:

அ) பெரிய புராணம்


Question 9.

‘நசைஇ’ என்பதன் பொருள்

அ) விருப்பம்

ஆ) விரும்பி

இ) துன்பம்

ஈ) கவனித்து

Answer:

ஆ) விரும்பி


Question 10.

விருந்தோம்பல் பற்றிய 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படுமிடம்

அ) சிதம்பரம்

ஆ) மதுரை

இ) மாமல்லபுரம்

ஈ) திருச்சி

Answer:

அ) சிதம்பரம்


Question 11.

“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.

அ) குறுந்தொகை

ஆ) அகநானூறு

இ) நற்றிணை

ஈ) புறநானூறு

Answer:

இ) நற்றிணை

Question 12.

‘காலின் ஏழடிப் பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்

அ) சிறுபாணாற்றுப்படை

ஆ) பெரும்பாணாற்றுப்படை

இ) பொருநராற்றுப்படை

ஈ) கூத்தராற்றுப்படை

Answer:

இ) பொருநராற்றுப்படை




Question 13.

“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்?

அ) கம்பராமாயணம்

ஆ) கலிங்கத்துப்பரணி

இ) முக்கூடற்பள்ளு

ஈ) பெரியபுராணம்

Answer:

ஆ) கலிங்கத்துப்பரணி





Question 14.

அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்துச் சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்? இக்காட்சி இடம் பெறும் நூல் எது?

அ) சாக்கியநாயனார், பெரிய புராணம்

ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரிய புராணம்

இ) காரைக்கால் அம்மையார், அற்புத திருவந்தாதி

ஈ) சுந்தரர், திருத்தொண்டத்தொகை

Answer:

ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரியபுராணம்









Question 15.

“இலையை மடிப்பதற்கு முந்தைய

வினாடிக்கு முன்பாக

மறுக்க மறுக்க

பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்

நீண்டு கொண்டிருந்தது

பிரியங்களின் நீள் சரடு” – என்னும் கவிதைக்கு உரியவர் யார்?

அ) அம்சப்பிரியா

ஆ) பா.விஜய்

இ) சிநேகன்

ஈ) நா. முத்துக்குமார்

Answer:

அ) அம்சப்பிரியா


Question 16.

“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீ ரோ”- என்று குறிப்பிடும் நூல் எது?

அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை

இ) பதிற்றுப்பத்து

ஈ) பரிபாடல்

Answer:

ஆ) குறுந்தொகை


Question 17.

“மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?

அ) ஔவையார், ஆத்திச்சூடி

ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்

இ) குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்

ஈ) வள்ளலார், ஜீவகாருண்ய ஒழுக்கம்

Answer:

ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்



Question 18.

திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெறும் இயல்

அ) இல்லறவியல்

ஆ) பாயிரவியல்

இ) அரசியல்

ஈ) துறவறவியல்

Answer:

அ) இல்லறவியல்


Question 19.

விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்.

அ) திருவள்ளுவர்

ஆ) தொல்காப்பியர்

இ) இளங்கோவடிகள்

ஈ) செயங்கொண்டார்

Answer:

இ) இளங்கோவடிகள்

Question 20.

கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர்

அ) கம்பர்

ஆ) தொல்காப்பியர்

இ) இளங்கோவடிகள்

ஈ) செயங்கொண்டார்

Answer:

அ) கம்பர்
















PDF DOWNLOAD

















மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்



*******









சனி, 23 ஜூலை, 2022

திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE & MENTAL ABILITY)

 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE & MENTAL ABILITY)




i. சுருக்குதல் விழுக்காடு மீப்பெரு பொதுக் காரணி மீச்சிறு -

பொது மடங்கு


ii. விகிதம் மற்றும் விகிதாசாரம்.

✅ Video & Pdf download



தனி வட்டி கூட்டு வட்டி பரப்பு கொள்ளளவு காலம் மற்றும் வேலை.


iv. தருக்கக் காரணவியல் புதிர்கள் பகடை காரணவியல் எண் எழுத்துக் காரணவியல் காட்சிக் எண் வரிசை.

