புதன், 31 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                    TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                    மூன்றாம் பருவம்


அலகு 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

அ) வாத்து                  ஆ) கிளி

இ) ஓசனிச்சிட்டு       ஈ) புறா

விடை: இ) ஓசனிச்சிட்டு

Question 2.

இயற்கையான கொசு விரட்டி

அ) ஜாதிக்காய்

ஆ) மூங்கில்

இ) இஞ்சி

ஈ) வேம்பு

விடை: ஈ) வேம்பு

Question 3.

பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

அ) உருளைக்கிழங்கு

ஆ) கேரட்

இ) முள்ளங்கி

ஈ) டர்னிப்

விடை:

அ) உருளைக்கிழங்கு


Question 4.

பின்வருவனவற்றுள் எது வைட்டமின் ‘C’ குறைபாட்டைப் போக்குகிறது?

அ) நெல்லி

ஆ) துளசி

இ) மஞ்சள்

ஈ) சோற்று கற்றாழை

விடை:

அ) நெல்லி

Question 5.

இந்தியாவின் தேசிய மரம் எது?

அ) வேப்பமரம்

ஆ) பலா மரம்

இ) ஆலமரம்

ஈ) மாமரம்

விடை:

இ) ஆலமரம்









II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _____ ஆம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

விடை:

16

Question 2.

______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.

விடை:

பருத்தி

Question 3.

நான் தமிழ்நாட்டின் மாநில மரம் நான் யார்? _______

விடை:

பனை

Question 4.

______ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.

விடை:

துளசி

Question 5.

அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ண க் கூடிய பருப்புகள் (அ) விதைகள் ______ எனப்படுகின்றன.

விடை:

பயிறு வகைகள்


III. சரியா? தவறா? தவறாக இருந்தால் சரியாக விடையை எழுதுக.

Question 1.

அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.

விடை:

தவறு. அலங்காரத் தாவரங்கள்

Question 2.

பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன.

விடை:

சரி

Question 3.

அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.

விடை:

தவறு – உணவு தாவரம்.

Question 4.

கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.

விடை:

தவறு – கோடை காலத்திற்கு பருத்தி உடைகள் தான் ஏற்றவை.

Question 5.

கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது.

விடை:

தவறு – சர்க்கரை தயாரிக்க பயன்படுகிறது.




V. ஒப்பிடுக.

Question 1. 

மாம்பழம் : கனி :: மக்காச்சோளம் : _______

விடை:

தானியம்

Question 2.

தென்னை : நார் :: ரோஜா : _____

விடை:

அத்தர்

Question 3.

தேனீக்கள் : மகரந்தச் சேர்க்கையாளர் :: மண்புழு : ______

விடை: மண்புழு உரம் தயாரிப்பாளர்


                  




 


செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

               TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                    மூன்றாம் பருவம்

அலகு 4 நமது சுற்றுசூழல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.

அ) குளம்       ஆ) ஏரி

இ) நதி             ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

Question 2.

உற்பத்தியாளர்கள் எனப்படுவை.

அ) விலங்குகள்

ஆ) பறவைகள்

இ) தாவரங்கள்

ஈ) பாம்புகள்

விடை: இ) தாரவங்கள்

Question 3.

உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு

அ) நெகிழி

ஆ) சமையலறைக் கழிவுகள்

இ) கண்ணாடி

ஈ) அலுமினியம்

விடை:

ஆ) சமையலறைக் கழிவுகள்

Question 4.

காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

அ) மறு சுழற்சி

ஆ) மீண்டும் பயன்படுத்துதல்

இ) மாசுபாடு

ஈ) பயன்பாட்டைக் குறைத்தல்

விடை: இ) மாசுபாடு

Question 5.

களைக்கொல்லிகளின் பயன்பாடு _____ மாசுபாட்டை உருவாக்கும்.

அ) நில மாசுபாடு

ஆ) நீர் மாசுபாடு

இ) இரைச்சல் மாசுபாடு

ஈ) அ மற்றும் ஆ

விடை: ஈ) அ மற்றும் ஆ


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

தாவரங்களை உண்பவை ———- நிலை நுகர்வோர்கள் ஆகும்.

விடை: முதல்

Question 2.

சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _____ காரணிகள் ஆகும்.

விடை:

காலநிலைக்

Question 3.

______ என்ற நிகழ்வின் மூலம் கழிவுப் பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.

விடை:

மறு சுழற்சி

Question 4.

நீர் மாசுபாடு மனிதனுக்கு _____ நோயை உருவாக்குகிறது.

விடை:

தீங்கு விளைவிக்கும்

Question 5.

3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல் _____ மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது.

விடை:

மீண்டும் பயன்படுத்துதல்


III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசிபிக் பெருங்கடல் ஓர் எடுத்துக்காட்டாகும்.

விடை :

சரி.

Question 2.

பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.

விடை:

சரி.

Question 3.

மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு எடுத்துக் காட்டு

விடை: தவறு – கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும் உயிரினச் சிதைவுக்கு உள்ளாகும் கழிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Question 4.

அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.

விடை :

தவறு – அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால், நீர் நில மாசுபாடு உருவாகும்.


Question 5.

பள்ளியின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.

விடை :

தவறு – திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்க வேண்டும்.






V. சரியான வரிசையில் எழுதி, உணவுச் சங்கிலியை உருவாக்கு.

Question 1.

முயல் → கேரட் → கழுகு → பாம்பு

விடை:

கேரட் → முயல் → பாம்பு → கழுகு

Question 2.

மனிதன் → பூச்சி → ஆல்கா → மீன்

விடை:

ஆல்கா → பூச்சி → மீன் → மனிதன்


     




திங்கள், 29 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                    TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்


அலகு 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

சோப்புகளின் முதன்மை மூலம் _____ ஆகும்.

அ) புரதங்கள்

ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

இ) மண்

ஈ) நுரை உருவாக்கி

விடை:

ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

Question 2.

வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு கரைசல் பயன்படுகிறது.

அ) பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு

ஆ) சோடியும் ஹைட்ராக்ஸைடு

இ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்

ஈ) சோடியம் குளோரைடு

விடை:

ஆ) சோடியம் ஹைட்ராக்ஸைடு



Question 3.

சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _____ ஆகும்.

அ) விரைவாக கெட்டித்தன்மையடைய

ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த

இ) கடினமாக்க

ஈ) கலவையை உருவாக்க

விடை:

ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த

Question 4.

பீனால் என்பது ______

அ) கார்பாலிக் அமிலம்

ஆ) அசிட்டிக் அமிலம்

இ) பென்சோயிக் அமிலம்

ஈ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்

விடை:

அ) கார்பாலிக் அமிலம்

Question 5.

இயற்கை ஒட்டும் பொருள் ______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.