✅ PDF DOWNLOAD



மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்





வியாழன், 21 ஜூலை, 2022

இலக்கணம்

 TNPSC CHANNEL






இலக்கணம்:


மொழியை பிழையின்றி பேசவும் எழுதவும் துணைபுரிவது இலக்கணம் ஆகும்

தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,

1. எழுத்து

2. சொல்

3. பொருள்

4. யாப்பு

5. அணி






பெயர்ச் சொல்லின் வகையறிதல்

பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். எடுத்துக்காட்டு -மரம், செடி, பூ, சூரியன். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.


1. பொருட்பெயர்


பொருளை குறிக்கும் பெயர் பொருட்பெயர். எடுத்துக்காட்டு -மரம், செடி, மின்விசிறி, நாற்காலி.


2. இடப்பெயர்


இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர். எ.கா. -உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை.


3. சினைப்பெயர்


சினை என்றால் உறுப்பு என பொருள்படும். உறுப்பை குறிக்கும் பெயர் சினைப்பெயர்.


மரம் -பொருட்பெயர்.

இரை, தண்டு, வேர் போன்றவை அதன் உறுப்புகள். எனவே இவை சினைப்பெயர்கள் ஆகும்.


உடல் -பொருட்பெயர்


கண், காது, மூக்கு, கை என்பவை சினைப்பெயர்கள்.


4.  காலப்பெயர்


காலத்தை குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.


திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை ஆகியவை காலப்பெயர்கள்.


5. பண்புப் பெயர்


ஒரு பொருளின் பண்பு அல்லது தன்மை அல்லது அதன் குணத்தை குறிப்பது பண்புப்பெயர்.


எடுத்துக்காட்டு -

பச்சை இலை, சிவப்பு மை பண்புப்பெயர். உ, கு, றி, று, அம், சி, பு, ஜ, மை, பம், நர் என்ற விகுதியுடன் முடியும் (மை அதிகமாக இடம்பெறும்.)


6. தொழிற்பெயர்



தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர்.

எ.கா. -படித்தல், ஓடுதல், நடத்தல், தல், அல், அம், ஐ, கை, வை, பு, வு, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆணை, மை, து என்ற விகுதியுடன் முடியும்.





*******


வாக்கிய வகை அறிதல்

ஏதாவதொரு சொற்றொடரைக் கொடுத்து இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டுபிடி என்ற வகையில் வினாக்கள் அமையும்.

தனி வாக்கியம்

தொடர் வாக்கியம்

கலவை வாக்கியம்

கட்டளை வாக்கியம்

வினா வாக்கியம்

உணர்ச்சி வாக்கியம்

செய்தி வாக்கியம்

வியங்கோள் வாக்கியம்

எதிர்மறை வாக்கியம்

உடன்பாட்டு வாக்கியம்

நேர்க்கூற்று வாக்கியம்

அயற்கூற்று வாக்கியம்

1. தனி வாக்கியம்

ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தால் அது தனி வாக்கியம்

(எ.கா) பாண்டியர் முத்தமிழ் வளர்த்தனர்

சேர, சோழ, பாண்டியர் தமிழ் வளர்த்தனர்

பாரி வந்தான்.

பாரியும் கபிலனும் வந்தனர்.

2. தொடர் வாக்கியம்

தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்.

ஒரு எழுவாய் பல பயனிலைகளைக்கொண்டு முடியும்.

தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வந்து இடையில் ஆகையால்,அதனால் எனும் இணைப்புச் சொற்கள் வெளிப்படையாக வரும்.

பல வினையெச்சங்களைக் கொண்டு இறுதியில் வினைமுற்றைக் கொண்டு முடியும்.

(எ.கா) ராமன் திருச்சி சென்றான்; மலைக்கோட்டை ஏறினான்; கடவுளை வழிபட்டான்.

நாகம் இடியோசை கேட்டது; அதனால் நடுங்கியது.

தமிழரசி போட்டியில் பங்கேற்றாள்; வெற்றி பெற்றாள்; பரிசு பெற்றாள்.

3. கலவை வாக்கியம் :

கலவை வாக்கியம் என்பது, முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும்.(அல்லது)

ஓர் முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல சார்பு வாக்கியங்கள் இணைந்து வருமாயின் அது கலவை வாக்கியம் எனப்படும்

‘ஓ’ ‘என்று’ ‘ஆல்’ என்ற இணைப்புச் சொற்கள் வரும்.