அ) புரதங்க ளில்

ஆ) கொழுப்புகளில்

இ) ஸ்டார்ச்சில்

ஈ) வைட்டமின்களில்

விடை:

இ) ஸ்டார்ச்சில்



II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

வெங்காயம் நறுக்கும் போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமான வாயு ______ ஆகும்.

விடை:

ஆக்சைடு

Question 2.

சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் ______ தேவைப்படுகின்றது.

விடை:

NaOH

Question 3.

உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது ______ ஆகும்

விடை:

மண்புழு

Question 4.

சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _____ உரங்கள் ஆகும்.

விடை:

இயற்கை

Question 5.

இயற்கை பசைக்கு உதாரணம் _____ ஆகும்.

விடை:

ஸ்டார்ச்



III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.

விடை : தவறு

குறைந்த அடர்வுடைய பீனால் கிருமி நாசினியாக பயன்படுகின்றது.

Question 2.

ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றன.

விடை:

தவறு எப்சம் மருத்துவத்துறையில் அதிகளவு பயன்படுகின்றது.

Question 3.

ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது.

விடை: சரி

Question 4.

ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று பிரிக்க பயன்படுகின்றது.

விடை:தவறு – ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று ஒட்டுவதற்கு பயன்படுகின்றது.

Question 5.

NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.

விடை:

சரி


V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

1. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.

3. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.

4. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.

5. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.

6. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.

விடை:

1. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.

2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.

3. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.

4. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.

5. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

6. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.

VI. ஒப்புமை தருக.

Question 1.

யூரியா : கனிம உரம் :: மண்புழு உரம் : _____

விடை:

இயற்கை உரம்

Question 2.

______ : இயற்கை ஒட்டும் பொருள் :: செயற்கை ஒட்டும் பொருள் : செலோடேப்

விடை:

ஸ்டார்ச்

   







ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                 TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்


அலகு 2 நீர்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Question 1.

உலகில் உள்ள மொத்த நீரில் 97% ____ ஆகும்.

அ) நன்னீ ர்

ஆ) தூயநீர்

இ) உப்புநீர்

ஈ) மாசடைந்த நீர்

விடை: 

இ) உப்புநீர்

Question 2.

பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

அ) ஆவியாதல்

ஆ) ஆவி சுருங்குதல்

இ) மழை பொழிதல்

ஈ) காய்ச்சி வடித்தல்

விடை:

ஈ) காய்ச்சி வடித்தல்



Question 3.

பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?

i) நீராவிப்போக்கு           ii) மழைபொழிதல்

iii) ஆவி சுருங்குதல்      iv) ஆவியாதல்

அ) ii) மற்றும் iii)      ஆ) ii) மற்றும் iv)

இ) i) மற்றும் iv)         ஈ) i) மற்றும் ii)

விடை: இ) i) மற்றும் iv)

Question 4.

நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

அ) பனி ஆறுகள்                    ஆ) நிலத்தடிநீர்

இ) மற்ற நீர் ஆதாரங்கள்     ஈ) மேற்பரப்பு நீர்

விடை: ஆ) நிலத்தடிநீர்

Question 5.

வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில்

அ) வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்

இ) வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

ஈ) அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

விடை:

ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.



II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ______ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.

விடை:

3%

Question 2.

நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ____ என்று பெயர்.

விடை:

ஆவியாதல்

Question 3.

நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _____ கட்டப்படுகிறது.

விடை:

அணை

Question 4.

ஆறுகளில் பாயும் நீரின் அளவு ____ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்

விடை:

மழை


Question 5.

நீர் சுழற்சியினை _____ என்றும் அழைக்கலாம்.

விடை:

ஹைட்ராலிஜிக்கல் சுழற்சி


III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை.

விடை:

தவறு – ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக உள்ளன.

Question 2.

நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.

விடை:

தவறு – கடல் நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் முகத்துவாரம் எனப்படும்.

Question 3.

சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்.

விடை:

தவறு – அனைத்து வெப்ப மூலங்களாலும் ஆவியாதல் நிகழும்.

Question 4.

குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.

விடை: சரி – உறைதலால் புற்களின் மீது பனி உருவாகும்.




Question 5.

கடல்நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.

விடை:

தவறு – கடல்நீரை நேரடியாகப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது.




V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

1. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.

2. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.

3. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.

4. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது..

5. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

6. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.

7. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.

8. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

விடை:

1. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.

2. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

3. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த்திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாகும்.

4. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிற

5. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.

6. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.

7. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.

8. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

VI. ஒப்புமை தருக.

Question 1.

மக்கள் தொகைப் பெருக்கம் : நீர் பற்றாக்குறை :: மறு சுழற்சி : _____

விடை:

நீர் மேலாண்மை


Question 2.

நிலத்தடிநீர் : ____ : மேற்பரப்பு நீர் : ஏரிகள்

விடை:

கிணறு






 


சனி, 27 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                   TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்


அலகு 1 காந்தவியல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்

அ) மரக்கட்டை

ஆ) ஊசி

இ) அழிப்பான்

ஈ) காகிதத் துண்டு

விடை: ஆ) ஊசி

Question 2.

மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் _____

அ) இந்தியர்கள்

ஆ) ஐரோப்பியர்கள்

இ) சீனர்கள்

ஈ) எகிப்தியர்கள்

விடை: இ) சீனர்கள்

Question 3.

தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _____ திசையில்தான் நிற்கும்.

அ) வடக்கு – கிழக்கு       ஆ) தெற்கு – மேற்கு

இ) கிழக்கு – மேற்கு         ஈ) வடக்கு – தெற்கு

விடை:

ஈ) வடக்கு – தெற்கு

Question 4.

காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

அ) பயன்படுத்தப்படுவதால்

ஆ) பதுகாப்பாக வைத்திருப்பதால்

இ) சுத்தியால் தட்டுவதால்

ஈ) சுத்தப்படுத்துவதால்

விடை:

இ) சுத்தியால் தட்டுவதால்

Question 5.

காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி _____ அறிந்து கொள்ளமுடியும்.

அ) வேகத்தை

ஆ) கடந்த தொலைவை

இ) திசையை

ஈ) இயக்கத்தை

விடை:

இ) திசையை


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

செயற்கைக்காந்தங்கள் ____, ____, ______ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.

விடை:

நீள்கோளம், வட்டம், உருளை



Question 2.

காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _____ எனப்படுகின்றன.

விடை:

காந்தப்பொருள்கள்

Question 3.

காகிதம் _____ பொருளல்ல.

விடை: காந்த தன்மை உள்ள

Question 4.

பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய _____ கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.

விடை: காந்தக்கல்

Question 5.

ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் _____ துருவங்கள் இருக்கும்.

விடை: இரு



III. சரியா? தவறா? தவறெனில் சரிசெய்து எழுதுக.

Question 1.

உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு.

விடை:

தவறு.

உருளைவடிவ காந்தத்திற்கு இரு துருவங்கள் உண்டு.

Question 2.

காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.

விடை: சரி.

Question 3.

காந்தத்தினை இரும்புத்துகள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.

விடை: தவறு – துருவப்பகுதிகளில் ஒட்டிக் கொள்ளும்.

Question 4.

காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.

விடை:

தவறு – காந்த ஊசியைப் பயன்படுத்தி வடக்கு – தெற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.

Question 5.

இரப்பர் ஒரு காந்தப்பொருள்.

விடை: தவறு – இரப்பர் ஒரு காந்தப் பொருள் அல்ல.










PDF DOWNLOAD

                   


வியாழன், 25 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                   TNPSC CHANNEL

                    ஆறாம் வகுப்பு அறிவியல்

                      இரண்டாம் பருவம்

அலகு 7 கணினியின் பாகங்கள்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

உள்ளீட்டுக்கருவி அல்லாது எது?

அ) சுட்டி

ஆ) விசைப்பலகை

இ) ஒலிபெருக்கி

ஈ) விரலி

விடை:

இ) ஒலிபெருக்கி

Question 2.

மையச் செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

அ) ஈதர்நெட் (Ethernet)

ஆ) வி.ஜி.ஏ. (VGA)

இ) எச்.டி.எம்.ஐ (HDMI)

ஈ) யு.எஸ்.பி (USB)

விடை: ஆ) வி.ஜி.ஏ. (VGA)


Question 3.

கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?

அ) ஒலிபெருக்கி

ஆ) சுட்டி

இ) திரையகம்

ஈ) அச்சுப்பொறி

விடை:

ஆ) சுட்டி

Question 4.

கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

அ) ஊடலை

ஆ) மின்னலை

இ) வி.ஜி.ஏ. (VGA)

ஈ) யு.எஸ்.பி. (USB)

விடை:

அ) ஊடலை

Question 5.

விரலி ஒரு _____ ஆக பயன்படுகிறது.

அ) வெளியீட்டுக்கருவி

ஆ) உள்ளீட்டுக்கருவி

இ) சேமிப்புக்கருவி

ஈ) இணைப்புக்கருவி

விடை:

இ) சேமிப்புக்கருவி




I. கூடுதல் வினாக்கள்

Question 1.

சரியான விடையைத் தேர்ந்தெடு:1. கீழ்வருவனவற்றுள் எது கணினியின் முக்கிய பாகங்கள் அல்ல?

அ) உள்ளீட்டகம்

ஆ) வெளியீட்டகம்

இ) சுட்டி

ஈ) மையச் செயலகம்

விடை:

இ) சுட்டி

Question 2.

கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு _____ ஐ பயன்படுத்தலாம்.

அ) நகர்த்தும் உருளை

ஆ) இடது பொத்தான்

இ) வலது பொத்தான்

விடை: அ) நகர்த்தும் உருளை

Question 3.

ஒலிவடம் ______ ஐ இணைக்க பயன்படுகிறது.

அ) மையச் செயலகத்துடன் கைப்பேசி

ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை

இ) கணினி திரையை மையச் செயலகத்துடன்

ஈ) கணினியுடன் ஈதர்நெட்டை

விடை: ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை

Question 4.

கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?

அ) யு.எஸ்.பி.

ஆ) மின் இணைப்பு வடம்

இ) எச்.டி.எம்.ஐ

ஈ) அருகலை

விடை:

ஈ) அருகலை

Question 5.

நுண்கணினியை _____ என அழைக்கிறோம்.

அ) மேசைக்கணினி

ஆ) தனியாள் கணினி

இ) மடிக்கணினி

ஈ) பலகைக் கணினி

விடை:

ஆ) தனியாள் கணினி


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

____, _____, கணினியில் உள்ளீடு செய்வதற்கு விசைப்பலகையே ஆதாரமாகும்.

விடை:

எண்ணையும், எழுத்தையும்

Question 2.

கணினியின் எல்லாப்பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப் படுத்துவது _____ ஆகும்.

விடை:

கட்டுப்பாட்டகம்

Question 3.

கணினியில் உள்ள நினைவகத்தை _____ என பிரிக்கலாம்.

விடை: இரண்டாக

Question 4.

தரவுகளை ______ என்ற அலகால் அளக்கலாம்.

விடை: பிட்


       


PDF DOWNLOAD

புதன், 24 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

         இரண்டாம் பருவம்


 இயல் 6 மனித உறுப்பு மண்டலங்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருட்கள் _______

அ) ஆக்சிஜன்

ஆ) சத்துப் பொருட்கள்

இ) ஹார்மோன்கள்

ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

Question 2.

மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு ______

அ) இரைப்பை        ஆ) மண்ணீ ரல்

இ) இதயம்                ஈ) நுரையீரல்கள்

விடை: ஈ) நுரையீரல்கள்

Question 3.

நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது.                                                                               அ) தசைச் சுருக்கம்

ஆ) சுவாசம்

இ) செரிமானம்

ஈ) கழிவுநீக்கம்

விடை:

இ) செரிமானம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.

ஒரு குழுவான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குவது _____ மண்டலம் ஆகும்.

விடை:

உறுப்பு

Question 2.

மனித மூளையை பாதுகாக்கும் எலும்புச் சட்டகத்தின் பெயர் _____ ஆகும்.

விடை:

மண்டையோடு

Question 3.

மனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைக்கு ______ என்று பெயர்.

விடை:

கழிவு நீக்கம்

Question 4.

மனித உடலிலுள்ள மிகப்பெரிய உணர் உறுப்பு _____ ஆகும்.

விடை:

தோல்

Question 5.

நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்ற வேதிப்பொருட்களுக்கு ______ என்று பெயர்.

விடை:

ஹார்மோன்கள்



III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

இரத்தம் எலும்புகளில் உருவாகின்றது.

விடை:

தவறு – இரத்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றது.

Question 2.

இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.

விடை:

தவறு – இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை கடத்துகிறது.

Question 3.

உணவுக் குழலுக்கு இன்னொரு பெயர் உணவுப்பாதை.

விடை:

தவறு – உணவுக் குழாயின் இன்னொரு பெயர் உணவுப் பாதை.

Question 4.

இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள மிகச்சிறிய நுண்குழலுக்கு இரத்தக் குழாய்கள் என்று பெயர்.

விடை:

சரி

Question 5.

மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம் ஆகும்.

விடை:

சரி.



V. கீழுள்ளவற்றை முறைப்படுத்தி எழுதுக.

Question 1.