(எ.கா) மேகம் கருத்ததால் மழை பெருகியது.

யார் திறமையாகப் படிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவர்.

தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்று, அதன்வழி நடந்து, வாழ்க்கையில் முன்னேற அனைவரும் முயல வேண்டும்.

நாங்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமென்று ஆசிரியர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.

4.கட்டளை வாக்கியம்

பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்து வருமாயின் அது கட்டளை வாக்கியம்.

இதில் இறுதிச் சொல் வேர்ச்சொல்லாக வரும்.

(எ.கா) அறம் செய்.

தண்ணீர் கொண்டு வா.

இளமையில் கல்.

திருக்குறளைப் படி

5. வினா வாக்கியம்

வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம்.

வினா எழுத்துக்களாவன; ஆ, எ, ஏ, ஓ, யா ஆகும்.

(எ.கா) இது சென்னைக்கு செல்லும் வழியா?

நீ மனிதனா? - ஆ

நீ தானே? - ஏ

உளரோ? - ஓ

6. உணர்ச்சி வாக்கியம்

மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு வாக்கியம் அமையுமாயின் அது உணர்ச்சி வாக்கியம்

(எ.கா) ஆ! தாஜ்மஹால் என்ன அழகு!

ஐயகோ! நேருஜி மறைந்தாரே!

7. செய்தி வாக்கியம்

ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அமைவதே செய்தி வாக்கியம்

(எ.கா) உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது

மாணவர்கள் சீருடையில் வர வேண்டும்

8. வியங்கோள் வாக்கியம்

கட்டளை, வேண்டுகோள், வாழ்த்துதல், வைதல், ஆகியவற்றுடன் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியமே வியங்கோள் வாக்கியம்

(எ.கா) தமிழை முறையாகப் படி - கட்டளை

நீடுழி வாழ் - வாழ்த்துதல்

தீயென ஒழி - வைதல்

நல்ல கருத்தினை நாளும் கேள் - வேண்டுகோள்

9.எதிர்மறை வாக்கியம்

ஒரு செயல் அல்லது தொழில் நிகழாமையைத் தெரிவிப்பது எதிர்மறை வாக்கியம் ஆகும்.

(எ.கா) அவன் கல்வி கற்றிலன்

உடன்பாடு - எதிர் மறை

அவன் சென்றான் - அவன் சென்றிலன்

ஆமைகள் வேகமாக ஓடும் - ஆமைகள் வேகமாக ஓடா

புலி புல்லைத் தின்னும் - புலி புல்லைத் தின்னா

மொழி இலக்கிய வளம் உடையது - மொழி இலக்கிய வளம் அற்றது

10. உடன்பாட்டு வாக்கியம்

ஒரு செயல் அல்லது தொழில நிகழ்வதைத் தெரிவிப்பது உடன்பாட்டு வாக்கியம் ஆகும்.

(எ.கா) வயலில் மாடுகள் மேய்ந்தன

வகுப்பில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.

11.நேர்க்கூற்று வாக்கியம்

ஒருவர் சொன்ன செய்தியை பொருள் மாறாமல் அவர் சொன்னபடியே சொன்னால் அது நேர்க்கூற்று வாக்கியம் எனப்படும்.

அவர் இவரிடம் சொன்ன செய்தியை மேற்கோள் இட்டுக் காட்ட வேண்டும்.

(எ.கா) வளவன்,"நான் ஊருக்குச் செல்கிறேன்" என்றான்.

12.அயற்கூற்று வாக்கியம்

ஒருவர் சொன்ன செய்தியை கேட்டு அவன் இப்படியாகச் சொன்னான் என்று மற்றொருவரிடம் கூறுவது அயற்கூற்று வாக்கியம் ஆகும்.

(எ.கா) வளவன் தான் மதுரை செல்கிறேன் என்று சொன்னான்.