இரைப்பை → பெருங்குடல் → உணவுக்குழல் → தொண்டை → வாய் → சிறுகுடல் → மலக்குடல் → மலவாய்

விடை:

வாய் → தொண்டை → உணவுக்குழல் → இரைப்பை → சிறுகுடல் → பெருங்குடல் → மலக்குடல் → மலவாய்

Question 2.

சிறுநீர்ப் புறவழி → சிறுநீர்நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீரகம்

விடை:

சிறுநீரகம் → சிறுநீர் நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீர்ப் புறவழி





   

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                              TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

         இரண்டாம் பருவம்

 அலகு 5 செல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

அ) சென்டி மீட்டர்             ஆ) மில்லி மீட்டர்

இ) மைக்ரோ மீட்டர்          ஈ) மீட்டர்

விடை: இ) மைக்ரோ மீட்டர்

Question 2.

நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல்.

அ) தாவர செல்

ஆ) விலங்கு செல்

இ) நரம்பு செல்

ஈ) பாக்டீரியா

விடை:  ஈ) பாக்டீரியா

Question 3.

யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது.

அ) செல் சுவர்

ஆ) நியூக்ளியஸ்

இ) நுண்குமிழ்கள்

ஈ) பசுங்கணிகம்

விடை:

ஆ) நியூக்ளியஸ்

Question 4.

கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

அ) ஈஸ்ட்

ஆ) அமீபா

இ) ஸ்பைரோ கைரா

ஈ) பாக்டீரியா

விடை:

இ) ஸ்பைரோகைரா

Question 5.

யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்.

அ) செல்சுவர்

ஆ) சைட்டோபிளாசம்

இ) உட்கரு (நியூக்ளியஸ்)

ஈ) நுண்குமிழ்கள்

விடை:

ஆ) சைட்டோபிளாசம்


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

செல்களைக் காண உதவும் உபகரணம் ______

விடை:

மைக்ரோஸ்கோப் (அ)

நுண்ணோக்கி

Question 2.

நான் செல்லில் உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறேன் நான் யார்? ______

விடை:

பசுங்கணிகம்


Question 3.

நான் ஒரு காவல்காரன் நான் செல்லினுள் யாரையும், உள்ளேயும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்?____

விடை:

செல் சவ்வு

Question 4.

செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _____

விடை:

ராபர்ட் ஹூக்

Question 5.

நெருப்புக் கோழியின் முட்டை ____ தனி செல் ஆகும்.

விடை:

மிகப் பெரிய


III. சரியா? (அ) தவறா? என கூறுக. தவறாக இருப்பின் சரியான விடையை எழுதவும்.

Question 1.

உயிரினங்களின் மிகச் சிறிய அலகு’ செல்.

விடை: சரி

Question 2.

மிக நீளமான செல் நரம்பு செல்.

விடை: சரி

Question 3.

பூமியில் முதன் முதலாக உருவான செல் புரோகோயோட்டிக் செல் ஆகும்.

விடை: சரி

Question 4.

தாவரத்திலும், விலங்கிலும் உள்ள நுண்ணுறுப்புகள், செல்களால் ஆனவை.

விடை:

தவறு

சரியான விடை : நுண்ணுறுப்புகள் – செல்லினுள் காணப்படுகின்றன.

Question 5.

ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து தான் புதிய செல் உருவாகின்றன.

விடை:

சரி


V. சரியான முறையில் வரிசைப்படுத்துக.

Question 1.

யானை, பசு, பாக்டீரியா, மாமரம், ரோஜாச் செடி

விடை:

பாக்டீரியா , ரோஜாச் செடி, மாமரம், பசு, யானை 

Question 2.

கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை, பூச்சிகளின் முட்டை.

விடை:

பூச்சிகளின் முட்டை, கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை.





VI. ஒப்புமை தருக.

Question 1.

 புரோகேரியோட்: பாக்டீரியா :: யூகேரியோட் : _____

விடை:

தாவர செல்கள் / விலங்கு செல்கள்

Question 2.

ஸ்பைரோகைரா: தாவர செல்:: அமீபா : _____

விடை:

விலங்கு செல்

Question 3.

உணவு உற்பத்தியாளர்: பசுங்கணிகம் :: ஆற்றல் மையம் : _____

விடை:

மைட்டோகான்டிரியா



      

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                  TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

         இரண்டாம் பருவம்

 அலகு 4 காற்று

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

காற்றில் நைட்ரஜனின் சதவீதம்

அ) 78%         ஆ) 21%

இ) 0.03%        ஈ) 1%

விடை: அ) 78%

Question 2.

தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் ____ ஆகும்.

அ) இலைத்துளை

ஆ) பச்சையம்

இ) இலைகள்

ஈ) மலர்கள்

விடை: அ) இலைத்துளை

Question 3.

காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _____ ஆகும்.

அ) நைட்ரஜன்

ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு

இ) ஆக்சிஜன்

ஈ) நீராவி

விடை:

இ) ஆக்சிஜன்

Question 4.

உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் ______

அ) உணவிற்கு நிறம் அளிக்கிறது.

ஆ) உணவிற்கு சுவை அளிக்கிறது.

இ) உணவிற்கு புரதத்தையும், தாது உப்புகளையும் அளிக்கிறது.

ஈ) உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

விடை:

ஈ) உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது

Question 5.

காற்றில் உள்ள ____ மற்றும் _____ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.

i) நைட்ரஜன்

ii) கார்பன்-டை-ஆக்ஸைடு

iii) மந்த வாயுக்கள்

iv) ஆக்சிஜன்

அ) i மற்றும் ii

ஆ) i மற்றும் iii

இ) ii மற்றும் iv

ஈ) i மற்றும் iv

விடை: ஈ) i மற்றும் iv


II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.

காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி ______ ஆகும்.

விடை:

ஆக்சிஜன் (O2)

Question 2.

ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு _____ ஆகும்.

விடை:

ஆக்சிஜன் (O2)

Question 3.

சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் 

வாயு _______

விடை:

ஆக்சிஜன்(O2)

Question 4.

இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் _____ காணமுடியும்.

விடை:

தூசுப் பொருட்களைக்

Question 5.

_____ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல ______ மாற்றும்.

விடை:

கார்பன்-டை-ஆக்ஸைடு(CO2)



III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளது.

விடை:

தவறு. உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு ஆக்சிஜன் உள்ளது.

Question 2.

புவி வெப்பமயமாதலை மரங்களை நடுவதன் மூலம் குறைக்கலாம்.

விடை: சரி

Question 3.

காற்றின் இயைபு எப்பொழுதும் சமமான விகிதத்தில் இருக்கும்.

விடை: தவறு.

காற்றின் இயைபு இடத்திற்கு இடமும், காலநிலையைப் பொருத்தும் மாறுபாடு அடைகிறது.

Question 4.

திமிங்கலம் ஆக்சிஜனை சுவாசிக்க நீரின் மேற்பரப்பிற்கு வரும்.

விடை: சரி

Question 5.

காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் சுவாசம் மூலமும், விலங்குகளின் ஒளிச்சேர்க்கை மூலமும் சமன் செய்யப்படுகிறது.

விடை: தவறு

காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலமும், விலங்குகளின் சுவாசம் மூலமும் சமன் செய்யப்படுகிறது.




V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

1. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.

2. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.

3. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.

4. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில், பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலதிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.

6. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.




விடை:

1. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.

2. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.

3. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

4. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.

5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.

6. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலத் திலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

VI. ஒப்புமை தருக.

Question 1.

ஒளிச்சேர்க்கை : _____ :: சுவாசம் : ஆக்சிஜன்.

விடை:

கார்பன்-டை-ஆக்ஸைடு

Question 2.

காற்றின் 78% : எரிதலுக்கு துணை புரிவதில்லை :: _____

____ : எரிதலுக்கு துணை புரிகிறது.

விடை:

காற்றின் 21%






ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                 TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

         இரண்டாம் பருவம்

 அலகு 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

 I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 

Question 1.

பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம்.

அ) இட மாற்றம்

ஆ) நிற மாற்றம்

இ) நிலை மாற்றம்

ஈ) இயைபு மாற்றம்

விடை: இ) நிலை மாற்றம்

Question 2.

ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ———— ஆகும்.

அ) வேதியியல் மாற்றம்

ஆ) விரும்பத்தகாத மாற்றம்

இ) மீளா மாற்றம்

ஈ) இயற்பியல் மாற்றம்

விடை: ஈ) இயற்பியல் மாற்றம்

Question 3.

பால் தயிராக மாறுவது ஒரு _____ ஆகும்.

அ) மீள் மாற்றம்

ஆ) வேகமான மாற்றம்

இ) மீளா மாற்றம்

ஈ) விரும்பத்தகாத மாற்றம்

விடை:

இ) மீளா மாற்றம்

Question 4.

கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?

அ) துருப்பிடித்தல்

ஆ) பருவநிலை மாற்றம்

இ) நில அதிர்வு

ஈ) வெள்ளப்பெருக்கு

விடை:

ஆ) பருவநிலை மாற்றம்

Question 5.

காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு ஆகும்.

அ) மீள் மாற்றம்

ஆ) வேகமான மாற்றம்

இ) இயற்கையான மாற்றம்

ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

விடை:

ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்



II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ______ மாற்றம். (மீள் / மீளா)

விடை: மீள்

Question 2.

முட்டையை வேகவைக்கும் போது _____ மாற்றம் நிகழ்கிறது. (மீள் / மீளா)

விடை:

மீளா

Question 3.

நமக்கு ஆபத்தை விளைவிப்பவை ______ மாற்றங்கள். (விரும்பத்தக்க / விரும்பத்தகாத)

விடை:

விரும்பத்தகாத

Question 4.

தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது _____ (இயற்கையான / மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்) ஆகும்.

விடை:

இயற்கையான

Question 5.

பட்டாசு வெடித்தல் என்பது ஒரு ____ மாற்றம்; விதை முளைத்தல் ஒரு ____ மாற்றம். (மெதுவான / வேகமான)

விடை:

வேகமான, மெதுவான


III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

குழந்தைகளுக்குப் பற்கள் முளைப்பது மெதுவான மாற்றம்.

விடை: சரி

Question 2.

தீக்குச்சி எரிவது ஒரு மீள் மாற்றம்.

விடை:

தவறு

சரியா விடை : தீக்குச்சி எரிவது மீளா மாற்றம்.


Question 3.

அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு மனிதனால் தவறு. ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.

விடை: தவறு

சரியான விடை : அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு இயற்கையான மாற்றம்.


Question 4.

உணவு செரித்தல் என்பது ஓர் இயற்பியல் மாற்றம்.

விடை: தவறு.

சரியான விடை : உணவு செரித்தல் என்பது ஓர் வேதியியல் மாற்றம்.


Question 5.

உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ஒரு. கரைபொருள் ஆகும்.

விடை : தவறு

சரியான விடை : உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ‘ஒரு கரைப்பான் ஆகும்.








IV. ஒப்புமை தருக.

Question 1.

பால் தயிராதல்: மீளா மாற்றம் :: மேகம் உருவாதல் :- _____ மாற்றம்.

விடை: மீள்

Question 2.

ஒளிச்சேர்க்கை : _____ மாற்றம் :: நிலக்கரி எரிதல் : மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.

விடை: இயற்கையான

Question 3.

குளுக்கோஸ் கரைதல் : மீள் மாற்றம் :: உணவு செரித்தல் : ____ மாற்றம்

விடை: மீளா

Question 4.

உணவு சமைத்தல் : விரும்பத்தக்க மாற்றம் :: உணவு கெட்டுப்போதல் : _____ மாற்றம்.

விடை: விரும்பத்தகாத

Question 5.

தீக்குச்சி எரிதல்: ____ மாற்றம் :: பூமி சுற்றுதல் : மெதுவான மாற்றம்.

விடை:

வேகமான





V. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கான காரணத்தைக் கூறுக.

Question 1.

குழந்தை வளருதல், கண் சிமிட்டுதல், துருப்பிடித்தல், விதை முளைத்தல்.

விடை: கண் சிமிட்டுதல் (வேகமான மாற்றம்)

Question 2.

மின் விளக்கு ஒளிர்தல், மெழுகுவர்த்தி எரிதல், காபி குவளை உடைதல், பால் தயிராதல்.

விடை:

பால் தயிராதல் (வேதியியல் மாற்றம்)

Question 3.

முட்டை அழுகுதல், நீராவி குளிர்தல், முடிவெட்டுதல், காய் கனியாதல்.

விடை:

முடி வெட்டுதல் (மனிதனால் ஏற்படுத்தக்கூடிய மாற்றம்)

Question 4.

பலூன் ஊதுதல், பலூன் வெடித்தல், சுவற்றின் வண்ணம் மங்குதல், மண்ணெண்ணெய் எரிதல்.

விடை:

மண்ணெண்ணெய் எரிதல் (வேதியியல் மாற்றம்)




       PDF DOWNLOAD

சனி, 20 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

       இரண்டாம் பருவம்

 அலகு 2 மின்னியல்

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்.

அ) மின் விசிறி

ஆ) சூரிய மின்கலன்

இ) மின்கலன்

ஈ) தொலைக்காட்சி

விடை:

இ) மின்கலன்

Question 2.