    *******



சில சொற்களும் அதனோடு வேர்ச்சொற்களும் பின்வருமாறு:

சொற்கள் வேர்ச்சொற்கள்

பற்றினால் பற்று

ஒடாதே ஒடு

அகன்று அகல்

பார்த்தான் பார்

அறுவடை அறு

கெடுத்தாள் கெடு

இயக்கிடு இயக்கு

பாடிய பாடு

கேட்க கேள்

உற்ற உறு

உருக்கும் உருக்கு

எஞ்சிய எஞ்சு

ஒட்டுவிப்பு ஒட்டு

கண்டனன் காண்

நினைத்தேன் நினை

கொடுதீர் கொடு

ஓடாது ஓடு

கற்றேன் கல்

காத்தவன் கா

காட்சியில் காண்

கொடாமை கொள்

தட்பம் தண்மை

மலைந்து மலை



*******



.


வினை முற்று

வினை முற்று என்றால் என்ன ?

வினைமுற்று என்பது,

தொழிலையும் (நடந்தான் - இதில் நடக்கின்ற action ஐ உணர்த்துகிறது) ,

காலத்தையும் ( நடந்தான் -இறந்த காலம்) உணர்த்த வேண்டும்.

திணையை கூற வேண்டும் ( நடந்தான் என்பது 'உயர்திணை') ,

பால் காட்டும் விகுதியோடு சொல்லானது முற்று பெற்றிருக்க வேண்டும். ( நடந்தான் - ஆண்பால்)

உதாரணம் :

இருந்தான், நடந்தான், கற்றான், வாழ்ந்தாள். அரும்பியது, தளர்ந்தது

{பொதுவாக வினைமுற்றுகள் ர், ன, ன்,து என்ற எழுத்துகளில் முற்று பெறும்.)

வினையெச்சம்

வினையெச்சம் என்றால் என்ன ?

முடிவு பெறாத வினைச் சொல் வினையெச்சம் ஆகும்.

உதாரணம் :

நடந்து, கண்டு, படித்து.

வினையாலணையும் பெயர்

வினையாலணையும் பெயர் என்றால் என்ன ?

இலக்கண விளக்கம் :

"ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உறுப்பு ஏற்றும், ஏற்காமலும் வேறொரு பயனிலையைக்கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் ஆகும்."

வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வரும்.


உதாரணம் :

"கொடு" என்பதன் வினையாலணையும் பெயர் எது ?

அ.கொடுத்து

ஆ.கொடுத்த

இ.கொடுத்தல்

ஈ.கொடுத்தவள்


விடை : ஈ.கொடுத்தவள்

(மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வந்துள்ளது)

ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வினையாலணையும் பெயர் என்றாலே ஏதோ ஒருவகையில் "அணைத்து" வருவது போல் வரும், எ.கா. அறிந்தவன், படித்தவர்

தொழிற்பெயர்

தொழிற்பெயர் என்றால் என்ன ?

ஒரு தொழிலை செய்வதைக் குறிப்பது தொழிற்பெயர். பாடுதல், ஆடுதல், நடித்தல்.. பொதுவாக தொழிற்பெயர்கள் தல், அல், கை என்றவாறு முடியும்.


உதாரணம் :

'வாழ்' என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எது ?

அ.வாழ்க

ஆ.வாழ்வீர்

இ.வாழ்ந்தார்

ஈ.வாழ்தல்

விடை :

ஈ. வாழ்தல் (தல் என முடிந்துள்ளது.)



*******








தன்வினை வாக்கியம்

 

ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.


எ.கா :  

முருகன் திருந்தினான்.

பாடம் கற்றேன்.

நான் நேற்று வந்தேன்.

கவிதா பொம்மை செய்தாள்.

நண்பர் வீட்டில் விருந்து உண்டான்.

மன்னர் நாட்டை ஆண்டார்.

கலையரசி பாடம் கற்றான்.

கண்ணன் இலக்கணம் பயின்றாள்.

செல்வி பாடம் கற்றாள்.

பிறவினை

ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.


எ.கா :  

ஆசிரியை பாடம் கற்பித்தார்.

அவன் திருத்தினான்.

ராமன் பாடம் படிப்பித்தான்.

கோதை நடனம் ஆட்டுவித்தாள்.

ஆசிரியர் பாடம் பயிற்றுவித்தார்.

கலையரசி பாடம் கற்பித்தான்.