மின்சாரம் தயாரிக்கப்படும் இடம் _____

அ) மின்மாற்றி

ஆ) மின்உற்பத்தி நிலையம்

இ) மின்சாரக்கம்பி

ஈ) தொலைக்காட்சி

விடை:

ஆ) மின்உற்பத்தி நிலையம்





Question 3.

மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு.


விடை: ஆ)

 


Question 4.

கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?



விடை: ஈ)

  

Question 5.

கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

அ) வெள்ளி

ஆ) மரம்

இ) அழிப்பான்

ஈ) நெகிழி

விடை:

அ) வெள்ளி


II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

____ பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.

விடை:

மின்கடத்தி

Question 2.

ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம் ____ எனப்படும்.

விடை:

மின்னோட்டம்

Question 3.

_____ என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.

விடை:

சாவி

Question 4.

மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு _____ முனையைக் குறிக்கும்.

விடை:

நேர்

Question 5.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு ஆகும் _____

விடை:

மின்கல அடுக்கு


III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

பக்க இணைப்பு மின்சுற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட மின்னோட்டப் பாதைகள் உண்டு.

விடை:

சரி.

Question 2.

இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.

விடை:

தவறு. – இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் நேர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.

Question 3.

சாவி என்பது மின்சுற்றினைத் திறக்க அல்லது மூடப் பயன்படும் மின்சாதனம் ஆகும்.

விடை:

சரி.


Question 4.

தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.

விடை:

தவறு – தூய நீர் என்பது ஒரு மின்கடத்தாப்பொருள் ஆகும்.

Question 5.

துணை மின்கலன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

விடை:

தவறு – துணை மின்கலன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.






 


   




    


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

       இரண்டாம் பருவம்

 அலகு 1 வெப்பம் 

I சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்

அ) வேகமாக நகரத் தொடங்கும்

ஆ) ஆற்றலை இழக்கும்

இ) கடினமாக மாறும்

ஈ) லேசாக மாறும்

விடை: அ) வேகமாக நகரத் தொடங்கும்

Question 2.

வெப்பத்தின் அலகு …………

அ) நியூட்டன்        ஆ) ஜூல்

இ) வோல்ட்.           ஈ) செல்சியஸ்

விடை: ஆ) ஜூல்

Question 3.

30° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை.

அ) 80° C

ஆ) 50° Cக்கு மேல் 80Cக்குள்

இ) 20° C

ஈ) ஏறக்குறைய 40° C

விடை:

ஈ) ஏறக்குறைய 40° C

Question 4.

50° C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 50° C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும் பொழுது, வெப்பமானது.

அ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்

ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.

இ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்

ஈ) இரண்டின் வெப்பநிலையும் உயரும்

விடை:

ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்கோ மாறாது.



II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.

வெப்பம் பொருளிலிருந்து ……. பொருளுக்கு பரவும்.

விடை:

வெப்பநிலை அதிகமான, குறைவான

Question 2.

பொருளின் சூடான நிலையானது ……… கொண்டு கணக்கிடப்படுகிறது.

விடை:

வெப்பநிலை

Question 3.

வெப்பநிலையின் SI அலகு ………..

விடை:

கெல்வின்

Question 4.

வெப்பப்படுத்தும் பொழுது திடப்பொருள் ………… மற்றும் குளிர்விக்கும் பொழுது ………..

விடை:

விரிவடையும், சுருங்கும்

Question 5.

இரண்டு பொருட்களுக்குக்கிடையே வெப்பப்பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ………. நிலையில் உள்ளன.

விடை: வெப்பச் சமநிலையில்


III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல். இது வெப்பநிலை அதிகமான பொருளிலிருந்து வெப்பநிலை குறைவான பொருளிற்கு பரவும்.

விடை: சரி.

Question 2.

நீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பொழுது, நீராவி உருவாகும்.

விடை :  தவறு.

சரியான விடை : வெப்பம் உட்கவரும் போது நீராவி உருவாகும்.




Question 3.

வெப்பவிரிவு என்பது. பொதுவாக தீங்கானது.

விடை: தவறு.

சரியான விடை : வெப்ப விரிவு என்பது பொதுவாக தீங்கானது அல்ல.


Question 4.

போரோசிலிகேட் கண்ணாடியானது வெப்பப்படுத்தும்பொழுது அதிகம் விரிவடையாது.

விடை:

சரி.


Question 5.

வெப்பம் மற்றும் வெப்பநிலை இரண்டும் ஒரே அலகினைப் பெற்றுள்ளன.

விடை: தவறு.

சரியான விடை : இரண்டும் வெவ்வேறு அலகினைப் பெற்றுள்ளன.




IV. ஒப்புமை தருக.

Question 1.

வெப்பம் : ஜூல் :: வெப்பநிலை : ______

விடை:

கெல்வின்

Question 2.

பனிக்கட்டி : 0° C :: கொதி நீர் : _____

விடை:

100° C

Question 3.

மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல் : வெப்பம் :: சராசரி இயக்க ஆற்றல் : _____

விடை:

வெப்பநிலை







PDF DOWNLOAD

    


வியாழன், 18 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

 TNPSC CHANNEL

    ஆறாம் வகுப்பு அறிவியல்

முதல் பருவம்

 அலகு 7 கணினி ஓர் அறிமுகம் 


I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ) மார்ட்டீன் லூதர் கிங்

ஆ) கிரகாம்பெல்

இ) சார்லி சாப்ளின்

ஈ) சார்லஸ் பாப்பேஜ்

விடை:

இ) சார்லஸ் பாப்பேஜ்

Question 2.

கீழ்க்கண்டவற்றில் கணினியின் மறுவடிவம் எது?

அ) கரும்பலகை        ஆ) கைப்பேசி

இ) வானொலி       ஈ) புத்தகம்

விடை:

ஆ) கைப்பேசி

Question 3.

முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

அ) 1980

ஆ) 1947

இ) 1946

ஈ) 1985

விடை:

இ) 1946

Question 4.

கணினியின் முதல் நிரலர் யார்?

அ) லேடி வில்லிங்டன்

ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்

இ) மேரி க்யூரி

ஈ) மேரிக்கோம்

விடை:

ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்

Question 5.

பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

அ) கணிப்பான்

ஆ) அபாகஸ்

இ) மின்அட்டை

ஈ) மடிக்கணினி

விடை:

இ) மின் அட்டை


II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.

தரவு என்பது……. விவரங்கள் ஆகும்.

விடை:

முறைப்படுத்த வேண்டிய

Question 2.

உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி ………..

விடை:

மின்னணு எண் ஒருங்கிணைப்பு மற்றும் கணினி


Question 3.

தகவல் என்பது ……. விவரங்கள் ஆகும்.

விடை:

தேவைக்கேற்ப முறைப்படுத்தப்பட்ட

Question 4.

ஐந்தாம் தலைமுறை ………… நுண்ணறிவு கொண்டது.

விடை:

செயற்கை

Question 5.

குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி ……..

விடை:

அனலாக் கம்ப்யூட்டர்


III. கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா? தவறா? எனக் கூறுக :

Question 1.

கணினி ஒரு மின்னணு இயந்திரம்.

விடை:

சரி

Question 2.

கணினியைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்.

விடை:

தவறு

Question 3.

கணினி, கணக்கீடுகளை மிக விரைவாகச் செய்யும்.

விடை:

சரி



      


6th new syllabus in scinece

 TNPSC CHANNEL

 ஆறாம் வகுப்பு அறிவியல்

முதல் பருவம்

அலகு 6 உடல் நலமும் சுகாதாரமும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.

நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ……… தேவைப்படுகிறது.

அ) கார்போஹைட்ரேட்

ஆ) கொழுப்பு

இ) புரதம்

ஈ) நீர்

விடை: இ) புரதம்

Question 2.

ஸ்கர்வி …….. குறைபாட்டினால் உண்டாகிறது.

அ) வைட்டமின் A

ஆ) வைட்டமின் B

இ வைட்டமின் C

ஈ) வைட்டமின் D

விடை: இ) வைட்டமின் C

Question 3.

கால்சியம் _____ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.

அ) கார்போஹைட்ரேட்         ஆ) கொழுப்பு

இ) புரதம்                                       ஈ) தாது உப்புகள்

விடை:

ஈ) தாது உப்புகள்

Question 4.

நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும், ஏனெனில்

அ) அவற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

ஆ) அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.

இ அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.

ஈ) அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.

விடை:

இ) அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.

Question 5.

பாக்டீரியா, ஒரு சிறிய ———– நுண்ணுயிரி

அ) புரோகேரியோட்டிக்

ஆ) யூகேரியோட்டிக்

இ) புரோட்டோசோவா

ஈ) செல்லற்ற

விடை:

அ) புரோகேரியோட்டிக்


II. சரியா? தவறா?

Question 1.

நம் உணவில் மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

விடை:

தவறு

Question 2.

நம் உடலில் ஆற்றலை சேமித்து வைக்க கொழுப்பு உதவுகிறது.

விடை:

சரி

Question 3.

3. அனைத்து 

பாக்டீரியாக்களும் கசையிழைகளைப் பெற்றுள்ளன

விடை: தவறு (அனைத்து பாக்டீரியாக்களும் செல் சவ்வுகளற்ற நுண்ணுறுப்புகளை பெற்றுள்ளன.)

Question 4.

ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து உதவுகிறது.

விடை: சரி

Question 5.

ஓம்புயிரியின் உடலுக்கு வெளியேயும் வைரஸ்களால் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலும்

விடை: தவறு (ஓம்புயிரியின் உடலுக்குள் நுழைந்து வைரஸ்களால் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலும்.)

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.

ஊட்டச்சத்து குறைபாடு _____ நோய்களுக்கு வழிவகுக்கிறது.

விடை:

குறைபாட்டு

Question 2.

பெரியவர்களில், அயோடின் சத்துக்குறைபாடு ______நோயை ஏற்படுத்துகிறது.

விடை: காய்ட்டர் (முன்கழுத்து கழலை)

Question 3.

வைட்டமின் D குறைபாடு ______ நோயை ஏற்படுத்துகிறது.

விடை: ரிக்கெட்ஸ்


Question 4.

டைபாய்டு நோய், ______ மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது.

விடை:

உணவு

Question 5.

குளிர்காய்ச்சல் (இன்புளுயன்சா) ______ நுண்ணுயிரியால் ஏற்படுகிறது

விடை:

வைரஸ்









விடை : ஆ, ஈ, உ, அ, இ


           

          

pdf download



புதன், 17 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

 TNPSC CHANNEL

  ஆறாம் வகுப்பு அறிவியல்

முதல் பருவம்

அலகு 5 விலங்குலகம்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உயிருள்ள  பொருள்கள் அல்லது 

உயிரினங்களைப் பற்றி படிப்பது

அ. உளவியல்  ஆ. உயிரியல்

இ. விலங்கியல்   ஈ. தாவரவியல்

விடை : ஆ. உயிரியல்


2. கீழ்க்காணும் எவற்றுள்  எவை உயிருள்ளவைகளின் 

பண்புகளாகக் கருதப்படுகின்றன?

i. சுவாசம்    ii. இனப்பெருக்கம்

iii. தகவமைப்பு  iv. கழிவு நீக்கம்

 சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

அ. i, ii மற்றும் iv மட்டும்

ஆ. i, ii மட்டும்

இ. ii மற்றும் iv மட்டும்

ஈ. i, iv, ii மற்றும் iii

விடை : ஈ. i, iv, ii மற்றும் iii





3. பல்லிகள் எதன்மூலம் சுவாசிக்கின்றன?

அ. தோல்

 ஆ. செவுள்கள்

இ. நுரையீரல்கள்

 ஈ. சுவாச நுண்குழல்

விடை : இ. நுரையீரல்கள்



4. அனைத்து விலங்குகளுக்கும் தேவையானது

அ. உணவு மற்றும் நீர்

ஆ. நீர் மட்டும்

இ. காற்று, உணவு மற்றும் நீர்

ஈ. உணவு மட்டும்

விடை : இ. காற்று, உணவு மற்றும் நீர்





5. எந்த விலங்கு செவுள்கள் எனப்படும் சுவாச

உறுப்பைப் பெற்றுள்ளது?

அ. மண்புழு

ஆ. குள்ளநரி

இ. மீன் 

ஈ. தவளை

விடை : இ. மீன்




6. ஒரு வாழிடத்தின் உயிரிக்காரணிகளை

மட்டும் குறிக்கும் தொகுப்பினைத் தேர்ந்தெடு.

அ. புலி, மான், புல், மண்

ஆ. பாறைகள், மண், தாவரங்கள், காற்று

இ. மண், ஆமை, நண்டு, பாறைகள்

ஈ. நீர்வாழ்த்தாவரம், மீன், தவளை, பூச்சிகள்

விடை : ஈ. நீர்வாழ்த்தாவரம், மீன், தவளை, பூச்சிகள்



7. கீழ்கண்டவற்றுள் எதை வாழிடமாகக் கூற முடியாது?

அ. ஒட்டகங்களுடன் கூடிய பாலைவனம்

ஆ. மீன்கள் மற்றும் நத்தைகளுடன் கூடிய குளம்

இ. மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்

ஈ. காட்டு விலங்குகளுடன் கூடிய காடு

விடை : இ. மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்



8. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி 

செய்வது எது?