நண்பனை விருந்து உண்பித்தேன்.

கவிதா பொம்மை செய்வித்தாள்.

தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்.







செய்வினை:

எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். செயப்படு பொருளோடு ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும்.

எ.கா: அம்மு வேலை(ல்+ஐ) செய்தாள்

‘ஐ’ உருபு மறைந்தும், வெளிப்பட்டும் வரும்.

செயப்பாட்டு வினை:

செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். எழுவாயோடு ‘ஆல்’ என் மூன்றாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். பயனிலையோடு ‘படு’, ‘பட்டது’ என்னும் சொற்களைச் சேர்க்க வேண்டும். (படு துணை வினை)

எ.கா: பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டது.




✅ PDF DOWNLOAD


மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்







புதன், 20 ஜூலை, 2022

பொதுத்தமிழ் ஆசிரியர்கள் சிறப்புப்பெயர்கள்


  TNPSC CHANNEL   

பொதுத்தமிழ்

     ஆசிரியர்கள் - சிறப்புப்பெயர்கள்

      

 


1.திருவள்ளுவர் – பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவை:

தேவர்

நாயனார்

தெய்வப்புலவர்

செந்நாப்போதர்

பெருநாவலர்

பொய்யில் புலவர்

பொய்யாமொழிப் புலவர்

மாதானுபங்கி

முதற்பாவலர்


2. கம்பர் -  

"கல்வியிற் பெரியோன் கம்பன்",

"கவிச்சக்ரவர்த்தி".


3. பாரதியார் – இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.

மகாகவி, 

தேசியக் கவி, 

விடுதலைக் கவி,

முண்டாசுக் கவிஞன்,

சக்தி தாசன்.


4. பாரதிதாசன் – இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்'

புரட்சிக் கவிஞர்

பாவேந்தர்


5. நாமக்கல் கவிஞர் -  வெ. இராமலிங்கம் பிள்ளை 

காந்தியக் கவிஞர்


6. தேசிய விநாயகம் பிள்ளை –

கவிமணி


7. முடியரசன் - இயற்பெயர்: துரைராசு

வீறுகவியரசர்


8. வாணிதாசன் – இயற்பெயர்  : எத்திராசலு (எ) அரங்கசாமி


கவிஞரேறு, 

பாவலர் மணி, 

தமிழகத்தின் வேர்ட்ஸ்வோர்த், 

தமிழ்நாட்டுத் தாகூர் போன்ற சிறப்புப் பெயர்களும் இவருக்குண்டு.


9. சுரதா -  இயற்பெயர் : இராசகோபாலன் 

உவமைக் கவிஞர் 

கவிஞர் திலகம்  

தன்மானக் கவிஞர்  

கலைமாமணி 

கவிமன்னர்






10. கண்ணதாசன் – இயற்பெயர் : முத்தையா

கவியரசு

கவிச்சக்ரவர்த்தி

குழந்தை மனம் கொண்ட கவிஞர்.


11. உடுமலை நாராயணகவி -  இயற்பெயர் :  நாராயணசாமி

பகுத்தறிவுக் கவிராயர், 

நாராயணகவி.



12. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – 

மக்கள் கவிஞர்



13. மருதகாசி – 

திரைக்கவித் திலகம்


14. ந.பிச்சமூர்த்தி – 

புதுக்கவிதையின் தந்தை


15. சிற்பி பாலசுப்ரமணியம் – 

சிற்பி (எழுத்துக்களைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்)

“வானம்பாடி” கவிதை அமைப்பின் தந்தை


16. மறைமலை அடிகள் - இயற்பெயர் : வேதாசலம்

(தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி)



17. பரிதிமாற் கலைஞர் – இயற்பெயர் : வி.ஜி. சூர்யநாராயண சாஸ்திரி


18. உ. வே. சாமிநாதையர்  -

தமிழ்த் தாத்தா


19. தேவநேயப் பாவாணர் –

மொழிஞாயிறு



20. வீரமாமுனிவர் – இயற்பெயர் : கான்ஸ்டாண்சு ஜோசப் பெசுகி

இஸ்மத் சன்னியாசி, 

தைரியநாதன்.





✅ PDF DOWNLOAD




மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்




           *******


TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...