அ. கனமான மற்றும் வலிமையான எலும்புகள்

ஆ. மென்மையான மற்றும் தடித்த எலும்புகள் 

இ. உள்ளீடற்ற மற்றும்  இலேசான எலும்புகள் 

ஈ. தட்டையான மற்றும் தடித்த எலும்புகள் 

விடை : இ. உள்ளீடற்ற மற்றும்  இலேசான  எலும்புகள்

 

9. பாரமீசியம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வதற்கு உதவுவது

அ. போலிக்கால்கள் 

ஆ. கசையிழை

இ. பாதம்

ஈ. குறு இழை

விடை : ஈ. குறு இழை




10. கங்காரு எலி வசிப்பது 

அ. நீர் வாழிடம்

ஆ. பாலைவன வாழிடம்

இ. புல்வெளி வாழிடம் 

ஈ. மலைப்பிரதேச வாழிடம

விடை : ஆ. பாலைவன வாழிடம்


II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.

வெப்பமண்டல மழைக் காடுகள். புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை …… என்று அழைக்கிறோம்.

விடை:

வாழிடம்

Question 2.

ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் …….. என்று அழைக்கப்படுகின்றன.

விடை:

ஒரு செல் உயிரினம்

Question 3.

மீனின் சுவாச உறுப்பு ………… ஆகும்

விடை:

செவுள்கள்

Question 4.

கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ………

விடை:

நடக்கின்றன

Question 5.

ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் ……… சேமிக்கின்றன.

விடை:

கொழுப்பு


III. சரியா அல்லது தவறா? தவறாக இருப்பின் சரி செய்து எழுதுக.

Question 1.

ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக் கூடிய இடம் வாழிடம் எனப்படும்.

விடை:

சரி

Question 2.

புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

விடை:

தவறு.

புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது.

Question 3.

ஒரு செல் உயிரியான அமீபா, பொய்க்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.

விடை:

சரி

Question 4.

பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.

விடை:

தவறு

ஒரே சமயத்தில் இரண்டு கண்கள் மூலமும் இரு வெவ்வேறு பொருட்களை பறவைகளால் காண முடியும். இதற்கு இருவிழிப் பார்வை என்று பெயர்.


Question 5.

பாரமீசியம் ஒரு பலசெல் உயிரி.

விடை:

தவறு.

பார்மீசியம் ஒரு ஒருசெல் உயிரி .







IV. தகுந்த வார்த்தைகளைக் கொண்டு கீழ்க்கண்டவற்றை நிரப்புக.

Question 1.

நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை ……. என்று அழைக்கலாம்.

விடை:

வாழிடம்

Question 2.

செல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை ……….மற்றும்……… என வகைப்படுத்தலாம்.

விடை:

ஒரு செல் மற்றும் பல செல் உயிரினம்

Question 3.

பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு 

___________ க்கு உதவுகிறது.

விடை:

கட்டுப்படுத்த

Question 4.

அமீபா………. உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது,

விடை:

பொய்க்கால்கள்


pdf download



வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

PC exam model question paper

 





TNUSRB
Tamil Nadu Uniformed Services Recruitment Board

 TNUSRB has allotted 70 marks in total for Part A and Part B of the TNUSRB SI exam for the open category candidates. The candidates will be given 2 hours 30 minutes to complete the exam. Part A of the question paper will consist of the questions from General Knowledge. There are 80 questions of 40 marks in part A.

TNUSRB திறந்த பிரிவு தேர்வர்களுக்கான TNUSRB SI தேர்வின் பகுதி A மற்றும் பகுதி B க்கு மொத்தம் 70 மதிப்பெண்களை TNUSRB ஒதுக்கியுள்ளது.  தேர்வர்களுக்கு தேர்வை முடிக்க 2 மணி நேரம் 30 நிமிடங்கள் வழங்கப்படும்.  வினாத்தாளின் பகுதி A பொது அறிவில் இருந்து கேள்விகளைக் கொண்டிருக்கும்.  பகுதி A இல் 40 மதிப்பெண்கள் கொண்ட 80 கேள்விகள் உள்ளன.


PC EXAM DETAILS



✅ PC Exam New Syllabus - PDF DOWNLOAD

✅ பொதுத்தமிழ் மாதிரி வினா 

PDF DOWNLOAD



மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

PC exam model question paper





TNUSRB
Tamil Nadu Uniformed Services Recruitment Board

 TNUSRB has allotted 70 marks in total for Part A and Part B of the TNUSRB SI exam for the open category candidates. The candidates will be given 2 hours 30 minutes to complete the exam. Part A of the question paper will consist of the questions from General Knowledge. There are 80 questions of 40 marks in part A.

TNUSRB திறந்த பிரிவு தேர்வர்களுக்கான TNUSRB SI தேர்வின் பகுதி A மற்றும் பகுதி B க்கு மொத்தம் 70 மதிப்பெண்களை TNUSRB ஒதுக்கியுள்ளது.  தேர்வர்களுக்கு தேர்வை முடிக்க 2 மணி நேரம் 30 நிமிடங்கள் வழங்கப்படும்.  வினாத்தாளின் பகுதி A பொது அறிவில் இருந்து கேள்விகளைக் கொண்டிருக்கும்.  பகுதி A இல் 40 மதிப்பெண்கள் கொண்ட 80 கேள்விகள் உள்ளன.


PC EXAM DETAILS



✅ PC Exam New Syllabus - PDF DOWNLOAD

✅ GK Model Question Pape - 

PDF DOWNLOAD




மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்

புதன், 10 ஆகஸ்ட், 2022

pc exam psychology model question paper




TNUSRB
Tamil Nadu Uniformed Services Recruitment Board

 TNUSRB has allotted 70 marks in total for Part A and Part B of the TNUSRB SI exam for the open category candidates. The candidates will be given 2 hours 30 minutes to complete the exam. Part A of the question paper will consist of the questions from General Knowledge. There are 80 questions of 40 marks in part A.

TNUSRB திறந்த பிரிவு தேர்வர்களுக்கான TNUSRB SI தேர்வின் பகுதி A மற்றும் பகுதி B க்கு மொத்தம் 70 மதிப்பெண்களை TNUSRB ஒதுக்கியுள்ளது.  தேர்வர்களுக்கு தேர்வை முடிக்க 2 மணி நேரம் 30 நிமிடங்கள் வழங்கப்படும்.  வினாத்தாளின் பகுதி A பொது அறிவில் இருந்து கேள்விகளைக் கொண்டிருக்கும்.  பகுதி A இல் 40 மதிப்பெண்கள் கொண்ட 80 கேள்விகள் உள்ளன.


PC EXAM DETAILS



✅ PC Exam New Syllabus - PDF DOWNLOAD

✅ Psychology Model Question Pape - 

PDF DOWNLOAD

✅ மீ.பொ.ம,  தனிவட்டி விளக்கம் - 

VIDEO & PDF DOWNLOAD



மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...